Originally Posted by
jpl
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
சிறு தாம்புக் க்யிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று, பால்
உண்ணாமையால் அடைந்த துயரத்தால், தாய்பசு வரும்
என்று சுழல்கின்ற தன்மையைப் பார்த்து, இடையர் குடியில் பிறந்த
மகள் குளிரால் நடுங்கின்ற தனது தோளின் மீது கட்டிய கையை
உடையளாய் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
நின்று, கையகத்துக் கோலையுடைய இடையர் பின்னே
நின்று செலுத்துதால்,”இப்பொழுது வந்து விடுவர் நும் தாயர்” என்பளின்
நல்ல மொழியை நாங்கள் கேட்டோம்.
சிறுதாம்பு தொடுத்த -- சிறு தாம்பால் கட்டப்ட்ட கன்றைக் காலில்
கட்டுவதால் சிறுதாம்பு தொடுதல்
சிறிய தாம்புகளால் வரிசையாய்க் கட்டப்பட்ட கன்றுகள் எனவும்
பொருள் கொள்லாம்.
பசலைக் கன்று --இளங்கன்று
உறுதுயர் -- பால் உண்ணாமையால் உண்டான மிக்க துன்பம்
அலமரல் - சுழலல்
ஆய்மகள் - இடையர் மகள்நடுங்கு கவல் அசைத்த கையள் -- குளிரால் நடுங்கும் தன் தோளில்
கட்டிய கையை உடையவள்
கைய கொடுங்கோள் கோவலர் -- கையில் கோல் உடைய ஆயர்
உய்த்தர - செலுத்த
இன்னே வருவர் - இப்போதே வருவர்
நன்னர் நன் மொழி - மிகவும் நன்றாகிய மொழி.
Bookmarks