பூவினில் முள் கண்டு மிரளும் என்னில்
நகைக்கும் உன் பூவிதழில் கண்டேன் ...
அரியின் கண் கண்டு மரையாய் என்னில்
துளிரும் உன் துணிவில் கண்டேன்..
கரியின் மதம் கண்டு திகைக்கும் என்னில்
ஒளிரும் உன் அறிவினில் கண்டேன் ..
பரியொன்று வழி கண்டு பிரிகின்ற வேளையில்
பொழியும் மழையென நம் கண்ணீரில் ..
Bookmarks