எல்லோரும்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்,
எல்லோருக்கும்
ஏதேனும் இருக்கிறது
விரைந்து செல்ல ,
அலுவலகம்
அல்லது வீடு ,
இல்லையென்றாலும்
இருக்கிறது ஏதோ ஒன்று,
எவர் குறித்தும்
எவருக்கும்
எதுவுமில்லை,
எவருக்கும் ஏதேனும்
நிகழ்ந்தால்
அன்றைய விவாதத்தில்
அவர் பெயரே எரிபொருள்,
சிலர் தங்களுக்குள்
சலசலத்து கொண்டனர்,
சிலர் நித்தியத்தை
கொண்டதாய் பறையடித்தனர்,
அந்த கந்தலாடை
சிறுமி
மரத்தின் உதிர்
மஞ்சள்
மலர்களை கையிலெடுத்து,
புன்னகைத்து முத்தமிட்டு
தழுவியபோது ,
பெருமூச்சுடன்
உயிர்த்தெழுந்தது,
எல்லா தெய்வங்களும்
பிரபஞ்சமும் ,
Bookmarks