Results 1 to 3 of 3

Thread: இறுதி விசும்பல்கள்..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    இறுதி விசும்பல்கள்..!

    இறுதி விசும்பல்கள்..!




    விழும்புகளின் விசும்பல்கள்
    கேட்பதே இல்லை யாருக்கும்..


    உயிரோசைகளின் சத்தமெல்லாம்
    மலையுச்சியின் விழும்பின்
    காதுமடலெங்கும் ஒலித்தொலித்து
    மரத்துக்கிடக்கின்றன..
    குயிலோசை கூட அறியாதபடி..


    மரத்தின் உச்சிக்கொம்பெங்கும்..
    இளந்தளிர்களின் ஓசை
    புரிவதே இல்லை அதிலேறும்
    குரங்குகளுக்கும் குருவிகளுக்கும்..
    கிளை முறிந்து விழும் தருணங்களை
    நடுங்கியபடி எதிர்கொள்கின்றன அவை..


    இறுதிக் கணங்களின்
    சுமையான படுக்கையின்
    பழுப்பேறிய தலையணையில்
    விசும்பிக் கரைந்த துயர்
    புரிவதே இல்லை யாருக்கும்..
    தன் மரணம் வரும்வரையிலும்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. Likes ஜானகி liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post


    இறுதிக் கணங்களின்
    சுமையான படுக்கையின்
    பழுப்பேறிய தலையணையில்
    விசும்பிக் கரைந்த துயர்
    புரிவதே இல்லை யாருக்கும்..
    தன் மரணம் வரும்வரையிலும்..
    சத்தியம் சுமந்துநிற்கும் வரிகள்!

    தன் மரணம் வரையிலும் அறிந்துணர இயலாத அன்றைய பல இறுதி விசும்பல்களைப் பற்றிய ஞானோதயம் கூட இன்றைய இறுதி விசும்பல்களின் வேதனையை ஆழமாய்க் கூட்டக்கூடும். அருமை பூமகள்.

    சிறு சந்தேகம் பூமகள்... விழும்பு குறிப்பது விளிம்பைத்தானோ?

  4. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    உயிர் வாழும் காலமெல்லாம்
    உள்விழுங்கும் கண்ணிர்துளிகலொம்
    உயிர் விடும் தருணமேனும்
    தலையணை விசும்பல்களாய்
    தனிமையில் கரையும்!


    அருமையான விடையம் என்பதைவிட ஆழமான விடையம்!

    அடுத்தவர் படுதல்கள் பற்றி கவலை படாதவர்கள்
    அவர்களின் இறுதிநாட்களில் தன்னிரக்கத்தில்
    தவிக்க நேர்ந்தாலும் தன்னால் அடுத்தவர் அடைந்த துயர்களை என்னிப்பார்க்கவியலும் என்பது சந்தேகத்துக்குரிய விடையம்.

    சிந்தனையைத்துண்டும் விளிம்பு!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •