மன்ற உறவுகளுக்கு வணக்கம். நம் தமிழ்மன்றத்தின் சிறப்பை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து ஏற்றத்தில் நிறுத்துகின்றன, கண்ணியமும் கட்டுப்பாடும் மிக்க இவ்வருந்தமிழ் மன்றத்தின் உறுப்பினர்களாய் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட, தமிழார்வம் நிறைந்த படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்களின் ஓயாத பங்களிப்புகள்.
ஒவ்வொரு காலாண்டிலும் மன்றத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மனங்கவர் பதிவர் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் முன்னிலை வகிப்பவர்களுக்கு அந்தக் காலாண்டின் மனங்கவர் பதிவர் பட்டமும் பதக்கமும் வழங்கப்பட்டுவருவதை அறிவீர்கள். நான்கு காலாண்டுகளில் முன்னிலை பெறும் பதிவர்களிடையே மற்றுமொரு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த ஆண்டின் நட்சத்திரப் பதிவராகப் பெருமைப்படுத்தப்படுவார்.
கடந்த வருடம் முதல் செயலாக்கம் பெற்றுள்ள இம்முறையில் இதுவரை நடத்தப்பட்ட மூன்று காலாண்டுத்தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குப் பெற்று நம் மனங்கவர் பதிவர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள்...
சிவா.ஜி அண்ணா அவர்கள் (ஏப்ரல்,மே,ஜூன் 2012)
கலைவேந்தன் அவர்கள் (ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2012)
ஜகதீசன் ஐயா அவர்கள் (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2012)
இம்மூவருக்கும் நம் வாழ்த்துக்களை இனிதே தெரிவித்துக்கொள்வதோடு, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2013 க்கான மனங்கவர் பதிவரைத் தேர்ந்தெடுக்க முன்வருவோம்.
மனங்கவர் பதிவர் தேர்தலுக்கான விதிமுறைகளை முன்பே அறிந்திருந்தாலும் நினைவுபடுத்தவேண்டியது என் கடமை அல்லவா?
1. கடந்த மாதங்களில் உங்கள் மனங்கவர்ந்த மன்ற உறுப்பினர் ஒருவரை முன்மொழியுங்கள். அவர் படைப்பாளியாகவோ, பின்னூட்டகராகவோ, விமர்சகராகவோ இருக்கலாம்.
2. ஒருவர் ஒருவரை மட்டுமே முன்மொழியலாம். (மனங்கவர்ந்த உறுப்பினரை முன்மொழியும் உரிமை மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் உள்ளது.)
3. கடந்த காலாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர்த்து பிறரைப் பரிந்துரைக்கவும்.
4. பரிந்துரைக்கான இறுதித்தேதி 31 மார்ச் 2013.
Bookmarks