Results 1 to 5 of 5

Thread: திருக்குறளும் சில அரிய செய்திகளும்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    திருக்குறளும் சில அரிய செய்திகளும்.

    திருக்குறளும் அரிய தகவல்களும்:-

    * திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
    * திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
    * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
    * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
    * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
    * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
    * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
    * திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
    * திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
    * திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
    * திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
    * திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
    * திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
    * திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
    * திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
    * திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
    * திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
    * திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
    * திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
    * திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
    * திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
    * திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
    * திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
    * திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
    * “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
    * “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
    * திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
    * திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
    * திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
    * திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


    நன்றி : இணையத்திலிருந்து திரட்டியது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0

    விட்டுப்போன சில தகவல்கள்

    நெடில் வாராக் குறள் ஒன்று.

    "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு."

    துணைக் கால் வராத குறள்.

    "கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக."
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருக்குறள் பற்றி மேலும் சில அரிய செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes subhashini liked this post
  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    திருக்குறள் பற்றி பல புதிய விஷயங்களை இன்று தெரிந்துகொண்டேன். நன்றி.

  6. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    திருக்குறள் நரிக்குறவர் பேசும் 'வக்ரபோலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது ஒரு வியப்பான செய்தி. நரிக்குறவர் பேசும் மொழியின் பெயர் வக்ரபோலி என்பதும், அதற்கு எழுத்துவடிவம் உண்டு என்பதும் அறியாத புதிய செய்திகள். திருக்குறள் பற்றிய பல புதிய சுவையானத் தகவல்களைத் திரட்டித் தந்த ஜகதீசன் ஐயாவுக்கும் சுபாஷிணிக்கும் நன்றிகள் பல.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •