Page 2 of 16 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 182

Thread: கவிதையில் யாப்பு

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    எங்கே எப்படி எப்போது என்று காத்திருந்த எனக்கு இத்தளத்தில் நல்லதோர் வாய்ப்பிது!
    ஆனாலும் இது மிகவும் வேகமாக இருக்கிறது எங்கே வாய்பை தவற விட்டுவிடுவேனோ என நினைக்கிறேன்.
    விளக்கமும் எடுத்துகாட்டும் கூடவே விவாதமும் இருந்தால் இண்ணமும் எங்களுக்கு பயணுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்! தவறிறுந்தால் பொறுக்கவும்.
    என்றென்றும் நட்புடன்!

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் திரு. கும்பகோணத்துப் பிள்ளை யவர்களே!

    இன்னமும் நாம் விளக்கமாக எதுவுமே பார்க்க ஆரம்பிக்கவில்லை! இதுவரை வந்தவற்றில் செய்யுளின் ஓசைபற்றியே அறிமுகம் செய்துகொள்கிறோம். எனவே இயல் 3.1-இலிருந்து வாசகர்கள் ஒருமுறைக் கிரண்டுமுறை படித்து விளங்கிக்கொண்டால் போதுமானது.

    இந்தத் தொடரில் ஏராளமான பயிற்சிகள் வரும். ஆர்வலர்கள் அப்போதைக் கப்போதே பயிற்சிகளைச் செய்து இங்கு பதிந்தால் எல்லோர்க்கும் ஒரு motivation கிடைத்துப் பயனுள்ளதாக இருக்கும். அகவல் ஓசை பற்றிய முதலிரண்டு பயிற்சிகள் கீழே.

    அன்புடன்,
    ரமணி

    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    எங்கே எப்படி எப்போது என்று காத்திருந்த எனக்கு இத்தளத்தில் நல்லதோர் வாய்ப்பிது!
    ஆனாலும் இது மிகவும் வேகமாக இருக்கிறது எங்கே வாய்பை தவற விட்டுவிடுவேனோ என நினைக்கிறேன்.
    விளக்கமும் எடுத்துகாட்டும் கூடவே விவாதமும் இருந்தால் இண்ணமும் எங்களுக்கு பயணுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்! தவறிறுந்தால் பொறுக்கவும்.

  3. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.5. அகவற் பயிற்சி

    நினைவிற் கொள்ள:
    அகவல் இயற்றக் கீழ்வரும் தளைகள்.
    மாமுன் நேரும் விளம்முன் நிரையும்
    வருகிற ஆசிரியத் தளைகள் இரண்டு.
    மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
    வருகிற வெண்டளைகள் இரண்டு என்று.


    பயிற்சி 1. எல்லாம் நேரசை: மா-முன்-நேர்

    கீழ்வரும் வரிகளின் மூவசைச் சீர்களை
    ஈரசைச் சீர்கள் ஆக்கி, நேர்முன் நேர்வர
    எழுதி அகவல் கேட்பது அறிக.

    கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
    நல்லவர் இந்நாளில் கானலின் நீர்போல.


    பயிற்சி 2. எல்லாம் நிரையசை: விளம்-முன்-நிரை

    கீழ்வரும் உரைநடை வரிகளில் உள்ள
    சீர்கள் எல்லாம் நிரை-நிரைச் சீர்களென
    மாற்றி செய்யுள் வரிகள் இரண்டு
    அமைத்துப் பயிலும் அகவல் அறிக.

    பின்வருவதைச் சொல்லும் ஓர் அரிய கலையில்
    கரையில்லாத புலமையைக் கொண்டவர் மிகச் சில பேர்கள்.


    *****

  4. #16
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    மிக மிக அருமை. உங்கள் உழைப்பு, முயற்சி, ஆவல் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. எனது அன்பளிப்பாக மிக சிறிய பரிசு இ.பணம் ஆயிரம் , உங்கள் படைப்புகளுக்காக.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 3. எல்லாம் நேர்நிரை/நிரைநேர்: விளம்-முன்-நிரை

    கீழ்வரும் சொற்களை விகுதிகள் சேர்த்து
    நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்
    என்னும் நிரலில் சீர்கள் வந்திட
    ஈரசைச் சீர்களில் இரண்டு வரிகள்
    அகவல் ஓசை பயில எழுதுக.

    காற்று, கடுகு, செல், புரவி,
    பாட்டு, அது, சொல், எளிது?


    பயிற்சி 4. மாறிய பெயர்கள்

    கீழ்வரும் பாட்டில் காற்றின் பெயர்கள்
    மாறி உள்ளதைத் திருத்தி எழுதுக.

    குளிர்பனிக் காற்றின் பெயராம் சாரிகை
    வடக்கில் இருந்து வருவது கோடை
    கிழக்கில் வாடை மேற்கில் கொண்டல்
    தெற்கில் ஊதை சுழன்றால் தென்றல்.


    *****

    குறிப்பு:
    இந்தப் பயிற்சிகளை ஆர்வலர்கள் எளிதில் முயன்று பார்க்க ஒரு வலைப்பூ தொடங்கியுள்ளேன்:
    http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி. என் வலைப்பூவில் உள்ள யாப்புப் பயிற்சிகளை முயன்று பார்த்துக் கருத்துச் சொல்வது இன்னும் சிறந்த அன்பளிப்பாக இருக்கும்!

    Quote Originally Posted by முரளி View Post
    மிக மிக அருமை. உங்கள் உழைப்பு, முயற்சி, ஆவல் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. எனது அன்பளிப்பாக மிக சிறிய பரிசு இ.பணம் ஆயிரம் , உங்கள் படைப்புகளுக்காக.

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3.5. அகவற் பயிற்சி விடைகள்
    பயிற்சி 1. விடை

    கல்வி செல்வம் வீரம் கொண்ட
    நல்லோர் இன்று கானல் நீரே.


    கல்/வி செல்/வம் வீ/ரம் கொண்/ட
    நல்/லோர் இன்/று கா/னல் நீ/ரே.

    நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்
    நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்

    பயிற்சி 2. விடை

    வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
    கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


    வரு/வது உரைத்/திடும் அரி/யதோர் கலை/தனில்
    கரை/யறு புல/மையை உடை/யவர் மிகச்/சிலர்.

    நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை
    நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை

    ’புலமையை’ என்பதில் ஐகாரக் குறுக்கம்
    பயில ஈரசைச் சீராகும் அறிக. ... [புலமையை -> புலமயை]

    *****

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 5. செப்பலிலிருந்து அகவல்

    செப்பல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
    மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
    முதற்சீர் எதுகையும் பொருளும் தங்கி
    அகவல் ஓசை கேட்க எழுதுக.

    கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
    மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
    பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட
    மாடியில் போட்ட வடாம்.


    பயிற்சி 6. துள்ளலிலிருந்து அகவல்

    துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
    மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
    மூன்று அடிகளில் வந்திடு மாறு
    அகவல் ஓசை கேட்க எழுதுக.

    வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
    இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


    *****

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 7. உரைநடை வாக்கியத்திலிருந்து அகவல்
    http://kavithaiyilyappu-payirchchi.b...3/01/35-7.html

    கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
    ஈரசைச் சீர்கள் மட்டுமே பயின்று
    மூன்று அடிகளில் வந்திடு மாறு
    அகவல் ஓசை கேட்க எழுதுக.

    இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

    பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து அகவல்
    http://kavithaiyilyappu-payirchchi.b...3/01/35-8.html

    கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
    மூன்று அடிகளில் ஒரேஎதுகை வந்து
    அகவல் ஓசை கேட்க எழுதுக.

    மகிழ்ந்த துள்ளலில் கேட்டு சிரித்து
    துள்ளிய குட்டி பாப்பா பயந்தது
    கன்றுக் உறுமல் நன்றாய்ச் பன்றியின்


    *****

  10. #22
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    முயற்சித்தேன். எனது இலக்கண அறிவு குறைவு என்பதனால், எனது முயற்சி வீணாயிற்று. இருப்பினும், திரும்ப முயற்சிப்பேன். நன்றி.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    நண்பரே!

    மகிழ்ச்சி. பெரும்பாலான பயிற்சிகள், பயிற்சி 8-இல் உள்ளது போலக் கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைப்பதாகவே இருக்கும்.

    ஒவ்வொரு சொல்லையும் மின்னெலி விசையால் சொடுக்கிட அவை விடைப் பெட்டகத்தில் ஒழுங்கில் விழும். தவறாகி விட்டால், cut-and-paste மூலம் சொல்லொழுங்கை நேர்செய்து கொள்ளலாம்.

    எல்லாச் சொற்களையும் விடைப் பெட்டகத்தில் வரவழத்த பிறகு check பொத்தானை அழுத்தி விடையைச் சரிபார்க்கலாம்.

    எப்போது வேண்டுமானாலும் விடை இணைப்பைச் சொடுக்கி விடையை அறிந்துகொள்ளலாம்.

    முயல்க, all the best.

    அன்புடன்,
    ரமணி


    Quote Originally Posted by முரளி View Post
    முயற்சித்தேன். எனது இலக்கண அறிவு குறைவு என்பதனால், எனது முயற்சி வீணாயிற்று. இருப்பினும், திரும்ப முயற்சிப்பேன். நன்றி.

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 9. மறைந்துள்ள பழமொழிகள்

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    கீழ்வரும் பெயர்வினைச் சொற்களில் நான்கு
    பழமொழிகள் உள்ளன மறைந்து.
    அவற்றைத் தேடி
    அந்தாதி போலமைத்து
    நான்கு அடிகளில்
    அகவல் ஓசை கேட்க எழுதுக.

    மலை, பனி, குளம், கிணறு, தவளை, உலகு
    வந்தது, நீங்கும், பெய்தால், நிரம்பும், போட்டு, தேடினான், அறியுமோ


    பயிற்சி 10. காளமேகத்தின் சிலேடை அகவலில்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எள்ளும் பாம்பும் ஒன்றெனக் காளமேகம்
    வெள்ளிய பாவில் சிலேடையாய்ச் சொன்னதை
    அடிகளின் சீர்களில் ஈரசை பயின்று
    அகவல் ஓசை கேட்க எழுதிய
    அகவற் பாவின் சொற்கள் கலைந்து
    போயின கீழுள்ள அடிகள் நான்கில்.
    கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைக்கவும்.

    வெண்பா:
    ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
    மூடித் திறக்கின் முகங்காட்டும் -- தேடிமண்டை
    பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
    உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.
    ---காளமேகப் புலவர், பாம்பும் எள்ளும் சிலேடை

    கலைந்த சொற்களைல் அகவற்பா:
    திறக்கின் பிண்ணாக் ஆடிக் தேய்த்தால்
    முகம்காண், பரபர, எள்ளும் மூடித்
    ஆய்ந்தால் ஒன்று. ஆடையில் பாம்பும்
    மண்டையில் இரையும், குடம்புகும், குமுண்டு;


    *****

Page 2 of 16 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •