உனது கண்கள் உதிர்க்கும்
செம்பவழ*ப்பூவை
பொருக்கி வைத்தேன்
எனது உள்ளங்கையில்
அது பனித்துளியென உருகி
நதியென மினுமினுப்பாய் ரேகைகோடுகளில் பாய்ந்து
வழிகிறது
சலனம் நிறைய என் இதயத்தின் கடல்
வேட்கையோடு ஒரு பேரலையென*
உனை நோக்கி புரள
உனது கால்சுவட்டின்
கட்டைவிரல் குழியில் அதனை அடைத்து
ஒரு சூரியனை அதில் மிதக்கவிடுகிறாய்
அது பறவையென பரிணமித்து
முக்குளித்து மீன் கவ்வி
ஒரு இறகு சிலிர்ப்பில்
என் மொத்தக்கடலையும் சிதறடித்து
பறக்கிறது தன் திசை நோக்கி
சிதறிய கடல் உன் கால்சுவட்டின்
மற்றப்பள்ளங்களிலும் பரவி
உறைகிறது ஒரு பனிப்பாறையாய்
Bookmarks