தலவியை வேதனைக்குள்ளாக்கிய தலவனைப் பற்றியும்,
பாசறை பற்றியும் இனி பார்ப்போம்.
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டுப் புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடு முட் புரிசை ஏமுற வளைஇ
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி
காட்டாறு சூழந்த அகன்ற பெரிய காட்டில் தொலைவிலும்
மணக்கும் பிடவத்தோடே ஏனைப் பசிய தூறுகளையும் வெட்டி
அங்குள்ள பகைப்புலத்துக் காவலாக இருக்கும் வேட்டுவச்
சாதியின் சிறு வாயில்களை யுடைய அரண்களை அழித்துக்
காட்டின் கண்ணவாகிய முள்ளால் இடும் முள் வேலியாகிய
மதிலைக் காவல் பொருந்தும்படி வளைத்து அமைத்த,
நீரான் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறையில்
கான்யாறு - காட்டாறு
அகன் நெடும்புறவு - அகன்ற நெடிய காடு.
சேண் நாறு - தொலைவிலும் மணம் கமலும்
பைம்புதல் - பசுமையான புதர்
எருக்கி - அழித்து
வேடுவப் புழை - வேடுவச் சாதியின் சிறு வாயில்
அருப்பம் - அரண்கள்
காட்ட - காட்டில் உள்ளனவான
இடு முள் - முன்னால் இடும்
ஏம் - காவல்
புணரி - கடல்
பாடி - பாசறை
கடல் போன்ற அமைந்த பாசறையின் அமைப்பை
விளக்குகிறது.
பகை மன்னனின் அரண்மனைக்குரிய காட்டரண்
நான்கு வகை அரண்களுள் ஒன்றான காட்டரணிடத்தில்
வஞ்சிப் போர் புரிய புக்க மன்னர் பாசறை அமைப்பது
வழக்கம்.
காட்டில் பிடவும் முதலிய புதர்களை அழித்து,வேடுவர்களின்
வாயில்களையும் அழித்து கடல் போன்று பாசறை அமைத்து,
அதற்கு முள்வேலியும் அமைத்தனர்..
Bookmarks