தமிழ் மன்றம் இணையதளத்தில் இணைந்தமைக்கு பெருமிதம் கொள்கிறேன். 15 வயது முதலே தமிழ் மீது தணியாத தாகம். கலூரிப் படிப்பின் போது சென்னை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் எழுதி வந்துள்ளேன். ஹைக்கூ கவிதைகள் என்னை ஈர்த்தன . மனிதநேயத் துளிகள் எனும் ஹைக்கூ கவிதை நூல் வெளியிட்டுள்ளேன். பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் காஞ்சீபுரத்தில் பாவேந்தர் பட்டயம் பெற்ற நான் செய்யாறு தமிழ்ச் சங்கத்தின் நிறுவன தலைவராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்து பல இலக்கிய சேவைகள் புரிந்துள்ளேன். மேலும் ஒரு ஹைக்கூ கவிதைநூலும், நவீன கவிதைநூலும் தயாரிப்பில் உள்ளது. உங்களுடன் தொடர்பு கொண்டதில் மகிழ்வு.
கா.ந.கல்யாணசுந்தரம்
Bookmarks