எங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்..![]()
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்...
தேர்ந்த ஒரு கதை சொல்லியை போல் ஒரு நடை. ஆரம்பமே அசத்தலாய் இருந்தது. ஆங்காங்கே தூவிய வர்ணனைகளும் அருமை. ஒவ்வோரு கதாபாத்திர மனநிலையையும் காட்சிகளாய் ஒவ்வொரு பாகமாய் ஆக்கியவிதமும் அழகு. குறிப்பாய் கவனிக்க வைத்தது கதையோட்டத்திலேயே கதாபாத்திர அறிமுகம். தேவியின் அறிமுகம் அதுமாதிரி உறுத்தாமல் இருந்தது.
மற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.
அடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்.. அச்சோ..இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு இருக்கேன்.
அழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.
ஆக்சுவலி, கதைப்படி அருணா கேரக்டர் வாழ்வின் ஏமாற்றங்களால் நொந்து போன கேரக்டர் கிடையாது மதி சார். அப்டி இருந்தா நீங்க சொல்றது பக்காவா வரும். தைரியமான பொண்ணு நம்ம அருணா. சுதர்சன் வழிவது கூட கொஞ்சம் ரசிக்கும் படி தானே இருந்தது. எரிச்சல் வரவில்லையே (?!!). பின் எதற்கு சந்தேகப்பட வேணும்? அவளுக்கு பிரசாத் இப்டி அமைந்ததனால், பார்க்கும் ஆண்களை எல்லாம் ஏன் வெறுக்க வேண்டும்? என்ன லாஜிக் இருக்கு இதன் பின்? (என்று நான் கேட்கவில்லை..அருணா கேட்கிறாள்)
தேவிக்கு பிரசாத்தையும் சுதரையும் பற்றிய குழப்பங்கள் தானே இருக்கிறது? அதனால் அவர்கள் இருவர் கேரக்டரை மட்டும் ஜூம் பண்ணியிருந்தேன் மதி சார்.
ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் சார். இனி வரும் கதைகளில் இந்தக் குழப்பங்கள் வராதவாறு பார்த்துக் கொள்கிறேன்.
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
கதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.
சில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.
ஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ?! ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.
பாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....
என்றென்றும் நட்புடன்!
கதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks