ஆன்மா சிலிர்க்கிறதடி
உன் உச்சரிப்பில்
என் பெயரை கேட்கும்போது....
கதகதப்பாய் இருக்குதடி
உன் மனச்சிறகில்
என்னைப்போர்த்திக்கொண்டபோது....
பரவசமாகிறேனடி
கன்னங்கள்
உன் முத்தங்களால்
நனைத்தபோது....
முழுமைப்பெற்றேனடி
நீயே என்
வாழ்க்கைத்துணையாகும்போது...
உயிர்த்தேனடி
உன் பிரதிபிம்பம்
என் கைகளில்
மழலையாய் தவழும்போது.....
Bookmarks