அருமை. அருமை. சுமை அதிகமா குறைவா என்பது மனதில்தான் இருக்கிறது.

இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நடக்கும் போது யாராவது சுமை தூக்கி வந்து கொண்டிருந்தால் உடனே வழி விட வேண்டும் என்று நான் சிறுவனாய் இருந்த போதே என் தந்தை சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள்.

என்னுடைய 51 வயது வரையில் காலில் சுளுக்கு இருந்த போது தவிர மற்ற சமயங்களில் நான் 'போர்ட்டர்' வைத்துக்கொண்டது இல்லை.

ஆனால் சமீபத்தில் ஒரு வயதான போர்ட்டருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே என் சுமைகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

அவருக்கு பணம் கொடுத்து அனுப்பிய உடனே என் மகள் கேட்டாள்:

அந்த தாத்தாவுக்கு Help பண்ணனும்னுதானே டாடி...?

நான் புன்னகைத்தேன்.

மும்பை நாதன்