என் வீட்டு காகங்கள் கரைவதில்லை
அம்மா சொல்வார் முன்பு ...
பார் அத்தை வரப்போகிறாள் இன்று
முன் முற்றத்தில் காகம் கரைகிறதேன்று
சரியாக அத்தை வருவாள் ... அன்று
அத்தை கொடுத்த வடையை
அன்பாய் தருவாள் காக்கைக்கு
அதே நினைவில் மூழ்கி கிடந்த போது
வாசல் கதவருகே காக்கையின் சப்தம்
அம்மாவின் நினைவில் இருந்த நான்
மனைவியிடம் சொன்னேன்
பார் உன் அத்தை வரப்போகிறார் இன்று
காகம் கரைகிறதேன்று
அவள் கையில் இருந்த கரண்டி
காகத்தை நோக்கி பறக்க
காகமும் பறந்தது ..............................
அன்று தொட்டு இன்றுவரை
என் வீட்டு காகங்கள் கரைவதில்லை ...
எவரும் வீட்டுக்கு வருவதில்லை ............
Bookmarks