Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 42

Thread: சித்திரம் எழுப்பிய கவிதை

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post


    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
    மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
    கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
    இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
    இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

    --ரமணி, 01/03/2013

    *****
    உழுது பயிரிட்ட நிலத்தை நீயும் மறுவக்க உழுவதென்ன சூரியரே!
    பொழுதும் சாஞ்சபின்னும் நெஞ்சு பூத்த வேர்வை காயவில்லே!
    தொழுதே கேட்டுகிறேன் நட்ட பயிரெல்லா சுட்டெறிக்க வேணாஞ்சாமி!
    பழுதே இல்லாத பச்சையெல்லாம் பாழாக்கவேணாஞ்சாமி!
    பொங்ஙியே ஆத்துல தண்ணிவருமின்னு நாளெல்லாங் காத்திருந்தோம்
    திங்கிற சோத்திலேயே கைய வச்சுபுட்டான் தடித்தாண்டவ’ராயனுமே’
    ஏங்கியே அழுது விட்ட கண்ணிரும் அடையவில்லை வயலிலே!
    தங்கியே மழையாச்சும் சொட்டவிடு! அந்த மேகத்தை மட்டும் கிட்டவிடு!
    சூரியரரே! சந்திரரே! நீங்க உள்ளமட்டும் ஏஞ்சனத்த வாழவிடு!
    என்றென்றும் நட்புடன்!

  2. Likes ஜானகி, ரமணி liked this post
  3. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0



    ஆற்றங் கரையினிலே அரச மரத்தடியில்
    காற்று வெளியினிலே கைகள் ஐந்துடனே
    வீற்று இருக்கின்ற விநாயகப் பெருமானே!
    நூற்றுக் கணக்கினிலே தேங்காயை உடைப்போர்கள்
    ஆற்றிய பாவங்கள் ஆற்றோடு போய்விடுமோ ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes ரமணி liked this post
  5. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0



    மாரித் தாயே ! மனமிரங்கி வருவாயே !
    எரிகுளங்கள் யாவும் வறண்ட தம்மா !
    வாரிக் கொடுக்கின்ற வள்ளலாய் இருந்த நீ
    மாறிப் போனதன் மர்மத்தைக் கூறிடுவாய்!
    ஊரிலே நல்லவர் ஒருவர் இருந்திட்டால்
    மாரி பொய்யாது பெய்யும் என்றாரே !
    நல்லவர் எல்லோரும் மாண்டு போயினரோ?
    பொல்லா மானிடரின் எண்ணிக்கை பெருகிற்றோ ?
    அல்லா இயேசுமுதல் அவனியில் இருக்கின்ற
    எல்லா தெய்வமும் கைவிட்டுப் போயினரோ ?
    கணவனை மட்டும் தொழுது எழுகின்ற
    கற்புடைப் பெண்யான் கட்டளை இடுகின்றேன்
    " பெய் !" எனச்சொன்னால் பெய்வாய் மழையே!
    பொய்யில் புலவன் பொருளுரை காப்பாய் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. Likes ரமணி liked this post
  7. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சித்திரங்கள் கவிதை எழுப்புவது குறித்து மகிழ்ச்சி. கவிதைகள் மரபில் அமைவது இன்னொரு மகிழ்ச்சி.

  8. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0



    வாளெடுத்துப் போர்செய்து வாகைகள் பலசூடி
    தோள்கொடுத்துக் காத்திடுவாய் என்றெண்ணும் வேளையிலே
    வாலோடு பிறந்தாயே ! வானரத்தின் திருவுருவாய் !
    நூலோர்கள் வகுத்துரைத்த நீதிகள் மறந்தேனோ?
    மேலோர்கள் பிழைத்தேனோ ? செய்தவக் குறைதானோ ?
    வேலோடு பிறந்திருந்தால் திருமுருகன் என்றெண்ணி
    பாலோடு பன்னீர்க் காவடிகள் தான்சுமந்து
    பழனியின் ஆண்டவனை சேவித்து மகிழ்ந்திருப்பேன்.
    ஆனால்
    வாலோடு இவ்வுலகில் வந்துதித்த என்மகனே!
    இனிநான் என்செய்வேன்?ஆண்டவன் விட்டவழி !
    Last edited by M.Jagadeesan; 09-04-2013 at 09:25 AM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. Likes ரமணி liked this post
  10. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    திருவாளர்கள் கும்பகோணத்த்துப் பிள்ளை, ஜகதீசன் இவர்களின் கவிதைகள் அனைத்தும் கவிதை மிக அருமை! அவர்களிடம் இருந்து மேலும் பல மரபுக் கவிதைகள் எதிர் பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ரமணி

  11. #19
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    திருவாளர்கள் கும்பகோணத்த்துப் பிள்ளை, ஜகதீசன் இவர்களின் கவிதைகள் அனைத்தும் கவிதை மிக அருமை! அவர்களிடம் இருந்து மேலும் பல மரபுக் கவிதைகள் எதிர் பார்க்கிறேன்.

    அன்புடன்,
    ரமணி
    ஜகதீசன் ஜயாவிடமிருந்து மரபுக்கவிதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

    புகைப்படம் தந்த உணர்ச்சிவேகத்தில் எழுதியதை பாராட்டியது ஊக்கமளிக்கிறது.
    தமிழ்மன்றத்தில் இணைந்த பிறகு தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
    இனி மரபுக்கவிதை எழுத கற்றுக்கொள்வேன். என்ன!? கொஞ்சம் நாள் பிடிக்கும்!
    என்றென்றும் நட்புடன்!

  12. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    உடனடியாக யாப்பிலக்கணம் பற்றி அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவலாம்:
    யாப்பிலக்கணம்
    முருகேசபிள்ளை

    http://noolaham.net/project/50/4950/4950.pdf

    இந்தப் புத்தகத்துடன் என் 'கவிதையில் யாப்பு' தொடர்க் குறிப்புகளையும் படித்தால் ஆர்வத்துடன் மரபில் கவிதை முனைய ஏதுவாக இருக்கும். ஆல் த பெஸ்ட்!

    *****

    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    ஜகதீசன் ஜயாவிடமிருந்து மரபுக்கவிதைகளை நாம் எதிர்பார்க்கலாம்

    புகைப்படம் தந்த உணர்ச்சிவேகத்தில் எழுதியதை பாராட்டியது ஊக்கமளிக்கிறது.
    தமிழ்மன்றத்தில் இணைந்த பிறகு தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டேன்.
    இனி மரபுக்கவிதை எழுத கற்றுக்கொள்வேன். என்ன!? கொஞ்சம் நாள் பிடிக்கும்!

  13. #21
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    உடனடியாக யாப்பிலக்கணம் பற்றி அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவலாம்:
    யாப்பிலக்கணம்
    முருகேசபிள்ளை

    http://noolaham.net/project/50/4950/4950.pdf

    இந்தப் புத்தகத்துடன் என் 'கவிதையில் யாப்பு' தொடர்க் குறிப்புகளையும் படித்தால் ஆர்வத்துடன் மரபில் கவிதை முனைய ஏதுவாக இருக்கும். ஆல் த பெஸ்ட்!

    *****
    வாழத்துகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் நன்றி ரமணி அவர்களே!
    சேமித்துக்கொண்டேன். கவிதையில் யாப்பையும் தொடர்ந்து வருகிறேன்.
    என்றென்றும் நட்புடன்!

  14. Likes ரமணி liked this post
  15. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
    ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
    ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
    வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
    தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
    ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
    ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.

    --ரமணி, 25/04/2013

    *****

  16. #23
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    சித்திரம் பாடும் கவிதைகள் சிறப்பு புது எண்ணத்தில் வண்ணங்கள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  17. Likes ரமணி liked this post
  18. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0


    11. இறைவன் இருப்பில் ஐயம்

    (பலவிகற்ப பஃறொடை வெண்பா)
    கரங்களே இல்லாது கால்கழுவும் ஏனங்கள்
    கர்மவினை யானாலும் கால்கள் இயக்கில்
    சிறுவனவன் செய்திடும் சாகசம் நெஞ்சைப்
    பறித்திடும் காட்சியில் பற்றுமே ஐயம்
    இறைவனும் உள்ளானோ இங்கு?

    --ரமணி, 07/06/2013

    *****

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •