விழித்திருந்த இரவுவேளையில்
என்னில் உலவும் உன்னில் தேடுகின்றேன் என்னை
எனை தொலைத்தகாலம் நினைவில்லை
உறக்கம் தொலைத்த இரவுகளில் மறந்துவிட்டேன்
நினைவுகள் மறந்து யாதுமற்ற மனவெளியில் நான்
உணர்வுகளின் உயிர்வளியில் உலவுகின்றேன் உன்னுள்
மீண்டு மீண்டும் உயிர்த்தெழும் என் ஜீவனே
என்றும் உணர்வுகளின் யாதுமற்ற வரையறையாய்
மீண்டு மீண்டும் இரவு வேளையில் ....
Bookmarks