வரிசையில் வா!
மனிதனைப்போல்
முந்திச் செல்ல முயலாதே!
வரிசையில் வா!
மனிதனைப்போல்
முந்திச் செல்ல முயலாதே!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்ல கருத்தும் கவியும் காட்சியும். பாராட்டுகள் ஐயா.
எல்லா மனிதர்களும் அப்படி இருப்பதில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் சுனாமி தாக்கிய ஜப்பானில் உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையிலும் அம்மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக அமைதியாக வரிசையில் சென்ற காட்சி இன்னமும் கண்முன் வந்து வியப்பளிக்கிறது. பல மேலை நாடுகளில் பேருந்து நிலையங்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மக்கள் வரிசையாக நின்றே ஏறுகின்றனர். இருக்கைகள் நிறைந்துவிட்டால் வரிசை கலையாமல் அடுத்த பேருந்துக்காகக் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பேருந்துகளில் ஒழுங்குமுறை என்பதே கிடையாது. பேருந்திலிருந்து பயணிகள் இறங்கும்வரையில் , ஏறுகின்ற பயணிகள் காத்திருப்பதில்லை. இறங்கும்போதே முண்டியடித்துகொண்டு ஏறுகிறார்கள். மேலை நாடுகளில் இருக்கும் " காத்திருத்தல் பண்பாடு " இங்கும் வரவேண்டும்.
கீதம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நீரின்றி அமையாது உலகு
எனக்கு
நீயின்றி அமையாது வாழ்வு.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா ? என்னை
விட்டுப்பிரிந்து போன கணவன்
வீடு திரும்பல!
என்பது பழைய திரைப்பாடல்.
ஆனால் இன்று
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா ? என்னை
விட்டுப்பிரிந்து போன உன்னைக்
காணத் துடிக்கிறேன்.
என்று பாடத் தோன்றுகிறது.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
உண்மைதான் ஐயா. அவற்றுக்கு கூடு கட்ட இரவாணம் இல்லை, திண்ணைகள் இல்லை, மாடங்கள் இல்லை இன்றைய நவநாகரிக வீடுகளில். கண்ணாடி ஜன்னல்களில் முட்டி மோதி மூக்குடைந்து போகும் அவலம். ஆனால் அதிசயிக்கத்தக்க விதமாக அவை ஆயிரக்கணக்கில் தெருவெங்கும் வீடெங்கும், தோட்டமெங்கும் ஆரவாரிக்கும் அழகைக் கண்டு வந்தேன் சமீபத்திய இந்தியப் பயணத்தில்.
கலையரசி அக்கா தங்கள் வீட்டைச் சுற்றிலும் அவற்றுக்கென பல அட்டைப்பெட்டிகளைக் கட்டித்தொங்கவிட்டு குருவி மட்டும் உள்நுழையும் அளவு சிறிய துளையிட்டு, அவை வசிப்பதற்கான வசதி செய்துகொடுத்துள்ளார்கள். ஒரு ஜோடி குஞ்சு பொறித்துப் பறந்தவுடனேயே அடுத்த ஜோடி அதில் குடிபுகுந்துவிடுகிறது. எந்நேரமும் கீச் கீச் என்று அவற்றின் இனிய கீச்சொலி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இதுபோல் ஒவ்வொருவரும் செய்ய முடிந்தால் நம்மால் அழிந்துவரும் இனத்தை நம்மால் காப்பாற்றவும் இயலும்.
செல்போன் டவர்களின் கதிர் வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறதாம். அது உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. தானியங்களைக் கொத்தித் தின்னவரும் சிட்டுக்குருவிகளைத் தற்போது வீடுகளில் காண முடிவதில்லை. நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கு சிட்டுக்குருவி என்ற பறவையைக் காட்டமுடியாமல் போய்விடுமோ என்று எண்ணும்போது ஏக்கம் மேலிடுகிறது.
கிதத்தின் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சோவென்று கொட்டிய மழைக்குப்பின்
தட் தட்டென்று சொட்டும் மழையின் கீதம்
கேட்டு பல நாட்கள்... இல்லை இல்லை பல ஆண்டுகள் ஆகின்றன!
"நீரும்' இன்று நன்றாக கிளறி விட்டுவிட்டீர்கள்!
அதன் ஏக்கத்தையும்!
அவள் ஏக்கத்தையும்!
நன்றாயிருங்கள் ஜயா!...
என்றென்றும் நட்புடன்!
பணம் , பாதாளம் வரை பாய்கிறதோ ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஏழைக்குதான் குடும்ப கட்டுப்பாடோ ?- இந்த
வாழைக்கு இல்லையோ ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கத்திரிக்காயோ இல்லை கத்திரித்த காயோ ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நான் பிடித்த முயலுக்கு
இல்லை இல்லை கோழிக்கு
மூன்று கால்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks