Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: முல்லைப் பாட்டு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0

    முல்லைப் பாட்டு

    வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் இனிமையை படித்து இன்புற

    ஒரு சிறந்த பாட்டு முல்லைப் பாட்டு..

    103 வரிகள் கொண்டது முல்லைப் பாட்டு. சிறிது சிறிதாக் நாம் பிரித்து படித்து

    இன்புறலாம்..

    சங்க இலக்கியப் பாடல்களில் கள்ளுண்ட குரங்காக மனம் மயங்கி கிடப்பதற்கு

    காரணம் பாடல்களின் வரிகள் நம் முன் காட்சியாக விரியும்.

    அவ்வாறு நான் கண்ட காட்சிகளை உங்களையும் காண அழைக்கிறேன்.

    நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு
    வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
    நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்
    பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
    கோடு கொண்டு எழுந்த் கொடுஞ் செலவு எழிலி
    பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை


    இதில் முல்லைத் திணைக்குரிய முதற் பொருளான நிலம் பொழுது
    இரண்டையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

    பெரும் பொழுது கார்காலம்
    சிறு பொழுது மாலை.

    திருமால், அகன்ற இடம் பொருந்திய உலகததை வளைத்துச் சக்கரமும் சங்கும்
    ஆகிய குறிகளாஇ யுடையனவும் திருமகளை அணைத்தனவுமான வலிய
    கையை உடையவன். மாவலி மன்னன் வார்த்த நீர் தன் கையில் விழுந்த அளவில் வானில் உயர்ந்து வளர்ந்தவன். அத்திருமாலைப் போல் ஒலிக்கும்
    குளிர்ந்த கடலினை நீரைக் குடித்து,வலமாய் எழுந்து மலைகளில் தங்கிப்
    பின்பு உலகத்தை வளைத்துக் கொண்டு எழுந்த விரைந்து எழும் செலவையுடைய பெருமழை பெய்த பிரிந்தவர்ககுத் துன்பத்தைத் தரும்
    புல்லிய மாலைக் காலம்.

    நனந் தலை உலகம் - அகன்ற இடத்தை உடைய உலகம்

    வளைஇ - வளைத்து

    நேமி - சக்கரம்

    வலம்புரிசங்கு - வலப்பக்கச் சுற்றுகளையுடைய சங்கு.

    பொறித்த - சக்கு சக்கரம் பொறித்தது போன்ற குறிகளைக் கொண்ட
    சிறந்த உடல் இலக்கணம்.

    தடக்கை - பெரிய என்னும் பொருளது.

    நீர் செல நிமிர்ந்த மாஅல் - மாவலி மன்னனிடம் மூவடி மண் கேட்க,
    மாவலி இசைந்து நீர் வார்த்த போது, கையில் விழுந்த் போது,அவன்
    பெருவடிவு கொண்டு எழுந்து உயர்ந்து இவ்வுலகத்து ஓரடியில் அளந்தற்காக
    பெருவடிவு கொண்டான் ஆதலால் நிமிர்ந்த மால்.

    வளைஇ - வளைய என்ற பொருள் கொண்டு,உலகத்தை வளைத்து அளத்தற்காக நிமிர்ந்த திருமால் போல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    மாஅல் - மால் திருமால்

    பாடு இமிழ் - ஒலி முழங்கும்

    பனிக்கடல் - குளிர்ந்த கடல்

    பருகி - குடித்து

    வலன் ஏர்பு - வலப்பக்கமாக எழுந்து

    கோடு கொண்டு - மலைகளை இருப்பிடமாகக் கொண்டு

    கொடுஞ்செலவு - விரைந்த செலவு

    எழிலி - மேகம்

    பெரும்பெயல் - பெரும் மழை

    சிறுபுன்மாலை - சிறு பொழுதான பொலிவற்ற மாலைப் போது.

    முல்லைத் தினை விளக்கம்
    Last edited by jpl; 24-04-2013 at 12:49 AM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    அருங் கடிமூதூர் மருங்கில் போகி
    யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லோடு
    நாழி கொண்ட நறு வீ முல்லை
    அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
    பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்


    முதலில் விரிச்சி கேட்டல் என்ன என்பதனைப் பார்ப்போம்.

    ஒரு செயல் நன்றாக முடியுமா இல்லையா என்பதை ஐயம்
    கொண்டவர்கள், மக்கள் நடமாட்டம் குறைவான இடத்தில்
    ஊர்ப்பக்கத்தில் நின்று தெய்வத்தைத் தொழுது அப்பொழுது
    அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கவனிப்பர்.அயலார்
    நற்சொல் கூறின் தாம் நினைத்து வந்த செயல் நன்மையாக
    முடியும் என்றும் அல்லாவிடின் தீதாய் முடியும் என்றும்
    கொள்வர்.

    மன்னர் போருக்குச் செல்லுங்கால் விரிச்சி கேட்டதாக பண்டை
    நூலால் அறியலாம்.

    கணவனைப் பிரிந்து தலைவி பெருவருத்தம் அடைய, அவள்
    பொருட்டாக விரிச்சி கேட்டு வரச் சிற்நத் முதிய பெண்டிர் அரிய
    காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் போயினர். யாழின்
    ஓசையைப் போன்று ஒலிக்கும் இனமான வண்டுகள் ஆரவாரிக்கும் நெல்லுடன்
    நாழியில் கொண்ட நறுமணப் பூக்களை உடைய முல்லையின் அரும்புகளில்
    அப்பொழுது மலர்வனவாகிய புதிய மலர்களைத் தூவினர்.தெய்வதைக்
    கையால் தொழுதனர்.நற்சொல் கேட்டு நின்றனர்.

    அருங்கடி மூதூர் - மன்னன் வாழும் தலைநகர் என்பது விளங்க, அரிய
    காவலையுடைய மூதூர்
    பகைவர் புகுதற்கு அரிய காவல் என்று பொருள் அருங்கடி என்பதற்கு.
    மூதூர் - பழமையுடைய ஊர்.

    மருங்கு - பக்கம் முது பெண்டிர் ஊர்ப்புற்த்துச் சென்றது..

    விரிச்சி - நற்சொல் கேட்டல் ..நன்னிமித்தம் என்பனவும் இதுவே.

    யாழிசை இன வண்டு -- யாழின் ஒலி போல் பாடும் தன்மையுடைய
    கூட்டமான வண்டு.

    நறுவீ -- நறுமணமுடைய மலர்கள்.

    அரும்பு அவிழ் அலரி - அரும்பு மலரும் மலர்கள்

    தூஉய் - தூவி

    முல்லைத் திணை விளக்கம்
    Last edited by jpl; 24-04-2013 at 12:51 AM.

  3. Likes கீதம் liked this post
  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    முல்லைப்பாட்டின் பாடல்களை விளக்கத்தோடு பகிர்வதற்கு மிகவும் நன்றி. விரிச்சி கேட்டல் என்னும் அன்றைய வாழ்வியல் நடைமுறை பற்றியும் அறியத் தந்தைமைக்கு நன்றி. பாராட்டுகள். தொடரட்டும் இவ்வினிய முயற்சி.

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நீண்ட நாட்களுக்குப் பிறகு லதா அம்மாவின் முத்திரைப் பதிவு.

    மரபானப் பாடல்களை உங்கள் எளிய நடையில் விளக்கும் போது அதன் இனிமையோடு சுவைக்க முடிகிறது.

    நன்றிகள் அம்மா. தொடர்ந்து பகிருங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி கீதம்,செல்வா இருவருக்கும்...கொஞ்சம் நீண்ட நாளாக பூரண ஓய்விலிருக்கின்றேன். சில பல நிபந்தனைகளோடு கணினி என்னருகில் வந்து விட்டது.(பொழுது போக்வில்லை என்பதால்.)
    பழைய பதிவுகளை பார்வையிடும் பொழுது..முல்லைப் பாட்டும்,நெடுநெல்வாடையும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்..

    ////”””அகத்திணையை நீங்கள் வரிசைப்படுத்திய அடுக்கொழுங்கிலா எமது இலக்கிய பாதை உள்ளது.?
    அகம் பற்றி முதலில் பார்போம்.
    அகத்திணை 7 வகைகளாம்.
    குறிஞ்சி
    முல்லை
    மருதம்
    நெய்தல்
    பாலை
    கைக்கிளை-ஒரு தலைக் காதல்
    பெருங்கிளை-பொருந்தா காமம்

    இவை தானே சந்தேகம் அமரன்?
    இது இலக்கியப் பாதை என்பதை விட சங்க காலத்தில் வாழ்வியல் நெறியாக இருந்திருக்கின்றது.
    மண்வாகைப் பொறுத்தே மனிதர்களின் வாழ்க்கை முறை அமைந்திருக்கின்றது.
    தமிழ் பரப்பு ஐவகை நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு,அதன் வாழ்க்கை முறையே இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது.
    உதாரணத்திற்கு நெடுநெல்வாடையில் மதுரையின் ஒரு நாள் நிகழ்வு அற்புதமாக படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றது.
    முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பம் தீர்ப்பதற்காக
    விரிச்சிக் கேட்கச் சென்ற முதுபெண்டிரின் செயல்(கோவிலுக்குச் சென்று நற்சொல் கேட்டல்).
    என் தந்தையாரின் பணி நிமித்தம் பல ஊர்களில் வசிக்கும் வாய்ப்பு கிட்டியது.அவ்வகையில் நானறிந்தது இப்பொழுதும் கூட அந்தந்த நிலப்பகுதியில் வாழும் தற்காலத்திய மாந்தர்கள் இவ்வைந்திணை அடிப்படை கோட்பாட்டிலியே வாழ்க்கையை நெறிபடுத்துக்கின்றனர்.
    சங்க கால ஊர்ப் பெயரினை நாம் இன்றும் கூட பயன்படுத்துகின்றோம்.
    நெடு நல் வாடையையும்,முல்லைப் பாட்டினையும் விளக்க உரையுடன் பின்னர் பார்ப்போம்.”’’’///

    வாக்குறுதி இங்கே

    கொஞ்சம் முயற்சி செய்யலாம் என்றே ஆரம்பித்தேன்..இடையில் வாழ்யியல் முறை மாற்றத்தால் இணையத்தில் எழுத இயலவில்லை.அதன் பின்னர் தட்டச்சு வேகம் குறைந்தால் சோம்பேறிதனமாகி விட்டது..

    இபொழுது கூகுள் டாகுமெடன்ரியில் இரண்டு வரிகள், நான்கு வரிகளாக எழுதி,சேமித்து பின்னர் மன்றத்தில் பதிவிடுகிறேன்..

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    முல்லைப்பாட்டின் பாடல்களை விளக்கத்தோடு பகிர்வதற்கு மிகவும் நன்றி. விரிச்சி கேட்டல் என்னும் அன்றைய வாழ்வியல் நடைமுறை பற்றியும் அறியத் தந்தைமைக்கு நன்றி. பாராட்டுகள். தொடரட்டும் இவ்வினிய முயற்சி.
    விரிச்சி கேட்டல் என்னும் பெயர் இல்லையே தவிர அப்பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது கீதம்.
    எங்களுக்கு கோவிலில் பெண் பார்க்கும் பழக்கம் உள்ளது..அங்கு இந்த மாதிரி அசிரிரீ,நல்ல சகுனம் பார்ப்போம்.

    என் பையனுக்கு பெண் பார்க்கும் பொழுது பெண் மற்றும் உறவினர்கள் எல்லோரும் மாப்பிள்ளைக்காக
    கோவிலில் காத்திருந்தோம்..சற்று நேரம் கழித்து வேகமாக கோவிலுக்குள் நுழைந்தான்.அப்பொழுது கோவிலில்
    மங்கல இசை ஒலித்தது..பெண் வீட்டாருக்கு மிக்க மகிழ்ச்சி..சிறிது நேரத்தில் மங்கல ஒலி நின்று விட்டது..
    சம்பிரதாயமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் கொஞ்சம் தள்ளி போய் நீங்கள் இருவரும் போய்
    பேசுவது என்றால் பேசுங்கள் என்று நாங்கள் கூறியதும்,சில அடி நகர்ந்து எங்கள் அருகிலேயே பேச ஆரம்பித்தார்கள்.
    நம்பவே முடியவில்லை.மீண்டும் மங்கல ஒலி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.மங்கல ஒலியுடனே அப்பெண்ணிற்கு
    பூ வைத்து மருமகளாக்கிக் கொண்டோம்..இபொழுது என் பேரன் L.K.G போகும் சிறுவன்..
    சென்னையிலுள்ள மல்லிகேஸ்வரர் திருக்கோயில் தான் அக்கோவில்.

    எங்களூரில் இன்னும் இவ்வாறு நிறைய பார்ப்பார்கள்...

  8. Likes கீதம் liked this post
  9. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
    நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
    கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
    இன்னே வருகுவர், தாயர் என்போள்
    நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
    நல்ல நன் மொழி கேட்டனம் அதனால்


    சிறு தாம்புக் க்யிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று, பால்
    உண்ணாமையால் அடைந்த துயரத்தால், தாய்பசு வரும்
    என்று சுழல்கின்ற தன்மையைப் பார்த்து, இடையர் குடியில் பிறந்த
    மகள் குளிரால் நடுங்கின்ற தனது தோளின் மீது கட்டிய கையை
    உடையளாய் நின்று, கையகத்துக் கோலையுடைய இடையர் பின்னே
    நின்று செலுத்துதால்,”இப்பொழுது வந்து விடுவர் நும் தாயர்” என்பளின்
    நல்ல மொழியை நாங்கள் கேட்டோம்.

    சிறுதாம்பு தொடுத்த -- சிறு தாம்பால் கட்டப்ட்ட கன்றைக் காலில்
    கட்டுவதால் சிறுதாம்பு தொடுதல்
    சிறிய தாம்புகளால் வரிசையாய்க் கட்டப்பட்ட கன்றுகள் எனவும்
    பொருள் கொள்லாம்.

    பசலைக் கன்று --இளங்கன்று

    உறுதுயர் -- பால் உண்ணாமையால் உண்டான மிக்க துன்பம்

    அலமரல் - சுழலல்

    ஆய்மகள் - இடையர் மகள்நடுங்கு கவல் அசைத்த கையள் -- குளிரால் நடுங்கும் தன் தோளில்
    கட்டிய கையை உடையவள்

    கைய கொடுங்கோள் கோவலர் -- கையில் கோல் உடைய ஆயர்

    உய்த்தர - செலுத்த

    இன்னே வருவர் - இப்போதே வருவர்

    நன்னர் நன் மொழி - மிகவும் நன்றாகிய மொழி.
    Last edited by jpl; 26-04-2013 at 01:04 AM.

  10. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நெடுநாட்களுக்குப் பிறகு இலக்கிய விருந்தோடு மன்றம் வந்தடைந்த ஜெயபுஷ்பலதா அவர்களுக்கு வரவேற்புகளுடன் இனிய இலக்கிய விருந்துக்கு மனமார்ந்த நன்றிகளும்.

    முல்லைப்பாட்டு குறித்த விளக்கங்களும் பாடல் நலன்கள் பகிர்ந்தமையும் மிக அருமை. தொடருங்கள். நலம் தானே...?

  11. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி கலை.நலமே..தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?

  12. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by jpl View Post
    சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
    நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
    கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
    இன்னே வருகுவர், தாயர் என்போள்
    நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
    நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
    முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து


    சிறு தாம்புக் க்யிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று, பால்
    உண்ணாமையால் அடைந்த துயரத்தால், தாய்பசு வரும்
    என்று சுழல்கின்ற தன்மையைப் பார்த்து, இடையர் குடியில் பிறந்த
    மகள் குளிரால் நடுங்கின்ற தனது தோளின் மீது கட்டிய கையை
    உடையளாய் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
    நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
    கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
    இன்னே வருகுவர், தாயர் என்போள்
    நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
    நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
    முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
    நின்று, கையகத்துக் கோலையுடைய இடையர் பின்னே
    நின்று செலுத்துதால்,”இப்பொழுது வந்து விடுவர் நும் தாயர்” என்பளின்
    நல்ல மொழியை நாங்கள் கேட்டோம்.

    சிறுதாம்பு தொடுத்த -- சிறு தாம்பால் கட்டப்ட்ட கன்றைக் காலில்
    கட்டுவதால் சிறுதாம்பு தொடுதல்
    சிறிய தாம்புகளால் வரிசையாய்க் கட்டப்பட்ட கன்றுகள் எனவும்
    பொருள் கொள்லாம்.

    பசலைக் கன்று --இளங்கன்று

    உறுதுயர் -- பால் உண்ணாமையால் உண்டான மிக்க துன்பம்

    அலமரல் - சுழலல்

    ஆய்மகள் - இடையர் மகள்நடுங்கு கவல் அசைத்த கையள் -- குளிரால் நடுங்கும் தன் தோளில்
    கட்டிய கையை உடையவள்

    கைய கொடுங்கோள் கோவலர் -- கையில் கோல் உடைய ஆயர்

    உய்த்தர - செலுத்த

    இன்னே வருவர் - இப்போதே வருவர்

    நன்னர் நன் மொழி - மிகவும் நன்றாகிய மொழி.
    இந்தப்பாடலின் விளக்கம் இன்னும் சற்றுத் தெளிவுபட இருந்தால் நன்றாகப் புரியுமென்று தோன்றுகிறது லதா. விளக்கத்திலும் பாடலே தொடர்வதால் புரிதலில் சிரமம் உள்ளது.

  13. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    சுட்டியமைக்கு நன்றி கீதம்...இபொழுது சரி செய்து விட்டேன்...

  14. Likes கீதம் liked this post
  15. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நற்சொல்லை நாங்கள் கேட்டதாலும், தலைவன் போர்
    சென்ற காலத்தில் நல்லோர் கேட்ட சொல் நல்லனவை
    ஆதலால்,தலைவன் பகைவனை வென்று,திறைப்
    பெற்று வருவது உறுதி தலைவி தேற்றுகின்றனர்.

    ”நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
    முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
    வருதல் தலைவ்ர் வாய்வது நீ நின்
    பருவரல் எவ்வம் களை மாயோய் எனக்
    காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
    பூப் போல் உண் கண் புலம்ப, முத்து உறைப்பக்”


    அதனாலும், நின் தலைவன் பகைவர் மேல்
    போகும்போது நல்லோர் கேட்ட சொல்லும் நல்லனவே
    ஆதலாலும், பகைவர் மண்ணைக் கொண்டு பின்பு
    அவரிடம் வாங்கிக் கொண்ட திறைப் பொருளை
    உடையவராய் இங்ஙனம் தாம் மேற்கொண்ட
    வினையை முடித்து இப்பொழுதே வருவது நம்
    தலைவர்க்கு நேர்வது உறுதியே யாகும்.ஆதலால் நீ உள்ளத்
    த்டுமாற்றத்தால் ஏற்பட்ட வருத்தை,மாமை நிறத்தை
    உடையவளே, அகற்றுவாயாக என்று ஆற்றி
    இருப்பதற்குரிய காரணமான பலவற்றைப் பல
    முறையும் எடுத்துக் காட்டவும் காணாதவளாய்க்
    கலங்கி மலர்போலும் மையுண்ட கண்கள் தாரையாய்ச்
    சொரியாது தனித்து விழும் முத்துப் போலும்
    துளியைத் துளிப்ப.

    தெவ்வர் - பகைவர்

    முனை கவர்ந்து - பகைவர் போரை வென்று மண்ணைக்
    கவர்ந்து

    திறையர் - திறைப் பொருளைப் பெற்றுக் கொண்டுவராய்

    வாய்வது -- உண்மையாகும். உறுதியாகும்.

    பருவரல் - மனத்துன்பத்தால் வரத்தக்க

    எவ்வம் - துன்பம்

    களை - போக்குவாய்

    மாயோய் -- மாமை நிறைத்தை யுடையவளே.

    சுலுழ் - கலக்கம்

    உண்கண் - மைபூசப்பட்ட கண்

    முத்து - தனித்தனி முத்துப்போன்று கண்ணீர்த் துளி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •