இன்றைய சூழலில் இது ஒரு மாறுபட்ட உண்மை பார்வை..
இன்றைய சூழலில் இது ஒரு மாறுபட்ட உண்மை பார்வை..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
நன்றி தைனிஸ், நாஞ்சில் த.க.ஜெய் .
பேருந்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் "நிலை"யிலிருந்து கண்களை வீசியுள்ளார்கள். அந்த வகையில் பார்க்கையில் அந்த இளைஞனில் பிழையில்லை என்று தோன்றுகிறது. ஒருவராவது "மனிதன்"நிலையிலியிலிருந்து பார்வை வீசியிருந்தால் அவ்விளைஞனுக்கு சுளீர் கொடுத்தது போலிருக்கும்.
காந்தியின் போராட்டம் வென்றதற்கு உணர்த்தியமையே காரணம். உணர்த்துதலை நாம் எவரும் செய்யத் துணிவதில்லை. அவ்விளைஞனுக்கு உணர்த்த தட்டிக் கேட்க வேண்டும் என்றில்லை. அப்பெரியவருக்கு இருக்கையை விட்டுக் கொடுத்தாலே போதும். எல்லா விடயங்களிலும் நாம் இப்படித்தான் தப்பர்த்தம் கொண்டு தவறிழைக்கின்றோம்.
நல்ல கதை. பாராட்டுகள் முரளி.
நன்றி அமரன்.
சரியாகச்சொன்னீர்கள் அமரன்!
ஆனால் உணர்த்தினாலும் உணரக்கூடிய மனநிலையில் பெரும்பாலோர் இருப்பதில்லை. அப்படியே உணர்ந்தும் உணத்தியும் காரியங்கள் செய்தால் அதற்க்கும் ஒரு சுயநலத்தை கற்பித்தும் 'வந்துட்டார்யா வள்ளலு" என்று ஏளனம் செய்தும் சுயநலமிகுந்தும் வக்கரித்துப்போயுமிருக்கிறார்கள் பலர்.
என்றென்றும் நட்புடன்!
பார்வைகள் பலவிதம் ! http://www.tamilmantram.com/vb/image...smiley-077.gif
நண்பரே, இது கற்பனை கதையாக இருந்தால் சரி. உண்மைச் சம்பவமாக இருந்தால், ஒரு கேள்வி, நீங்கள் முதல் நிறுத்ததிலேயே ஏறி அமர்ந்து விட்டீர்கள். ”ஐந்து இறுக்கைகள் காலியாகவும் இருந்தன.” - என்றும் எழுதியிருகிறீர்கள். நீங்கள் எழுந்து அந்த பெரியவருக்கு இடம் கொடுத்திருக்கலாமே? - தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நின்று கொண்டு வருவதில் உள்ள சிரமம் உணர்ந்து நான் கூட இடம் கொடுத்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.
நன்றி இருங்கோவேல். உங்கள் நகைச்சுவையை நான் ரசித்தேன்.
இது ஒரு கற்பனைக் கதை. ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் எவ்விதம் பார்க்கிறார்கள், பார்வைக் கோணம் என்பது என்ன என விளக்கவே இந்த கதை. சமூகம் சார்ந்த மனவியல்.
உண்மையான சம்பவம் என்றே கூட வைத்துக் கொள்வோம். இந்த வண்டியில் நான் அமர்ந்திருந்தேன் என யார் உங்களுக்கு சொன்னார்கள்? யாரோ சொல்லிக் கூட நான் இந்த கதை எழுதியிருக்கலாமல்லவா? அல்லது நான் அந்த பெரியவரை விட வயது முதிர்ந்தவனாக கூட இருக்கலாமல்லவா?
இப்படி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கதையை, அந்த பேருந்தின் ஓட்டுனர் கூட எழுதியிருக்கலாம். நடத்துனர் சொல்லி, அவர் எழுதியிருக்கலாம்.ஓட்டுனர் எழுந்து இடம் கொடுத்திருக்கலாமே என்று நாம் சொல்ல முடியுமா? ஆவர காரியமா அது?
பாருங்கள், இந்த கதையை படித்த மற்றவர் விமர்சனத்திற்கும், உங்கள் பார்வைக் கோணத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்?
எனக்கென்னவோ, அந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், நிச்சயம் எழுந்து இடம் கொடுத்திருப்பீர்கள் எனவே தோன்றுகிறது. ஏனென்றால், நீங்கள் தமிழ் மன்ற உறுப்பினர்.
Last edited by முரளி; 22-05-2013 at 03:38 AM.
என்ன முரளி, பேருந்தில் ஏறினால் எறங்கறதுக்குள்ளே ஒரு கதை எழுதிடுவீங்க போல இருக்கு.
மிக இயல்பாய் ஒரு பேருந்தில் பார்க்கும் தினசரி காட்சியை வைத்து ஒரு சிறு கதை எழுதி இருப்பது உங்கள் திறமையை காட்டுகின்றது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
நன்றி மும்பை நாதன் !
அன்றாடம் பேருந்தில் நடக்கும் நிகழ்வுகளை அருமையாய் கதை ஆக்கி இருக்கிறீர்கள்.
நம் மனசாட்சியை உரசி பார்க்க செய்கிறது.
கீழை நாடான்
மனித நேயம் என்ற சொல் வழக்கொழுந்தி விட்டது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks