Results 1 to 7 of 7

Thread: ஒரு கணம் சிந்திப்பாய்...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    ஒரு கணம் சிந்திப்பாய்...!

    ஒரு கணம் சிந்திப்பாய்...!

    உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீ
    கள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்

    எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலே
    தள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும்

    முள்மீது அமர்ந்த முதியவன் போல்நீ
    தள்ளாமை கொண்டே தடுமாறும் போதும்..

    வெள்ளாமை இல்லாத உழவனைப் போல்நீ
    உள்ளுக்குள் மாண்டு மருகிடும் போதும்..

    புள்ளின இணையதை புலையவன் குத்திட
    சுள்ளெனச் சுருண்டிடும் இணையதைப் போல்நீ

    உள்ளிய தெல்லாம் உருக்குலை யும்நாள்
    தெள்ளிய நீரில் கற்களின் மோதலில்

    மெள்ளவே எழும்பிடும் வளையமாய் உன்மனம்
    உள்ளிடும் என்னை தவிர்ப்பையோ அதனை..?
    Last edited by கலைவேந்தன்; 24-04-2013 at 03:59 AM.

  2. Likes arun karthik, ரமணி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    மாற்றானை மனந்த காதலி நம்மை மறந்தகாதலியல்ல!
    மயஙகினாலும் முயங்கினாலும் முதுமையிலும்
    நினைவலைகளில் நீந்தும் நம் நினைவுகள்.
    உண்மைதான் உணரவைத்தது உங்கள் கவிதை
    ஆனால் அது சாபமா?, சங்கடமா?, பாவமா?
    என்றென்றும் நட்புடன்!

  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும்தான் நகர்கிறது வாழ்க்கை. இலக்குகளின் திசையை காற்று தீர்மானிக்கும் காலத்தில் எய்தவனை நோவதோ? அம்பை நோவதோ?

    மனவாழத்தில் கிடக்கும் ஏக்கங்களைப் பிரதிபலிக்கிறது கவிதையின் சொல்லாழமும் கருத்தாழமும். எடுத்தாளப்பட்ட உவமைகள் யாவும் அசத்தல்...

    மனந்தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள் கலைவேந்தன்.

  5. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    கீதம் அவர்கள் சொல்லுவது போல உவமைகள் அருமை. 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று முடிந்திருந்தால் யதார்த்தமாக இருந்திருக்கும்.

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    //உள்ளிய தெல்லாம் உருக்குலை யும்நாள்
    தெள்ளிய நீரில் கற்களின் மோதலில்

    மெள்ளவே எழும்பிடும் வளையமாய் உன்மனம்
    உள்ளிடும் என்னை தவிர்ப்பையோ அதனை..?//

    கலையின் சொல்லாடலைச் சொல்லவும் வேண்டுமோ?

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மனமிணைந்த உள்ளங்களை மணமுடைத்த வேதனையை நுணுக்கமான எண்ணவோட்டங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் எடுத்தியம்பிய விதத்தில் எளிதில் உணர்ந்துவிடமுடிகிறது... தீராத அக்காதலின் தீண்டலை..!!

    ஆழமான உணர்வோவியமாய் ஒளிரும் வரிகளுக்கு வாழ்த்துக்கள் கலையண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    உவமைகைளில் உண்மைகள் பட்டென்று தெரிக்கின்றன
    ஊமைகளின் வலியும் உரக்க சொல்லப்பட்டுள்ளன வாழ்த்துக்கள் கலை.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •