மழையை எதிர்பார்த்திருந்தேன்
கிடைத்ததோ ஜலதோஷம்!
மழையை எதிர்பார்த்திருந்தேன்
கிடைத்ததோ ஜலதோஷம்!
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
புரியவேயில்லை...
கவிதையைபோல வாழ்க்கை..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதுதான் வாழ்க்கை. வெயில் காலத்தில் ஜலதோஷம் வருவதும், மழை காலத்தில் அம்மை போடுவதும் முரணாகத் தெரிந்தாலும் வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்வுகள்தான். எனவே எதுவந்தாலும் அதை எதிர்கொள்கின்ற துணிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இருவரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கிய இராஜிசங்கர் அவர்களுக்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சுத்தமா புரியலையா? ஸாரிங்க சு.பி
ஜென் கவிதையாட்டம் ட்ரை பண்ணினேன். இப்டி 'பன்' கவிதையா போய்டுச்சு! (பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா)
நான் என்ன கோணத்தில் எழுதினேன் என்பதை விளக்கிவிடுகிறேன்.
//மழையை எதிர்பார்த்திருந்தேன்
கிடைத்ததோ ஜலதோஷம்!//
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்திருந்தேன். அந்த மகிழ்ச்சிகளால் சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வரலாம்-மழையைப் போல. மழை என்பது இங்கு மகிழ்ச்சியின் குறியீடு. மழையில் நனைந்த மகிழ்ச்சிக்குப் பிறகு ஜலதோஷம் என்ற குட்டி இடைஞ்சல் வரலாம். ஆனால் அது நம்மைப் பெருமளவு பாதிக்காது. ஏனென்றால் நாம் அதை ரசித்து செய்திருக்கிறோம். ஜலதோஷம் இங்கு இடைஞ்சலின் குறியீடாக இல்லாமல் நம் மகிழ்ச்சிகளின் 'மொமெண்டோ'வாக இருக்கும்.
'கிடைத்ததோ ஜலதோஷம்' என்ற இரண்டாம் வரியில் கூற விழைந்திருப்பது: எனக்கும் இடைஞ்சல்கள் வந்தது. ஆனால் அது மகிழ்ச்சியின் நினைவாக இல்லை. துக்கத்தின் குறியீடாகவே இருந்தது. இடைஞ்சல்களை ஏற்கவும் தயாராக இருந்தேன், மகிழ்ச்சிகளால் அது ஏற்பட்டது என்றால். ஆனால் கடைசி வரை அந்த மகிழ்ச்சிகள் வரவேயில்லை. மிஞ்சி நின்றது துக்கங்கள் மட்டுமே!
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
ஜலதோஷம்னா தண்ணியில கண்டமா..
மழையை மட்டும் எதிர்பார்த்திருந்திருப்பீங்க.. பெருமழையா வந்திருக்கும் போல...
ஜென்னில் எதிர்ப்பார்ப்புகள் ஏது ?
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks