Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: முல்லைப் பாட்டு

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    தலவியை வேதனைக்குள்ளாக்கிய தலவனைப் பற்றியும்,
    பாசறை பற்றியும் இனி பார்ப்போம்.

    கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
    சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
    வேட்டுப் புழை அருப்பம் மாட்டிக் காட்ட
    இடு முட் புரிசை ஏமுற வளைஇ
    படுநீர்ப் புணரியின் பரந்த பாடி


    காட்டாறு சூழந்த அகன்ற பெரிய காட்டில் தொலைவிலும்
    மணக்கும் பிடவத்தோடே ஏனைப் பசிய தூறுகளையும் வெட்டி
    அங்குள்ள பகைப்புலத்துக் காவலாக இருக்கும் வேட்டுவச்
    சாதியின் சிறு வாயில்களை யுடைய அரண்களை அழித்துக்
    காட்டின் கண்ணவாகிய முள்ளால் இடும் முள் வேலியாகிய
    மதிலைக் காவல் பொருந்தும்படி வளைத்து அமைத்த,
    நீரான் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறையில்

    கான்யாறு - காட்டாறு

    அகன் நெடும்புறவு - அகன்ற நெடிய காடு.

    சேண் நாறு - தொலைவிலும் மணம் கமலும்

    பைம்புதல் - பசுமையான புதர்

    எருக்கி - அழித்து

    வேடுவப் புழை - வேடுவச் சாதியின் சிறு வாயில்

    அருப்பம் - அரண்கள்

    காட்ட - காட்டில் உள்ளனவான

    இடு முள் - முன்னால் இடும்

    ஏம் - காவல்

    புணரி - கடல்

    பாடி - பாசறை

    கடல் போன்ற அமைந்த பாசறையின் அமைப்பை
    விளக்குகிறது.

    பகை மன்னனின் அரண்மனைக்குரிய காட்டரண்
    நான்கு வகை அரண்களுள் ஒன்றான காட்டரணிடத்தில்
    வஞ்சிப் போர் புரிய புக்க மன்னர் பாசறை அமைப்பது
    வழக்கம்.

    காட்டில் பிடவும் முதலிய புதர்களை அழித்து,வேடுவர்களின்
    வாயில்களையும் அழித்து கடல் போன்று பாசறை அமைத்து,
    அதற்கு முள்வேலியும் அமைத்தனர்..

  2. #14
    புதியவர்
    Join Date
    11 Jun 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    11,250
    Downloads
    0
    Uploads
    0
    எனக்கு ஐந்திணை பாடல்கள் மிகவும் பிடிக்கும்,நீங்கள் குறிப்பிட்டது போல பொருள் உணர்ந்து படிக்கும் போது அவை காட்சிகளாக நம் மனக்கண் முன் விரியும். உங்கள் செம்மை பணிக்கு மிக்க நன்றி.

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பழந்தமிழ் பாடல்களை படிக்கும்போது இனம் புரியா இன்பம் தோன்றுகிறது. தெளிவான விளக்கங்களோடு வாசிக்கையில்....மனம் மகிழ்கிறது. நன்றிங்க மேடம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by yazhini View Post
    எனக்கு ஐந்திணை பாடல்கள் மிகவும் பிடிக்கும்,நீங்கள் குறிப்பிட்டது போல பொருள் உணர்ந்து படிக்கும் போது அவை காட்சிகளாக நம் மனக்கண் முன் விரியும். உங்கள் செம்மை பணிக்கு மிக்க நன்றி.
    நன்றி யாழினி

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பழந்தமிழ் பாடல்களை படிக்கும்போது இனம் புரியா இன்பம் தோன்றுகிறது. தெளிவான விளக்கங்களோடு வாசிக்கையில்....மனம் மகிழ்கிறது. நன்றிங்க மேடம்.
    நன்றி சிவா.ஜி

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அலுவலகப் பணியாய் வெளியூர் சென்றிருக்கும் அப்பாவைக் கேட்டு அடம்பிடித்து உண்ண மாட்டாமல் உறங்கமாட்டாமல் அழுது தேம்பும் குழந்தையிடம் அதன் தாய், 'இதோ அப்பா இப்ப வந்திடுவார் அழாதேடி தங்கமே' என்று சொல்லித் தேற்றுவது போல் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியைத் தேற்றும் தோழியின் செயலை அழகாக எடுத்தியம்புகிறது பாடல். என்னதான் தேற்றினாலும் மனம் தேறாமல் கண்ணீரை உகுக்கும் தலைவியின் நிலை பரிதாபத்துக்குரியதே... முல்லைப்பாட்டுப் பகிர்வுக்கும் எளிய விளக்கத்துக்கும் மிக்க நன்றி லதா.

