Results 1 to 9 of 9

Thread: வெறுமையின் சில துளிகள்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    வெறுமையின் சில துளிகள்

    சாத்தியக்கூறுகள் ஏதுமற்று
    சட்டென்று வெளியேகிய சமரசங்களின் சாடலால்
    திகைப்புற்றுக் கிடக்கிறது மனம்.


    ஆடல் முடிந்த அரங்கு போல...
    அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
    பறவை பிரிந்த கூடு போல...
    திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
    இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
    வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
    வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!


    சித்திரை மாத வெயிலது உச்சிப்பொழுதுகளில்
    வேட்கை மிகுதியோடு தன் வறண்ட நாவை
    புழுதி பறக்கும் தெருக்களில் துழாவித் துழாவி
    சொச்சமிருக்கும் ஈரத்தையுறிஞ்சியும்
    தன் தாகந்தணியாது திரிவதைப்போல்
    நா நீட்டியபடியே அலைகிறது வெறுமை.


    இடி கொணரும் கோடைமழையென
    எதிர்பாராது அணைத்தூறும் சில
    அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
    வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
    மெல்லக் கிளைக்கலாம்
    வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.


    அல்லது வெறுமனே திரிந்திருக்கலாம்
    வெட்டவெளியில் சில சுவாசத்துளிகள்.


    (சற்றே மெருகேற்றப்பட்ட ஒரு பழைய கவிச்சமர்க்கவிதை)

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வெட்கை பொழுதுகளில்
    வீசிய புழுதிகாற்றில்
    ஊசலாடிய சுவாசக்காற்று
    உயிர்பெற்று ஊஞ்சலாடுகிறது
    எங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..!!

    கவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன் செப்பும் வரிகள்..!! வாழ்த்துக்கள் கீதாக்கா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    தனிமை என்னும் நியதி!
    இனிமை கொல்லும் வியாதி!
    'சிறிது மாற்றினால்'
    இனிமை துளிர்விடும் வேர்த்துளி!

    பாராட்டுகள் கீதம் அவர்களே!
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    வெட்கை பொழுதுகளில்
    வீசிய புழுதிகாற்றில்
    ஊசலாடிய சுவாசக்காற்று
    உயிர்பெற்று ஊஞ்சலாடுகிறது
    எங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..!!

    கவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன் செப்பும் வரிகள்..!! வாழ்த்துக்கள் கீதாக்கா..!!
    வெறுமையின் வெம்மையிலும் செழுமை காணும் இனியப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபி.

    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    தனிமை என்னும் நியதி!
    இனிமை கொல்லும் வியாதி!
    'சிறிது மாற்றினால்'
    இனிமை துளிர்விடும் வேர்த்துளி!

    பாராட்டுகள் கீதம் அவர்களே!
    ஆற்றுப்படுத்தும் அருமையானப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கும்பகோணத்துப்பிள்ளை.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வெறுமையெனும் பாலைவனத்துக் கற்றாழையில் பூத்த பூவிதுவோ....?

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வெறுமையிலிருந்து வரும் அனைத்துமே அழகுதான்
    வெறுமையிலிருந்து வந்த இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
    கீதமக்காவின் அருமையான இந்தக் கவிதை வரை

    நிற்க

    திருவிழா முடிந்த தெரு

    ஆடல் முடிந்த அரங்கு

    அறுப்பு முடிந்த வயல்

    அனைத்தும் உற்றுப்பார்த்தால் அள்ளித்தரும் கதைகள் ஆயிரம்
    உணர்வுகள் ஆயிரம்.

    அவை வெறுமையல்ல.

    பார்ப்பவர் கண்களில் தான் வெறுமை. அறுப்பு முடிந்த வயலில் பயிரின் வேரில் காய்ந்திருக்கும் உயிர் சிறுமழையில் கிளைத்து வெளிவருவது போல்....

    இடி கொணரும் கோடைமழையென
    எதிர்பாராது அணைத்தூறும் சில
    அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
    வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
    மெல்லக் கிளைக்கலாம்
    வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.
    அருமையான உதாரணம்.

    ரொம்ப நல்லாருக்கு அக்கா... வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    செல்வா சொன்னதைப்போல அறுப்பு முடிந்த வயல், ஆடல் முடிந்த அரங்கு, திருவிழா முடிந்த தெரு.....இவையனைத்துமே வெறுமையல்ல.....வெறுமையான ஒரு தோற்றம். ஆனாலும் அந்த நேர அந்த வெறுமை மனதை என்னவோ செய்யும்.

    மிக அழகான உவமைகளோடு வெறுமையை அருமையாய் சொல்லும் கவிதை....மெல்லக் கிளைக்கலாம் வாழ்வின் சுவாரசியத் துளிகளென்று உற்சாகமூட்டி முடிகிறது.

    மனதைத் தொட்டக் கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்ம்மா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    படிக்கும் பொழுது பட்டெனத் தோன்றும் வெறுமை
    கண்ணுக்கெட்டிய தூரம் வரை
    ஆளரவமற்ற தனிமை
    இவற்றை உணர வைத்த சுவாரசியத் துளிர்கள்
    இக் கவிதை...

    உவமை,உவமேயங்களும்,
    ரசிக்கும் போது வெறுமையும்,தனிமையும்
    சுகமுள்ளதாகிறது..

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
    மெல்லக் கிளைக்கலாம்
    வாழ்வின் சுவாரசியத் துளிர்கள் என்ற வரிகளில்
    வெறுமையிலும் நம்பிக்கை உண்டு என்ற உண்மை
    மிக சிறப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வெறுமையாய் கவிதை தொடங்கினாலும்
    நிறைவாய் தொடர்கிறது கீதம் வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •