Results 1 to 7 of 7

Thread: இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )



    வயதுக்கு வந்த நாள் முதல்
    தொல்லையின் தொடக்கம்
    எங்கும் பார்க்கப்படும் பார்வையில்
    எல்லாம்,என் இதயத்தை
    அவர்களின் கண்களுக்கு காட்டமாலே
    விளையாடுகிறது.இளமை எனும் சதை துண்டு
    எங்கோ இருந்து வந்தவன் எழுதிய
    வெற்று காதல் காகிதம்,அதை படித்தவர்கள்
    பிறப்பின் தொடக்கத்தில் தேவதை மஹாலட்சுமி என்று
    கொஞ்சிய உதடுகள் (பெற்றவர்கள் )கூட
    "குடும்ப மானத்தை வாங்காதே எங்கயாவது
    கண் காணாத இடத்துக்கு போயிடு"இன்னும் இன்னும்
    உள் நாக்கின் நீளம்தான் ஒரு சாட்டையாய்
    அனலாக வீசப்பபட்டு அடித்து கொண்டு வரும் வார்த்தைகள்
    வெறுமைக்கு தள்ளுகிறது என்னை :hmmm:

    கூட்டத்தின் நடுவே குழப்பம்தான்
    கும்மிருட்டில் மாட்டி கொண்டு அழும் குழந்தையாய் போல
    சுற்றி உள்ளவர்களின்முகமூடியால்,
    நல்லவர்களும் கெட்டவர்களும்,ஒரே மாதிரி
    குழந்தையாய் கொஞ்சிய அக்கம் பக்கத்தவர்கள் கூட
    பருவ கால செழிப்பை :O நெருஞ்சி முள்ளை போல் குத்துகின்ற
    அவர்கள் பார்வையின் வக்கீரம்
    என் உடலின் சதை துண்டுக்கு,

    இன்னும் வாழ்வு இருக்கு என்று எண்ணி
    திருமண வாழ்க்கையில் வருபவனாவது என்னை
    புரிந்து கொள்வன்என்று,
    ஏங்கிய காலங்கள் எல்லாம் ஏமாற்றி
    நகைகளையும் என் புன்னகையும் ஒன்றாக சேர்த்து
    அடமானம் வைத்து விட்டாவானாகி விட்டான் என்னவன்.
    அடிக்கடி வேட்டையாடபடும் மிருகத்தை போல
    வேட்டையாடபடுகின்றன என் சதை துண்டுகள்
    எதையும் காதில் வாங்க வல்லவன் என்னவன்
    தூக்கி எறியப்பட்ட கனவுகளுடனும்
    கசக்கி பிழியும் கரும்பு சாறை போலவும்
    கண்ணீரின் :cry2: இரவுகள் அவனுடன்
    பூத்த நிறம் மாறும் கீழே விழும் பூக்களுக்கு
    மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு?????

  2. #2
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    23,124
    Downloads
    6
    Uploads
    0
    ஒரு சில பெண்களுக்கு நிகழும் அவலங்களை எடுத்துசொன்ன விதம் அழகு .
    வாழ்த்துக்கள் . நன்று.
    பிரகாஷ்

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல சோகம்..

    எதிர்பார்ப்புகள் நியாயம்தான்.

    பாராட்டுக்கள்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இது ஒரு கொடுமை!
    இப்படியும் பல மனிதர்கள்!

    பாராட்டுகள் நந்தகோபால்
    என்றென்றும் நட்புடன்!

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பெற்றவர்களிடத்திலேயே பெண்ணைப் பற்றிய புரிதலும் நம்பிக்கையும் இல்லாமை மிகவும் கொடுமை.

    இந்நிலையில் மற்றவரைப் பற்றி என்ன கருத்து சொல்வது? அப்பெண்ணின் நிலை மிகப் பரிதாபம்தான்.

    பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    வளர்ச்சி என்பது நமக்குச் சாதகமானதா?

    வளர்ச்சி என்றாலே ஏதோ ஒன்றை இழந்துவிட்டு ஏதோ ஒன்றை பெற்றதன் குறியீடு தானே!

    * அப்பாவை பேருந்து நிறுத்தத்தில் பார்த்த மாத்திரத்தில் கட்டிக் கொள்ள முடிவதில்லை.

    * ​அம்மாவுடன் கடைக்குச் செல்ல முடிவதில்லை.

    * தங்கையுடன் ஓடிப் பிடித்து விளையாட முடிவதில்லை.

    * தனியிரவில் அண்ணனுடன் சைக்கிளில் செல்ல முடிவதில்லை.

    * தெருவில் நடந்து கொண்டே லாலிபப் சப்ப முடிவதில்லை.

    * நண்பனின் கைப் பிடித்து நடக்க முடிவதில்லை.

    * சத்தம் போட்டு அழக் கூட முடிவதில்லை.

    அத்தனை அடக்குமுறைகளுக்கும் ஒரே காரணம் - 'நீ பெரிய பொண்ணா வளர்ந்துட்ட..இனி பொறுப்பா நடந்துக்கணும்'

    பெரிய பெண்ணாகி இழந்ததன் பட்டியல் நீளமானது. என்ன பெற்று விட்டோம் சுமைகளைத் தவிர, சுகங்களாய்?

    வாழ்த்துக்கள் நந்தா..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    மிகுந்த வீரியமும் கனமும் தீவிரமும் செறிவும் மிகுந்த வார்த்தைகள்

    இன்னும் கொஞ்சம் கொஞ்சம் செதுக்கல் நீக்கல் கொண்டு படித்திருந்தால் மிக மிக சிறந்த ஒரு கவிதையாக உருவாகியிருக்கும் !

    மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு????? கேள்விக்கு பதில்இல்லை

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •