கையறு நிலைதான்!
இல்லை இடக்கை வலக்கை!
கையறு நிலையல்ல....
இருக்கிறது வாழ்க்கை!

கரமில்லாக் காயம்தான்,
உரமில்லா உள்ளமன்று!
அஞ்சிலே வளைந்துவிட்டன கால்கள்!
ஐம்பதானாலும் வளைத்துவிடுவான் வாழ்வை!

அச்சமோ, அனுதாபமோ தேவையில்லை யார்க்கும்.
முடியுமாயின் அப்பிஞ்சு அசந்துறங்கும்வேளை
அதன் உறக்கம் கலைக்காமல்
கொஞ்சம் வெந்நீர் ஒத்தடம்
கொடுத்திடுவோம் வாரீர்!