நண்பா!!!நமக்குள் வைத்த போட்டியின் விதிமுறையில்
நாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம்
இரவில் மாறுதலுக்காக
வேலை செய்வோம் என்று உறுதி பூண்டு
தொடங்கினோம் வேலையை
அதை கேட்ட இரவு
சிரித்து கொண்டே சொன்னது
உங்களை ஒரேடியாக
துங்க வைக்க இது போதுமென்று
நண்பா!!!நமக்குள் வைத்த போட்டியின் விதிமுறையில்
நாம் சொன்னபடியே பகலில் தூங்குவோம்
இரவில் மாறுதலுக்காக
வேலை செய்வோம் என்று உறுதி பூண்டு
தொடங்கினோம் வேலையை
அதை கேட்ட இரவு
சிரித்து கொண்டே சொன்னது
உங்களை ஒரேடியாக
துங்க வைக்க இது போதுமென்று
இரவு உழைப்பில் கரைந்து போகும் மனிதனின் வாழ்நாட்கள் என்பதை உணர்த்தும் அருமையான விடையத்தை உள்ளடக்கிய கவிதை!
இது ஒர் இரவின் முடிவு!....படக்காட்சியும் அருமை!
ஆனால் எத்துனை தொழிலாலிகள் தங்கள்
வாழ்வின் விடியலுக்காக
.................... விழித்துக்கொண்டே
இரவுமுழுமையும்!
என்றென்றும் நட்புடன்!
உறக்கம் இறைவன் தந்த வரப்ரசாதம்.. இரவு தன் பணியை செவ்வென செய்கிறது....
மனிதன் நினைப்பதை செயல்படுத்த விடாமல் இயற்கை...
அருமையான கவிதை வரிகள் நந்தகோபால்...
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
உறக்கம் தொலைத்து உழைத்துகொண்டிருக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை இவ்வுலகில்...!
இயற்கையிலிருந்து மாறுபடும் எல்லாம் இடர்பாடுகளைத் தான் சந்திக்கும். ஆனால் என்ன செய்வது பூட்டை விற்று சாவி வாங்கும் வாழ்க்கை தானே பெரும்பாலான பேர்களுக்கு வாய்த்திருக்கிறது?
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
இயற்கை விதிமுறைக்கு...
எதிரான போட்டியின் விதிமுறையால்...
இம்முறையும் வெல்லபோவது விதியே...
அதை அழகாய் சொல்லி செல்லும் இக்கவியே.. வாழ்த்துக்கள்... நந்தகோபால்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம் தான் !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks