Results 1 to 8 of 8

Thread: தனிமை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    தனிமை

    மிக லாவகமாக
    எனது முழுநிலப்பரப்பிலும் பரவியிருக்கும்
    இத்தனிமை
    ஒரு 'ஜெல்'லென நெகிழ்ச்சியோடுத் தானிருக்கிறது
    எனினும்
    இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகனமும்
    துடைத்தழிப்பதற்கும்
    காய்தலுக்கும் அரியதாகவும்
    அகறலுக்கு சுலபமற்றதாகவும்
    விடுபடுதலுக்கு இயலாததாகவும் இருக்கிறது
    ஒரு குட்டி ஆடென
    உன் நினைவுகளை
    என் நிலத்தில் விடுந்தருணங்களில்
    அதன் துருதுருப்பான நடன துள்ளலில்
    தன் கடும்பிசுபிசுப்பையும், ஈரகனத்தையும்
    அடியோடுசுரண்டி அழித்து மறைகிறது தனிமை
    அன்புடன் ஆதி



  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தனிமையிலும் தனிமையிலின்றி நினைவுகள் துணையுடன் உலவும் இத்தனிமை அருமை...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தனிமையை ‘ஜெல்’ல்லாக்கிய உவமை அருமை. அதன் பிசுபிசுப்பு நீங்க அவளின் அல்லது அவனின் நினைவுகளை ஆடவிட்டதும் அருமை. ஆதி உங்க கவிதையை முழுசா ரசிக்கனும்ன்னா....ஆழ்ந்து வாசிக்கனும். இப்ப முடியல. அதனாலத்தான் இந்த சின்ன பின்னூட்டம். வாழ்த்துக்கள் தம்பி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    குட்டி ஆட்டின் நடனத் துள்ளலின் தனிமையின் ஜெல் அழிந்து மனத்துக்குள் ஜில்!

    உருளும் பாறையில் பாசி படர்வதில்லையாம். ஆகவே...

    குட்டி ஆட்டை அடிக்கடி மேயவிடுங்கள் உங்கள் மனப்பரப்பில்.

    அழகான கவிதை. சற்றே ஆழமானதும். பாராட்டுகள் ஆதி.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    தனிமை இனிமை தான் பலநேரங்களில்
    துணையாக எதைக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

    தனிமைக்குத் துணையாகத் தனிமையே வாய்க்கும் போது இப்படித்தான் புலம்ப வைக்கிறது.

    தனிமையை இத்தனை கனமாக உணரும்போதே...

    தனிமையை நீக்க வேண்டிய தேவையும் வந்து விட்டது.
    வெறும் நினைவுகள் பாரத்தை அதிகமாக்கத்தான் செய்யும்.

    நினைவுகளை விடுத்து நனவிற்கு வந்து நிஜங்களை எதிர்கொள்ள வேண்டிய வேளை வந்து விட்டதுடா...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. Likes prakash01 liked this post
  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    மிக லாவகமாக
    எனது முழுநிலப்பரப்பிலும் பரவியிருக்கும்
    இத்தனிமை
    ஒரு 'ஜெல்'லென நெகிழ்ச்சியோடுத் தானிருக்கிறது
    எனினும்
    இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகனமும்
    துடைத்தழிப்பதற்கும்
    காய்தலுக்கும் அரியதாகவும்
    அகறலுக்கு சுலபமற்றதாகவும்
    விடுபடுதலுக்கு இயலாததாகவும் இருக்கிறது
    ஒரு குட்டி ஆடென
    உன் நினைவுகளை
    என் நிலத்தில் விடுந்தருணங்களில்
    அதன் துருதுருப்பான நடன துள்ளலில்
    தன் கடும்பிசுபிசுப்பையும், ஈரகனத்தையும்
    அடியோடுசுரண்டி அழித்து மறைகிறது தனிமை
    நவீன உத்திகள் தொழிற்துறையில் மட்டுமா?
    கவிதை வரைதலிலும் என ஆதி காட்டுகிறார்.

    வித்தியசமான எண்ணங்களால் தனிமையை உருவப்
    படுத்தி படிப்பவர்கள் மனதில் ஒரு குட்டி ஆட்டை
    ஆட வத்து விட்டார்.

    //இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகனமும்
    துடைத்தழிப்பதற்கும்
    காய்தலுக்கும் அரியதாகவும்
    அகறலுக்கு சுலபமற்றதாகவும்
    விடுபடுதலுக்கு இயலாததாகவும் இருக்கிறது.//

    வாழ்க்கையில் இதனை உணராதவர் யாராவது உண்டா?
    ஆனால் அதனை வார்த்தையில் விளங்காதவர்களே அனேகம்..

    //அகறலுக்கு சுலபமற்றதாகவும்// அகற்றலுக்கு ? அல்லது அகறலுக்கு?

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி வெளிப்படுத்த இயலும்..?! கலக்கிட்டீங்க கவிஞரே..!!

    வலித்தாலும் வதைத்தாலும்
    இறுதிவரை இணைபிரியாமல்
    வாழ்வில் வழித்துணையாய் வருவது
    நினைவெனும் நிழல்நண்பன் மட்டும்தானே..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    தனிமையின் நிலை கொஞ்சம் தடுமாறியதுதான்
    கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் தவிப்பு கொஞ்சம் கிறுக்கு
    கொஞ்சம் செருக்கு கொஞ்சம் தெளிவு கொஞ்சம் அறிவு
    கொஞ்சம் சரிவு என அனைத்தும் கலந்துதான் அதை அழகான
    வரிகளில் ஆதி ஆழமிட்டுள்ளார் வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •