உழுது பயிரிட்ட நிலத்தை நீயும் மறுவக்க உழுவதென்ன சூரியரே!
பொழுதும் சாஞ்சபின்னும் நெஞ்சு பூத்த வேர்வை காயவில்லே!
தொழுதே கேட்டுகிறேன் நட்ட பயிரெல்லா சுட்டெறிக்க வேணாஞ்சாமி!
பழுதே இல்லாத பச்சையெல்லாம் பாழாக்கவேணாஞ்சாமி!
பொங்ஙியே ஆத்துல தண்ணிவருமின்னு நாளெல்லாங் காத்திருந்தோம்
திங்கிற சோத்திலேயே கைய வச்சுபுட்டான் தடித்தாண்டவ’ராயனுமே’
ஏங்கியே அழுது விட்ட கண்ணிரும் அடையவில்லை வயலிலே!
தங்கியே மழையாச்சும் சொட்டவிடு! அந்த மேகத்தை மட்டும் கிட்டவிடு!
சூரியரரே! சந்திரரே! நீங்க உள்ளமட்டும் ஏஞ்சனத்த வாழவிடு!
Bookmarks