அன்பை ஊட்டினாள்;
அன்னையை நேசித்தேன்....
அறிவை மூட்டினார்;
தந்தையை நேசித்தேன்...
வாழ்க்கைக்கு பொருள் அளித்ததால்
துணையை நேசித்தேன்...
வாழ்க்கைக்கு பொருள் அளித்ததால்
பணியை நேசித்தேன்...
மனதிற்கு இதம் தந்தது;
இசையை நேசித்தேன்...
காலத்திற்கும் இனிமை தந்தது;
கலையை நேசித்தேன்...
அருந்தமிழே!
எதற்காக உன்னை நேசித்தேன்;
எப்போது உன்னை நேசித்தேன்;
என்னுடன் என்னுள் நீ பிறந்ததாலா? இல்லை
உலகை அறிவதற்கு முன் உன்னை நான் அறிந்ததாலா?
நிச்சயம் நினைவில்லை;ஆனால்
நித்தமும் நேசிக்கிறேன்...
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
Bookmarks