மொழியில்லா உலகை நினைத்து
சந்தோசப்பட்ட தருணங்களில்
அச்சிடப்பட்ட எழுத்து காகிதம் பல வர்ணங்களில்
காற்றில் அடித்து வந்து காலடியில் கவிழ்ந்தது
பிரித்த பொழுது
புரியாத மௌனத்தில் மிரட்சியுடன் மனம்
படைத்தவனின் புரிந்த உடல் மொழியில் வினவினேன் படைத்தவனிடம்
என்ன இது அசிங்கமாய் என்று
படைத்தவனின் பதில் அதுதான் ஆங்கிலம் என்றும்
பக்கங்களில் ஓன்று ஒன்றும் ஒவ்வொவொரு மொழி என்றும் சொன்னது
ஒரு பக்கத்தில் மட்டும் அவ்வளவு அழகு இது என்னவென்று கேட்டேன்
இதுதான் தமிழ் என்றார் திடுக்கிட்டு கண் விழித்தேன் .
அது இன்னமும் கனவாகவே இருந்தது