Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 42

Thread: சிறுகதை உத்திகள்

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிறுதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்
    2. நாட்குறிப்புகள்

    நாட்குறிப்புகள் மூலம் கதை சொல்லும் போது எது உண்மையில் நடந்தது, எது கதைமாந்தர் மனதில் நடந்தது என்று வாசகர் தெளிவாக அறியும் படியாக எழுதுதல் வேண்டும். இதில் குழப்பம் இருக்குமானால் அது ஆசிரியர் வேண்டுமென்று அமைத்ததாக இருக்கவேண்டும்.

    புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் நாட்குறிப்புகள் மூலம் கதை சொன்னதாக அவசரத் தேடலில் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கதைகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடலாம்.

    1. எனினும், உதகை சத்யன் என்பவர் எழுதிய "’குண்டு’ குமாரின் டயரி" என்னும் கதையில் இந்த உபாயம் பயன்படுத்தப் படுகிறது:
    http://www.vallamai.com/?p=2923. கதையிலிருந்து ஓரிரு மேற்கோள்கள் கீழே.

    10-07-2010
    இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
    ...

    05-09-2010
    அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார்.

    2. நாட்குறிப்புகளைக் கதையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கதையில் வரும் நாட்குறிப்புகள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் அற்புதம்!

    ஆலந்தூர் மன்னனின் ’யாதுமாகி...’ சிறுகதையில் ஒரு டயரியே கதையாகவும் கதையே டயரியாகவும் இணைந்து, இழைந்து இரும்பைப் பொன்னாக்குகிறது. கதைசொலல், காட்சிகள், கதைமாந்தர் குணங்கள், கதையின் நடை, களன், காலம் என்று எல்லாக் கூறுகளிலும் சிறந்ததாக விளங்கும் இந்தச் சிறுகதை, கதையெழுத விழையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று.
    http://www.tamilhindu.com/2011/09/yaathumaagi/

    கதையிலிருந்து ஒரு சின்ன ’சாம்பிள்’:

    நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.

    3. ரமணியின் ’அவன் அவள்’ சிறுகதையின் முடிவில் இந்த உத்தி கதைமாந்தரின் குணத்தைக் குறிப்பாகச் சொல்லப் பயன்படுகிறது.
    http://www.indusladies.com/forums/st...65-2980-a.html

    அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?

    கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.

    ஜனவரி 5, சனி.
    அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?

    ஜனவரி 6, ஞாயிறு.
    வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.

    *****

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிறுதை உத்திகள்
    3. கதை சொல்லும் உபாயங்கள்: கடிதங்கள்


    மின்-அஞ்சல், மின்-அரட்டை, அலைபேசிக் குறுஞ்செய்தி -- இன்று இவைதான் நம் உறவு, செய்தி மற்றும் கருத்தின் எழுத்துப் பரிமாற்றத்திற்கு இன்றியமையாக் கரணங்கள். இவற்றின் வசதியும் விரைவும் பரப்பும் பெருக்கமும் நம் எல்லார்க்கும் மிகவும் பயன்பட்டாலும், இவற்றின் குறுக்கம் நம் மொழியை, மனதைக் குறுக்கிவிட்டன என்று துணிந்து கூறலாம். முட்டாள்தனமான மின்-அஞ்சல் மொழிநடையே இன்று பலருக்கு இலக்கிய நடையாகிவிட்டது. குரலொலி எழுத்துக்கூறுகள் (phonetical alphabets) மூலம் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி இன்று நம் கவிதை கதை கடிதம் கருத்துகளைத் தட்டெழுதும்போது, கையெழுத்தில் மொழியின் இயல்பான வரிவடிவங்களில் எழுதும்போது வரமுடியாத பிழைகள் மலிந்துவிடுகின்றன. இன்றைய அவசர உலகில் நாளை நம் குழந்தைகள் கையெழுதி மொழி கற்பதை விடுத்துத் தட்டெழுதிக் கற்று எழுத்துகளின் வரிவடிவங்களையே மறந்துவிடுவார்களோ என்றுகூட அச்சம் ஏற்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் அன்றைய வாழ்வில் கையெழுத்துக் கடிதங்களின் பங்கினை இன்று நம்மில் பலர் அறியாதிருப்பது வியப்பல்ல. காகிதமும் மசியும் பேனாவும் கொண்டு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தான் அவற்றின் அருமையும் பெருமையும் இலக்கியமும் புரியும்.

    கடிதங்களில் கதை சொல்லும் போது இருவரின் உரையாடலாக அமைத்து அவர்களின் குணத்தையும் கதையையும் விவரிக்கலாம். அல்லது ஒருவர் தன் மனதை வெளியிடுவதாக அமைத்துத் தன்மைப் பார்வையில் எழுதலாம். கடிதங்கள் கதையின் திருப்புமுனையாக அமையலாம், கதையை நகர்த்தலாம், முழுக்கதையையும் கூடச் சொல்லலாம்.

    1. ஆர்.சூடாமணி அவர்கள் தன் கதை ’பூமாலையில்’ ஒரு கடிதம் மூலம் சிறுகதைக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறார். கதையை முன்னிலைப் பார்வையில் சொல்வது மட்டுமல்லாமல், கதையின் வரும் சம்பவங்களையும் செயற்கையாகத் தெரியாமல் அந்தக் கடிதத்திலேயே நுழைத்து விடுகிறார். கதையின் செய்தியும் முடிவும் அலாதி. கதையின் முடிவு பற்றி வாசகர்கள் அவசியம் பின்னூட்டம் இடுவார்களாக.
    http://azhiyasudargal.blogspot.in/20...g-post_27.html

    அன்புள்ள ரம்யா,

    உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.

    கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ”எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ” என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை...

    *****

    2. குரு அரவிந்தன்: ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
    http://www.sirukathaigal.com/சிறப்பு...-கடி-2/

    மகளின் கடிதம் கண்டு தந்தை அவள் எதிர்காலம் குறித்து முக்கியமானதொரு முடிவினை எட்டுகிறார்.

    மனைவிக்கும் அவருக்கும் மனத்தாபம் முற்றி மனைவி விவாகரத்துக் கோரும் போது கணவர் அவர்களது பெண்ணின் எதிர்காலம் குறித்துக் கேட்கிறார். மனைவியே அது அவர் பெண்ணல்ல என்று கூறி அதை நிரூபித்துக்காட்டுவதற்காக மகளை மரபணு (DNA) சோதனைக்கு உட்படுத்துகிறாள். வெளியூரில் படிக்கும் மகளிடம் இருந்து தந்தைக்கு ஒரு கடிதமும் அந்த மரபணு அறிக்கையும் ஒரே தபாலில் வருகிறது. தந்தை கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கிறார்...

    *****

    3. புதுமைப்பித்தன்: கடிதம்
    http://www.projectmadurai.org/pm_ete.../pm0389_02.pdf

    ’பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்’ என்று அந்த எழுத்தாளர் கனவு காணவில்லை; அதே சமயம் பேனாவை வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கவும் அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் புகழ்ந்தாலும் சமூகத்தில் நூற்றில் ஒருவராக அவரை மதித்ததால் அவருக்கு எழுதுவதில் சலிப்பு ஏற்படுகிறது. நல்ல கதையை ரஸிக்க எவரும் இல்லையென்றால் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வியால் அவரது இப்போதைய சிறுகதை பாதியில் நிற்கிறது. இந்த சமயத்தில் அவர் கதையொன்றைப் புகழ்ந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது...

    *****

    4. அண்ணாதுரை: மூன்று கடிதங்கள்
    http://www.openreadingroom.com/wp-co...adithangal.pdf

    Typical தி.க. பிரசாரக் கதையாக இருந்தாலும் இந்தச் சிறுகதையில் உள்ள மூன்று கடிதங்கள் ஒரு சுவாரசியமான திருப்பத்தைத் தருகின்றன!

    *****

    5. சுஜாதா: மூன்று கடிதங்கள்
    http://www.mediafire.com/?j15hgqmemoz

    இலக்கியம் படைப்பதில் சுஜாதாவுக்குப் சில முகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. எனினும் மிகப் பெரும்பான்மையான அவரது சிறுகதைகளிலும் புதினங்களிலும் வணிக உத்தியே தலைதூக்கி நிற்கிறது. இந்தக் கதையில் வரும் மூன்று கடிதங்களும் இது போலத்தான். இதில் இவருக்கு ஒரு பெருமை வேறு!

    *****

    கதைக்குள் கதை உபாயம் பற்றி அடுத்த பதிவில்...
    Last edited by ரமணி; 06-05-2013 at 03:29 PM.

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிறுதை உத்திகள்
    4. கதை சொல்லும் உபாயங்கள்: கதைக்குள் கதை


    கதைக்குள் கதை என்னும் உபாயம் நம் பஞ்சதந்திரம், புராணங்கள், ராமாயண-மகாபாரத இதிகாசங்கள் போன்ற பழமையான நூல்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் உத்தியாகும். கதைக்குள் அமையும் கதை ஒரு துணைக்கதையாகவோ, கிளைக்கதையாகவோ நிகழ்ந்து, மூலக்கதையின் செய்தியை வலியுறுத்துவது, மூலக்கதை மாந்தர் ஒருவரின் தற்போதய நிலையின் பின்னுள்ள கருமவினைகளைக் காட்டுவது, அல்லது வெறுமனே களிப்பூட்டுவது போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இரண்டு கதைகளுக்கும் இடையே ஓர் இணையான போக்கு காணப்பட்டு, துணைக்கதையில் சொல்லும் பொருள் மூலக்கதையில் மறைபொருளாள உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.

    சிறுகதையின் வடிவம், ஒருமை போன்ற கூறுகள் சிதைவுறாமல் கதைக்குள் கதை அமைப்பது கடினம். எனினும் இந்த உத்தியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இல்லாமல் இல்லை. நட்ட நடுவில், முடிவுக்குச் சமீபத்தில் ஆரம்பமாகும் சிறுகதையில் ஒரு வெட்டாக முன்கதையை விவரிப்பது வழக்கம். இந்த முன்கதை தன்னளவில் ஓர் தனிக்கதை அல்ல என்பதால் கதைக்குள் கதை ஆகாது என்பதைப் புரிந்துகொள்வோம்.

    1. புதுமைப்பித்தன்: கட்டிலை விட்டிறங்காக் கதை
    (http://www.thoguppukal.in/2010/06/blog-post_1841.html)

    விக்கிரமாதித்த மன்னனின் சிம்மாசனப் படிகளில் வீற்றிருந்த பொம்மைகளில் ஒன்று உரைக்கும் கதைக்குள் கதையாக நையாண்டியுடன் ஆசிரியர் சொல்லும் கதையில் மூட்டைப் பூச்சிகள் கதைமாந்தர்கள்!

    2. ரமணி: பெண்மையின் அவலங்கள்
    http://www.tamilmantram.com/vb/showt...்கள்

    கதையின் நாயகியே தன் கதையை ஒரு சிறுகதையாக எழுதும்போது எழுகின்ற கதைக்குள் கதை விழைந்ததும் நிகழ்ந்ததும் விவரிக்கிறது.

    3. ரமணி: சார்பு எழுத்துகள்
    http://www.tamilmantram.com/vb/showt...ுகள்

    வாழ்வின் யதார்ததைச் சரியாக ஆராயாமல் துணையிழந்த இரண்டு பெற்றோர்கள் ஒன்றை முனைய, அவர்களின் குழந்தைகள் இயல்பான வேறொன்றை முனைகிறார்கள். இரண்டு கதைகள் சந்திக்கும் போது உண்மைகள் புலப்பட்டுப் பார்வை தெளிவடைகிறது.

    *****

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    மிக அற்புதமான முறையில் சிறு கதை எழுதும் ஆர்வம் உடைய அனைவருக்கும் பயன் தரும் வகையில் நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இந்தத்திரியில் கொடுத்து இருக்கிறீர்கள், ரமணி.

    உங்களது இந்த பதிவுகளைப் பார்த்த பிறகு நல்ல முறையில் சிறு கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுகிறது.

    மிக மிக நன்றிகள், ரமணி.

    மும்பை நாதன்

  5. Likes ரமணி liked this post
  6. #29
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    இன்னும் முழுதாகப் படிக்கவில்லை, மேம்போக்கான பார்வைதான் பார்த்தேன். மிக அருமையான மிகத் தேவையான திரி இது. சிறுகதையைக் கற்றுக்கொள்ள சிறுகதைகளையே படிக்கவேண்டும். மிக அற்புதமான உத்திகளை நிறைய எழுத்தாளர்கள் கையாண்டிருக்கிறார்கள். உதாரணங்கள் மிகவும் அவசியமானவை...

    நிர்வாகிகளிடம் ஒரு வேண்டுகோள், : இத்திரி அனைவரையும் சென்றடைய ஒட்டி வைக்கலாம் என்பது என் யோசனை.

    பொதுவாக எனக்கொரு எண்ணம் உண்டு. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மிக நுட்பமான, அதிர்ச்சிகரமான, உள்ளோட்ட உத்தி நிறைய கொண்ட கதைகள்.. அவைகளை படித்து வந்தாலே ஓரளவு கதைகளை எழுத முடியும் என்று நினைக்கிறேன். சுஜாதா நிறைய புதுமுயற்சிகள் செய்திருப்பார். குறிப்பாக விஞ்ஞான சிறுகதைகள் நிறைய சிறுகதை உத்திகள் கொண்டது. ஜெ.கா, ஆதவன், பிச்சமூர்த்தி, கி.ரா, லா.ச.ரா போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

    வாழ்த்துக்கள் ரமணி!

  7. Likes ரமணி liked this post
  8. #30
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    ​ரமணி சார், நேரமிருந்தால் இந்தப் பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போங்களேன்..

    http://www.tamilmantram.com/vb/showt...AE%B2%E0%AE%BF
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  9. Likes leomohan liked this post
  10. #31
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by veruppuvijay View Post

    நிர்வாகிகளிடம் ஒரு வேண்டுகோள், : இத்திரி அனைவரையும் சென்றடைய ஒட்டி வைக்கலாம் என்பது என் யோசனை.
    பரிந்துரை ஏற்கப்பட்டது.

  11. Likes ரமணி liked this post
  12. #32
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    நிர்வாகிகளிடம் ஒரு வேண்டுகோள், : இத்திரி அனைவரையும் சென்றடைய ஒட்டி வைக்கலாம் என்பது என் யோசனை.
    மிக அருமையான ஆலோசனை. விடுத்த வெறுப்புவிஜய்க்கும், வேண்டுகோளை ஏற்ற மன்ற நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ரமணியின் "சிறுகதை உத்திகள்" ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரை மட்டுமின்றி, வழி காட்டும் துணையாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நன்றி ரமணி.
    Last edited by முரளி; 01-09-2013 at 04:10 AM.

  13. Likes கீதம், ரமணி liked this post
  14. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    இந்தக் கட்டுரையில் இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது. நேரம் கிடக்கும் போது தொடர்கிறேன்.

  15. #34
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    இந்தக் கட்டுரையில் இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது. நேரம் கிடக்கும் போது தொடர்கிறேன்.
    காத்திருக்கிறோம்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  16. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி ..அருமையான விளக்கம்...வாழ்த்துக்கள்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  17. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஆறு சொற்களில் ஒரு கதை

    புகழ்பெற்ற கதையெழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு முறை ஆறு சொற்களில்
    அமையுமாறு தம்மால் ஒரு கதை எழுத முடியும் என்று பந்தயம் கட்டி ஜெயித்தார்.

    அந்தக் கதை உலகின் மிகச் சிறிய கதைகளின் முன்னோடி யாகியது:
    For sale: baby shoes, never worn

    இன்று அறுசொற் கதைகளுக்கென்றே ஒரு வலைதளம் உள்ளது!
    http://www.sixwordstories.net/

    இந்த வலை தளத்தில் கண்ட சில சுவாரஸ்யமான ’கதைகள்’ கீழே.

    01. We’re lying in bed. She’s lying.
    02. "Joining the President is his husband..."
    03, Strangers. Friends. Best friends. Lovers. Strangers.
    04. Torched the haystack. Found the needle.
    05. Sorry soldier, shoes sold in pairs.

    06. Unwanted boy grows into wanted man.
    07. Free rent. Three squares. Maximum Security.
    08. The smallest coffins are the heaviest.
    07. Smoking my very last cigarette. Again.
    08. Should’ve. Could’ve. Would’ve. Didn’t. Didn’t. Didn’t.
    09. I’m beside myself; cloning machine works.
    10. Underwater collector. Bad lover. Lone shark.

    11. Alzheimer’s Advantage: new friends every day!
    12. Painfully, he changed 'is' to 'was'.
    13. Ex-wife, ex-husband are fine. Kids aren’t.
    14. Five armed vampires enter blood bank.
    15. Murderous rooster slaughters hens: foul play!

    தமிழில் இதுபோல் நான் முயன்றதில் உதித்த சில ’கதைகள்’.

    1. மன்னனின் வேட்டையில் சிக்கியது மான். திருமணம் செய்துகொண்டான்.

    2. தலைவனும் தலைவியும் ஊடிப் பிரிந்தனர். தோழியைக் காணவில்லை!

    3. புலவர் மன்னனைக் கடிந்து பாடினார். மன்னன் பரிசளித்தான்.

    4. அண்ணன் செத்தால் திண்ணை காலி. தம்பி முந்திக்கொண்டான்.

    5. வைக்கோலை எரித்துத் தேடினர். அரசியின் தங்க ஊசி!

    நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரே ஒரு நிபந்தனை, ஆறு சொற்களில் ஒரு கதை இருக்கவேண்டும்,
    கவிதை அல்ல.

    ரமணி, 27/08/2014

    *****

  18. Likes முரளி liked this post
Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •