ஜாடிகளில் பலவகை உண்டு. பீங்கான் ஜாடிகள் ஊறுகாய் போடுவதற்குப் பயன்படுகின்றன. கண்ணாடி ஜாடிகள் தின்பண்டங்கள் வைப்பதற்குப் பயன்படுகின்றன. மண்ணால் செய்த ஜாடிகள் எண்ணெய் ஊற்றி வைப்பதற்குப் பயன்படுகின்றன. அலுமினியம், பித்தளை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகிய உலோகங்களிலும் ஜாடிகள் செய்யப்படுகின்றன. ஆனால் தாமிரத்தால் சொம்புகள், குடங்கள், டம்ளர்கள் செய்யப்பட்டாலும் , ஜாடிகள் செய்யப்படுவதில்லை.
இதற்கு திருவள்ளுவர் ஒரு காரணம் சொல்கிறார். செப்பு ஜாடியில் அதன் மூடி, ஜாடியோடு பொருந்துவது போலத் தோன்றினாலும் ,உண்மையில் பொருந்தாது என்று சொல்கிறார். அந்தக் குறளைப் பார்ப்போம்.
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. ( உட்பகை-887 )
பொருள்:
=======
செப்பினது மூடி பிறருக்குத் தெரியாதபடி அவ்வளவு பொருத்தமாகக் கூடியிருந்தாலும், பொருந்தாமலே இருப்பதுபோல , மனத்திலே பகைமை கொண்டவன் , பிரிக்க முடியாத அளவுக்குக் கூடியிருந்தாலும், தக்க சமயம் வரும்போது பிரிந்துவிடுவான்.
என் ஐயம் :
========
செம்பினால் செய்யப்பட ஜாடிகளில் , மூடி பொருந்தாமல் இருக்குமா? அப்படியானால் அதற்கு அறிவியல் அடிப்படையில் என்ன காரணம் ? அல்லது இக்குறளுக்கு வேறு ஏதேனும் பொருள் உள்ளதா?
Bookmarks