Results 1 to 5 of 5

Thread: தேமாங்காய்.. புளிமாங்காய்..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    தேமாங்காய்.. புளிமாங்காய்..



    தேமாங்காய்.. புளிமாங்காய்..

    தேமாங்காய்.. புளிமாங்காய் ..
    பாங்காய்த்தான் வாசித்தாள்..
    பூசனிக்காய் .. முருங்கைக்காய்
    இடையிடையே யோசித்தாள்..

    வடுமாங்காய் போலிவளோ
    நெடுங்கனவு கண்டிருந்தாள்..
    சிடுமூஞ்சித் தகப்பனையும்
    கடுந்தாங்கி வளர்ந்திடுவாள்..

    தெம்மாங்காய் பாட்டுபாடி
    கம்மாயில் ஓடியவள்..
    அம்மா’ங்காய் இறந்தவுடன்
    சும்மாடில் காய் சுமந்தாள்..

    தீம்போக்காய் மேல்நின்று
    மேம்போக்காய் மேய்வோரின்
    பார்வைக்காய் துடித்திடுவாள்
    தீமைக்காய் அழுதிடுவாள்..

    ஏழைக்காய் வாய்த்திட்ட
    விதிக்காய் நினைப்பாளோ..?
    கோழையாய் மடிந்திடாமல்
    வாழத்தான் நினைப்பாளோ..?

    காய்விற்றுப் பிழைத்தாலும்
    காயம் விற்றுப் பிழைக்காமல்
    செல்வாக்காய் வாழ்வாளோ..?
    சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    காய் விற்றுப் பிழைத்தாலும்
    கல்வியை விடவில்லை !
    எதிர்காலம் அவளுக்கு
    ஏற்றமே என்றுரைப்பேன் !


    பாராட்டுக்கள் கலைவேந்தன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    காய்விற்றுப் பிழைத்தாலும்
    காயம் விற்றுப் பிழைக்காமல்
    செல்வாக்காய் வாழ்வாளோ..?
    சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!
    அருமை. கண்ணதாசனின் கவிதை நினைவு வந்தது. அவர் பாடினது (காதலன் காதலி) நிலவை பற்றி. நீங்கள் பாடுவது (இன்றைய ஏழை பெண்ணின்) நிலைமை பற்றி.

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    "

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
    Last edited by முரளி; 15-02-2013 at 03:07 AM.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இவள் போன்ற உழைப்பபாளிகள்,கனவைத் தேக்கி வைத்துக் கட்டுடைப்பவர்கள் இவர்களின் கதைகளின் தொகுப்பைத் தானே வரலாறு என்கிறோம்...

    நல்ல வார்த்தைகள் கவிதை முழுவதும் ...

    பாராட்டுகள் அண்ணா

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காயம் சுமக்கும் காயத்தினால்
    காய் சுமக்கும் காலத்திலும்
    கல்வியே சகாயம் என்கிறாள்!
    எதிர்கால அபாயம் விலக்க
    ஏட்டிலே உபாயம் கற்கிறாள்!

    இவளுக்காய் இதயமுருகும் கவியின் இதயமுருக்கும் கவிதைக்காய் இனிய வாழ்த்துக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •