யார் என்னை மயிலிறகால் வருடுவது என்றேன்...
நான் தான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்றாய்!
அங்கே பார்!ஒரு அழகிய வானவில் என்றேன் ...
ஐயோ அது என் புகைப்படம் என்றாய்!
யார் என் மேல் மழைச் சாரல் தூவுவது என்றேன்...
நான் தான் உன்னுடன் பேசுகிறேன் என்றாய்!
யாருடைய குழந்தை அது அழகாய் சிரிப்பது என்றேன் ...
அது என்னுடைய வளையல் சத்தம் தான் என்றாய்!
யார் என் பேனா மையிற்கு மெய் தந்தது என்றேன் ...
நான் தான் இப்போது முறைக்கிறேன் என்றாய்!
எப்படி இந்தக் கவிதையை முடிப்பது என்றேன் ...
என் கண்களில் உன் பார்வையை விலக்கு என்றாய்!
Bookmarks