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அலுவலகப் பணியாய் வெளியூர் சென்றிருக்கும் அப்பாவைக் கேட்டு அடம்பிடித்து உண்ண மாட்டாமல் உறங்கமாட்டாமல் அழுது தேம்பும் குழந்தையிடம் அதன் தாய், 'இதோ அப்பா இப்ப வந்திடுவார் அழாதேடி தங்கமே' என்று சொல்லித் தேற்றுவது போல் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியைத் தேற்றும் தோழியின் செயலை அழகாக எடுத்தியம்புகிறது பாடல். என்னதான் தேற்றினாலும் மனம் தேறாமல் கண்ணீரை உகுக்கும் தலைவியின் நிலை பரிதாபத்துக்குரியதே... முல்லைப்பாட்டுப் பகிர்வுக்கும் எளிய விளக்கத்துக்கும் மிக்க நன்றி லதா.
    அருமையான உவமை கீதம்..என் மகன் பணி நிமித்தம் மதனபள்ளி செல்லுங்கால் பேரனின் செய்கை இதே..
    அக்காலத்தில் போன் இல்லை..இப்பொழுது அவன் போனில் பேசுகிறான்..”ஐயா எப்ப ஐயா வருவ?நீ வரமாட்டிங்கிற என்று மழலை தமிழில் கொஞ்சுவான்..(ஐயா --அப்பா)என் மருமகள் ஐயா நாளைக்கு வந்து விடுவார்கள் என்று கூறி சமாதானப்படுத்துவாள்..நன்றி கீதம்..

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
    கவலை முற்றம் காவல் நின்ற
    தேம் படு கவுள சிறு கண் யானை
    ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
    வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
    அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
    கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி,
    கல்லா இளைஞர், கவளம் கைப்ப



    தழையால் வேயப்பட்ட கூரை ஒழுங்கு அமைந்த தெருவில்,
    நாற்சந்தியான முற்றம்:

    அதில் காவலாய் அமைத்த மதம் பாயும் கன்னத்தையுடைய
    சிறிய கண்களையுடைய யானைகள்:

    அவை வளரும் தன்மையுடைய கரும்புகளுடன் வயலில்
    விளைந்த நெற்கதிர்களைப் பொதியக்
    கட்டிய சாலியையும் இனிய அதிமதுரத் தழையும் தின்னாமல்
    அவற்றால் தம் நெற்றியைத் துடைத்துக் கூரிய கொம்புகளில்
    உயர்த்தி வைத்த த்ம் கையில் கொண்டு நின்றன.

    பிளவுடைய முள்ளையுடைய பரிக்கோலால் யானைப் பேச்சான
    வடமொழிச் சொற்களைப் பலமுறை கூறுவர்.

    அந்த யானைப் பேச்சன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்
    உணவைத் தின்னும்படி குத்த..(குத்துவார்)

    (பாடி வீட்டுள் த்ழை வேய்ந்த கூரைகள் ஒழுங்காக அமைதிருக்கும்
    தெருவின் நாற்சந்தி கூடும் இடத்தில் காவலாய் யானைகள் நிறுத்தப்
    பட்டுள்ளன்.

    அந்த மத யானைகள் தமக்கு இடும் கரும்புடனே கதிரும்
    சேரக் கட்டிய அதிமதுரத் தழையை உண்ணாமல்
    அவற்றைத் துதிக்கையின் கொம்புகளின் மேல் கையை
    வைத்துக் கொண்டு இருந்தன்.

    பாகர் அவ்வியானைகளை வட மொழிப் பற்றிக் குத்துக் கோலால் குத்தி
    உணவை உண்ணும்படி செய்வர்.)

    உவலைக் கூரை - தழையால் வேய்ந்த கூரை வீடுகள்

    ஒழுகிய - வரிசையாய் அமைந்த

    கவலை முற்றம் - நாற்சந்தி கூடும் முன்பக்கம்

    கவலை - நாற்சந்தி

    காவல் நின்ற - காவலாய் நிறுத்தப்பட்ட

    தேம்படு கவுள - மதம் பாய்கின்ற கன்னத்தை
    யுடைய

    ஓங்கு நிலைக் கரும்பு - உயர்ந்து வளரும் தன்மை
    யுடைய கரும்புடன்

    கதிர் மிடைந்து -- நெற்கதிர்களை நெருக்கமாகப் பொதிந்து

    இன்குளகு - இனிய அதிமதுரத் தழை

    நுதல் - நெற்றி

    அயில் நுனை மருப்பு - கூரிய முனையுடைய கொம்பு

    கொண்டென - கொண்டதாக

    கவை முட் கருவி - பரிக் கோல் ; குத்துக் கோல்

    கவளம் கைப்ப -- கவளததை உண்ணுமாறு குத்த

    கல்லா இளைஞர் - யானைப் பேச்சன்றிப் பிறவற்றைக்
    கல்லாத இளைஞர்.

  8. #20
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கரும்பு தின்னக்கூலியா என்று கேட்போம்... அந்த யானைகளுக்கு கரும்பும் நெல்லும் இனிய அதிமதுரத் தழையும் கூட கசக்கிறதாமே... உண்ணமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதுபோல் தும்பிக்கையைத் தூக்கி தந்தங்களின்மேல் வைத்துக்கொண்டு என்ன அட்டகாசம்! காட்சியைக் கண்முன் கொணரும் அருமையான பாடல்.. தெளிவான விளக்கம். பகிர்வுக்கு நன்றி லதா.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •