Originally Posted by
தாமரை
இளங்கோவடிகளின் காலம் முந்தையது. இளங்கோவடிகளின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். அந்தச் செங்குட்டுவனின் தம்பி என்பதால் அடிகளாரும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரே.
கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். வெண்ணைநல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் என்ற ஓரு செல்வந்தரால் இவர் வளர்க்கப்பட்டார்.
1000 ஆண்டுகளுக்குப் பிந்திப் பிறந்த கம்பனைப் பார்த்து இளங்கோ கம்பரின் தாக்கத்தினால் எழுதினார் என்று எழுதுவதைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
Bookmarks