Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 42

Thread: சித்திரம் எழுப்பிய கவிதை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0

    சித்திரம் எழுப்பிய கவிதை

    இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.



    (கலி விருத்தம்)
    அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
    இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
    நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
    கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

    --ரமணி, 01/03/2013

    *****

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
    மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
    கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
    இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
    இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

    --ரமணி, 01/03/2013

    *****

  4. Likes ஜானகி liked this post
  5. #3
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    23,124
    Downloads
    6
    Uploads
    0
    புதுமையான முயற்சி நன்றாகயிருக்கிறது வாழ்த்துக்கள் .தொடருங்கள் ரமணி ஐயா...
    பிரகாஷ்

  6. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    (கலிவிருத்தம்)

    ஆத்தாளின் பாம்படமோ அடகு வங்கியிலே
    தாத்தாவும் பையனும் மதுபானக் கடையிலே
    நேத்திருந்த நிலைமாறி நெறிமுறைகள் தடம்புரண்டு
    சோத்துக்கே வழியின்றிச் சீரழியும் தினவாழ்வு.

    --ரமணி, 02/03/2013

    *****
    Last edited by ரமணி; 02-03-2013 at 06:57 AM.

  7. Likes ஜானகி liked this post
  8. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    (கலிவிருத்தம்)
    சின்னக் கரம்கூப்பிக் கண்ணை இமைக்காமல்
    தன்னந் தனியாகத் தருவடியில் அமர்ந்தருளும்
    விக்ன ராஜாவிடம் விடைவேண்டும் சின்னரோஜா
    பக்தியுடன் கேட்பதுதான் பண்டிதர்க்கும் புரியுமோ?

    --ரமணி, 02/03/2013
    Last edited by ரமணி; 02-03-2013 at 11:18 AM.

  9. Likes ஜானகி liked this post
  10. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    சித்திரம் எழுப்பிய கவிதைகள் அனைத்தும் சிந்தனையை எழுப்பும் வகையில் அமைந்திருப்பது ரசிக்கவைத்து வியக்கவைக்கிறது..!!

    வாழ்த்துக்கள் ரமணி ஐயா... தொடருங்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    05. வால்நரன்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கருவளவில் ஆறில் ஒருபங்கு வாலுடன்
    உருவாகும் மனிதரில் ஒருசிலர் குழந்தையாய்ப்
    பிறக்கும் போதும் வாலுடன் பிறப்பதுண்டு
    ஒருகோடி மனிதர் உலகில் இன்று
    சிறுவாலுடன் திரிவதாகக் கணக்கொன்று கூறுமே.

    வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
    வாலுள்ள பிள்ளை என்னென்ன பிழைக்குமோ?
    வால்நரர்கள் கூட்டம் உலகளவில் பெருகுவது
    வாலறிவன் விளையாட்டோ விதியோ வீணோ?

    *****
    Last edited by ரமணி; 04-03-2013 at 06:20 AM.

  12. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    06. வெண்மையில் பெண்மயில்



    (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
    வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
    வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
    வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
    எண்ணத்தின் வீச்சே உலகு.

    பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
    பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
    பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
    பெண்மையே பூமியின் அச்சு.

    *****

  13. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    07. ஆனைப் பாப்பா!

    image link:
    http://1.bp.blogspot.com/-Lwu1-btG10...india+(15).JPG

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
    மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
    மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
    கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

    --ரமணி, 10/03/2013

    *****

  14. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    08. பசுவும் கன்றும்!

    image link:
    MediaFire - Space for your documents, photos, video, and music.

    (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
    கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
    யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
    கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
    அன்புடன் நோக்குமே மாடு!

    --ரமணி, 19/03/2013

    *****

  15. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    06. வெண்மையில் பெண்மயில்



    (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
    வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
    வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
    வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
    எண்ணத்தின் வீச்சே உலகு.

    பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
    பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
    பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
    பெண்மையே பூமியின் அச்சு.

    *****
    எண்ணத்தின் வீச்சே உலகு என்கிற ஈற்றடி பல எண்ணங்களை ,சிந்தனைச் செறிவை உள்ளடக்கியது!

    ஐயா நன்று

  16. Likes ரமணி liked this post
  17. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    09. காலத்தில் ஜனித்த விதை
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
    ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
    வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
    கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
    ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?

    --ரமணி, 05/04/2013

    *****

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •