Page 16 of 16 FirstFirst ... 6 12 13 14 15 16
Results 181 to 182 of 182

Thread: கவிதையில் யாப்பு

                  
   
   
  1. #181
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    7.33. ஆசிரியத் தாழிசை
    (ஆசிரியத் தாழிசை)

    அடிகளின் சீரெண் தளைவகை எதுவும்
    அடிகள் மூன்றில் ஒன்றாம் எதுகை
    அடிகள் இங்ஙனம் அகவற் றாழிசை.

    அகவற் றாழிசையாம் ஆசிரியத் தாழிசை
    தகவுறும் மூன்று அடிகளில் தனித்தோ
    புகலும் பொருள்மேல் மூன்றடுக்கி யோவரும்.

    மூன்றடுக்கி வந்தால் முற்றும் சிறப்பென்றும்
    மூன்றில்லாத் தனித்தது சற்றே சிறப்பென்றும்
    ஆன்றோர் உரைகள் ஆமுறை சொலுமே. ... [ஆமுறை = ஆகும் முறை]

    சான்றுகள்
    மூன்றடுக்கி, வெண்டளை

    கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
    இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில்
    கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

    பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
    ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில்
    ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!

    கொல்லியஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
    எல்லைநம் மானுற் வருமேல் அவன்வாயில்
    முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!
    --சிலப்பதிகாரம், ம.கா., ஆய்ச்.குர.

    தனித்தே, ஆசிரியத்தளை

    வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
    பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
    நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.
    --யாப்பருங்கலம்

    தனித்தே, கலித்தளை

    நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி
    . நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி
    வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று
    . விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
    பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப்
    . பகவன்றன் அடியிணையைப் பயிறும் நாமே.

    *****

  2. #182
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    7.34. ஆசிரியத் தாழிசை முயற்சி

    கணநாதன் துதி
    (ஆசிரியத் தாழிசை: வெண்டளை, அளவடி, ஒருபொருள் மூன்றடுக்கி)

    ஐங்கரத்தான் ஓங்காரன் அம்பிகையின் முன்னவனாய்
    ஆங்காங்கே எழுந்தருளி அருள்செய்யும் கணநாதன்
    கைங்கரியம் செய்தேநாம் கள்ளமற்று வாழ்வோமே.

    கரிமுகத்தான் ஏரம்பன் கண்ணுதலான் கங்கைசுதன்
    பெருவயிறன் ஏகதந்தன் பேர்சொல்லி வழிபட்டே
    அருச்சனையும் செய்தேநாம் ஆயுளுடன் வாழ்வோமே.

    மும்மதனாம் இறைமகனாம் முக்கண்வி நாயகனே
    நம்மனதில் தங்கிநின்று நல்வாழ்வு தந்திடவே
    செம்மையுளம் கொள்ளவரும் சிறப்புடனே வாழ்வோமே.

    *****

    மாலைக் காட்சி
    (ஆசிரியத் தாழிசை: ஆசிரியத்தளை, ஒரு பொருள் மூன்றடுக்கி)

    பொன்னொளிர் ஞாயிறு புகுந்திடும் மலையுளே
    மன்னும் அமைதியில் மகிழும் சூழல்
    இன்னும் இன்னும் என்றென் இதயமே.

    கண்களில் வழிந்திடும் கதிரவன் ஒளியில்
    மண்ணிது மறைய வான்வரும் ஒளித்திரள்
    எண்ணம் இன்னும் என்றே நாடுமே.

    மாலைத் தென்றலின் மலர்மணம் நுகர்ந்தே
    சோலை வழிச்செலும் சுகத்திலென் மனமே
    காலை வருடும் காற்றினும் விழையுமே.

    *****

    தனித்தே, கலித்தளை, எழுசீரடி

    நடந்ததுவும் நடப்பதுவும் நலமொன்று விளைவதற்கே
    . நமதுவசம் எதுவுமிலை எனவாழ்ந்தால்
    கடந்ததுவும் கடப்பதுவும் கவலையினைத் தருவதெனில்
    . கலக்கமெதும் கொளவேண்டாம் எனுமுணர்வில்
    திடம்படவே வருவதெல்லாம் எதிர்கொண்டே அனுபவிக்கும்
    . திறமுற்றே துணிவுடனே தினவாழ்வே.

    *****

Page 16 of 16 FirstFirst ... 6 12 13 14 15 16

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •