Page 4 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 182

Thread: கவிதையில் யாப்பு

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    4.15. முற்றிய லுகரம்

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
    முற்றிய லுகரம் என்றபெயர் பெறுமே
    இஃது தனிக்குறில் அடுத்தும்
    மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
    வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு,
    அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
    சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்குமே.

    4.16. குற்றியலுகரம்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
    குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
    ஒலித்திடும் உகரமே குற்றிய லுகரமாம்.

    குசுடு துபுறு என்று உகரம்
    வல்லின மெய்யுடன் சேரும் போது
    வல்லின உயிமெய்க் குற்றுகர மாகித்
    தனிக்குறில் அல்லாத மற்றைச் சொற்களில்
    வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
    குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே.

    வல்லின உயிர்மெய் ஆறினில் மட்டுமே
    குற்றிய லுகரம் குன்றி வருமே
    மெல்லின இடையின உயிர்மெய் களிலே
    உகரம் குன்றி ஒலிப்பது இல்லையாம்.

    தும்பு என்பது குற்றிய லுகரம்
    தும்மு என்பது முற்றிய லுகரம்
    நஞ்சு என்பது குற்றிய லுகரம்
    நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
    உண்டு என்பது குற்றிய லுகரம்
    உண்ணு என்பது முற்றிய லுகரம்
    குடகு என்பது குற்றிய லுகரம்
    குடவு என்பது முற்றிய லுகரமே.

    கு-குரு சு-சுகம் து-இது என்று
    கு-சு-து என்னும் ஓரெழுத்துச் சொற்கள்
    தனிக்குறிலாய் நிற்றலால் குற்றுகர மாகாது.

    தனக்கு முன்வரும் அயலெழுத்தின் வகையொட்டிக்
    குற்றிய லுகரம் வந்திடும் போது
    ஆறு வகைப்பட்ட தொடர்களில் அமையுமே.

    வல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
    வன்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
    ’சுக்கு மச்சு பட்டு பத்து உப்பு உற்று’
    ’சாக்கு நீச்சு பாட்டு கூத்து காப்பு உற்று’
    என்பன வன்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

    மெல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
    மென்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
    ’சங்கு பஞ்சு வண்டு பந்து தும்பு நின்று’
    ’பாங்கு காஞ்சு வாண்டு சாந்து பாம்பு சான்று’
    என்பன மென்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

    இடையின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
    இடைத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
    ’தேய்கு ஆர்கு அல்கு --வ்கு மாழ்கு தெள்கு’ ... [--வ்+கு சொல்லில்லை]
    ’வெய்து --ர்து --ல்து --வ்து போழ்து --ள்து’
    ’தோய்பு மார்பு சால்பு --வ்பு வாழ்பு வள்பு’
    என்பன இடைத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

    இடைத்தொடர் வகையில் சுடுறு என்பன
    ஈற்றயலிற் குற்றுகர மாகக் கொண்டு
    அமையும் சொற்கள் இலையெனக் காண்க.

    எஞ்சிய குதுபு குற்றிய லுகரமும்
    இடையினம் மெய்கள் அனைத்தையும் ஈற்றயலின்
    கொள்வ தில்லை என்றும் காண்க.

    உயிர்மெய் யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
    உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
    ’படகு நகாசு அகடு தகாது அளபு கதறு’
    என்பன உயிர்த்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

    தனிநெடி லெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
    நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
    ’பாகு காசு நாடு காது பாபு ஆறு’
    என்பன நெடிற்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

    நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
    தனிநெடில் பின்வரும் ஈரெழுத்துச் சொற்களாம்.
    ’தகாது ஆகாது’ போன்று இரண்டின்
    மிஞ்சிய எழுத்துவரும் சொற்களில்
    குற்றிய லுகரம் உயிர்த்தொட ராகிவிடும்.

    ஆய்த எழுத்தை ஈற்றயலில் கொண்டவை
    ஆய்தத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
    ’எஃகு கஃசு அஃது சுஃறு’
    என்பன ஆய்தத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

    குற்றியலுகரச் செயல்பாடு

    (நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
    குற்றிய லுகரச் செயல்பாடு பற்றி
    மொழியியல் கருத்து மகிழ்ச்சி தருவது
    வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
    எளிய தல்ல அவற்றை ஒலித்தல்
    காட் அஃத் பஞ்ச் மார்ப்
    போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா?
    எனவே
    காடு அஃது பஞ்சு மார்பு
    என்று அந்த வல்லின மெய்மேல்
    உகரம் ஏறி ஒலித்தல் எளிதாகி
    உகரம் தானும் இசையில் நலிந்து
    குற்றிய லுகரம் ஆகி விடுமே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஆங்கிலம் பயிலும் இற்றைநாள் தமிழில்
    ஓங்குவது காணீர் குற்றிய லுகரமே!
    சாக் பாஸ் போட் ஷாப் டேப் பார் ... [chalk pass boat shop tape bar]
    என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
    நன்கு குற்றிய லுகரம் சேர்ந்து
    சாக்கு பாசு போட்டு ஶாப்பு டேப்பு பாரு
    என்றே பேச்சினில் ஒலிக்கும் அன்றோ?

    *****

  2. #38
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    4.17. குற்றியலிகரம்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
    வருமொழி முதலில் யகரம் வந்தால்
    உகரம் இகர மாகத் திரிந்து
    அரைமாத் திரையாய்க் குறைந்து ஒலித்து
    குற்றிய லிகரம் ஆகி விடுமே.

    நாடு + யாது = நாடியாது என்றும்
    வரகு + யாது = வரகியாது என்றும்
    கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
    வருவது குற்றிய லிகரச் சான்றுகள்.

    இவ்வாறே மியாவென் றுவரும் அசைச்சொல்லில்
    மகரம் மேலூர்ந்த உகரம் மாத்திரை
    குன்றி ஒலிப்பதும் குற்றிய லிகரம்.

    கேள் + மியா = கேண்மியா என்றும்
    செல் + மியா = சென்மியா என்றும்
    வருவதும் குற்றிய லிகரச் சான்றுகள்.

    4.18. ஐகாரக் குறுக்கம்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ஐ-யெனும் உயிரெழுத்து தனித்து வந்தால்
    இரண்டு மாத்திரை யளவில் ஒலிக்கும்.
    அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
    முதலிடை கடையில் வந்த போது
    ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பது
    ஐகாரக் குறுக்கும் என்ற பெயர்பெறுமே.
    ஐப்பசி, தலைவன், வலை,கலை சான்றுகள்.

    4.19. ஔகாரக் குறுக்கம்

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    ஔ-வெனும் உயிரெழுத்து தனித்தோ அல்லது
    தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
    தன்னை உணர்த்தி வரும்போதும்
    அளபெடுத்து வரும்போதும்
    தன்னிரு மாத்திரை குன்றாது ஒலிக்குமே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அதுவே உயிரெழுத்து உயிர்மெய் என்று
    சேர்ந்தால் முதலில் மட்டுமே வந்து
    ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
    ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்து
    ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே:
    ஔவை, வௌவால், கௌதாரி சான்றுகள்.

    4.20. மகரக் குறுக்கம்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ணகர, னகர மெய்களின் முன்னும்
    வகரத்தின் பின்னும் வருகிற மகரம்
    அரையில் குறைந்து கால்மாத் திரையில்
    ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பது.

    கேண்ம் = கேளும், மருண்ம் = மருளும்
    போன்ம் = போலும், சென்ம் = செல்லும்
    வரும் வங்கம் = வரும் கப்பல்
    என்பன மகரக் குறுக்கச் சான்றுகள்.

    4.21. ஆய்தக் குறுக்கம்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
    ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
    அரையில் குறைந்து கால்மாத் திரையில்
    ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்பது.

    அல் + திணை = அஃறிணை
    கல் + தீது = கஃறீது
    முள் + தீது = முஃடீது
    என்பன ஆய்தக் குறுக்கச் சான்றுகள்.

    *****

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    4.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எழுத்து என்பது தனியெழுத் தாக
    மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
    ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
    கற்றையாய்ச் சேர்ந்து சொல்லென் றாகி
    மனதில் உள்ளதை வெளியில் கொணர்ந்து
    கனவினை விதைக்கும் கனியென் றுதவுமே.

    எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
    அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
    ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
    அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்
    செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
    குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே.

    எழுத்து என்பது உருவிலோ ஒலியிலோ
    மோனை எதுகை முரணெனும் வகைகளில்
    தொடையெனும் உறுப்பில் தொடுக்க உதவுமே.

    இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
    இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
    வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
    இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
    அடிப்படை உறுப்பென அசைந்து வருமே.

    4.23. எழுத்தியல் பயிற்சி
    பயிற்சி 1. ஓசை நிறைக்கும் அளபெடைகள்
    முயன்று பார்க்க வலைப்பூ விலாசம்:
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/423-1.html

    இந்த எழுத்தியல் பயிறிசியில் இருந்து நம் 'கவிதையில் யாப்பு'ப் பயிற்சிகள் முறையாகத் தொடங்குகின்றன.
    கவிதை ஆர்வலர்கள் பயிற்சிகளை உடனே முயன்றுபார்த்துப் பின்னூட்டம் இடுவார்களாக.
    பயிற்சிகள் என்னுடைய கீழுள்ள வலைப்பூவில் ஒவ்வொன்றாக பதியப்படும், எல்லோரும் எளிதாக முயன்று பார்க்க.
    பயிற்சிகளை விடாமல் செய்துவந்தால் மரபுக் கவிதை எழுதுவது எளிதில் வசப்படும் என்பது என் அனுபவம்


    நினைவிற் கொள்ள:
    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
    ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
    ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

    ஈரசைச் சீரிடை வேறென நிற்கும்
    ஓரசைச் சொற்கள் அளபெடுத்து வந்து
    ஓசை நிறைத்தோ வேறு வகையிலோ
    அளபெடுத்த சொற்களை பன்னிரண்டு மட்டும்
    ஈரசைச் சீர்களாக்கி எழுதுக வரிசையிலே.

    [உதாரணம்: பளார் என்பது பளாஅர் என்றாகும்.]

    பளார் என்று அறைந்து விட்டான்
    பெண்ணவள் கலீர் என்று சிரித்தாள்
    தொண்டன் தலையாடச் சொன்னான் ஊம்
    எலே என்றால் சட்டை செய்யான்
    மன்னன் கணை தொடுத்து வீழ்த்தினான்
    சலோ சலோ கூறக் குதிரை நகர்ந்தது
    ஔ என்று மிழற்றியது குழந்தை
    ஆம் சொல்வதினும் ஓம் சொல்வது அவரது பழக்கம்
    வளை சென்ற சாலையில் விபத்து
    அளை பேசினால் துன்பம் இல்லை


    *****

  4. #40
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    4.23. எழுத்தியல் பயிற்சி விடைகள்
    பயிற்சி 1 ஓசை நிறைக்கும் அளபெடைகள்: விடை

    பளாஅர் கலீஇர் ஊஉம் எலேஎ கணைஇ சலோஒ சலோஒ ஔஉ ஆம்ம் ஓம்ம் வளைஇ அளைஇ

    பளாஅர் என்று அறைந்து விட்டான்
    பெண்ணவள் கலீஇர் என்று சிரித்தாள்
    தொண்டன் தலையாடச் சொன்னான் ஊஉம்
    எலேஎ என்றால் சட்டை செய்யான்
    மன்னன் கணைஇ தொடுத்து வீழ்த்தினான்
    சலோஒ சலோஒ கூறக் குதிரை நகர்ந்தது
    ஔஉ என்று மிழற்றியது குழந்தை
    ஆம்ம் சொல்வதினும் ஓம்ம் சொல்வது அவரது பழக்கம்
    வளைஇ சென்ற சாலையில் விபத்து
    அளைஇ பேசினால் துன்பம் இல்லை

    *****

  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 2. குற்றியலுகரம் அறிதல்
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/423-2.html

    (குறள் வெண்செந்துறை)
    கீழ்வரும் சொற்களில் குற்றிய லுகரங்கள்
    தேர்ந்து எடுத்துத் தனியே எழுதவும்.

    மஞ்ஞு உண்ணு தும்மு பன்னு நெல்லு கவ்வு துள்ளு

    *****

  6. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 2 குற்றியலுகரம்: விடை

    குசுடுதுபுறு என்னும் வல்லின உயிர்மெய்களே குற்றியலிகரமாக வரும்.
    மெல்லின இடையின் மெய்களின் மேலேறிய உகரம் குற்றுகரம் ஆகாது.
    எனவே எதுவும் குற்றியலுகரம் அல்ல.

    *****

  7. #43
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 3. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: வன்றொடர்
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/423-3.html

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
    வன்றொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
    தேர்வு செய்து தனியே எழுதுக
    அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

    மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
    குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
    குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
    தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
    அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
    காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு


    பயிற்சி 4. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: மென்றொடர்
    http://kavithaiyilyappu-payirchchi.b.../02/423-4.html

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
    மென்றொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
    தேர்வு செய்து தனியே எழுதுக
    அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

    குத்து கூடாது இங்கு குடகு பஃது ஊறு
    தகடு கோபு வாகு ஏச்சு பெரிசு துன்பு
    சோறு சுஃறு மாது காடு காற்று மண்டு
    அஃகு மஞ்சு ஜவ்வு குந்து ஒஃகு மாசு
    எய்து அளபு அமிழ்து பல்கு வெஃகு நட்பு
    தம்பு மார்பு கஃசு கூட்டு வள்பு கொக்கு


    ******

  8. #44
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 3. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
    வன்றொடர்: விடை


    ஏச்சு காற்று குத்து கூட்டு கொக்கு நட்பு

    பயிற்சி 4. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
    மென்றொடர்: விடை


    இங்கு குந்து தம்பு துன்பு மஞ்சு மண்டு

    *****

  9. #45
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 5. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: இடைத்தொடர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
    இடைத்தொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
    தேர்வு செய்து தனியே எழுதுக
    அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

    வெஃகு ஜவ்வு காடு குத்து கஃசு ஏச்சு
    தகடு குடகு சோறு பெரிசு கோபு வாகு
    குந்து அமிழ்து இங்கு ஒஃகு கொக்கு கூட்டு
    மாது எய்து மாசு அஃகு ஊறு நட்பு
    மார்பு மஞ்சு வள்பு பஃது காற்று தம்பு
    அளபு சுஃறு கூடாது பல்கு மண்டு துன்பு

    பயிற்சி 6. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: உயிர்த்தொடர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
    உயிர்த்தொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
    தேர்வு செய்து தனியே எழுதுக
    அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

    மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
    குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
    குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
    தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
    அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
    காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு

    பயிற்சி 7. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: நெடிற்றொடர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
    நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
    தேர்வு செய்து தனியே எழுதுக
    அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

    அமிழ்து துன்பு மாது ஒஃகு குந்து மஞ்சு
    கோபு தம்பு எய்து அஃகு காடு அளபு
    வள்பு பல்கு குத்து மாசு குடகு தகடு
    பஃது காற்று மார்பு ஏச்சு ஊறு ஜவ்வு
    கொக்கு வெஃகு வாகு சோறு மண்டு கூட்டு
    சுஃறு இங்கு பெரிசு கூடாது நட்பு கஃசு

    பயிற்சி 8. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: ஆய்தத்தொடர்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
    ஆய்தத்தொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
    தேர்வு செய்து தனியே எழுதுக
    அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

    மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
    குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
    குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
    தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
    அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
    காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு

    *****

  10. #46
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    பயிற்சி 5. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
    இடைத்தொடர்: விடை


    அமிழ்து எய்து பல்கு மார்பு வள்பு ஜவ்வு

    பயிற்சி 6. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
    உயிர்த்தொடர்: விடை


    அளபு குடகு கூடாது சோறு தகடு பெரிசு

    பயிற்சி 7. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
    நெடிற்றொடர்: விடை


    ஊறு காடு கோபு மாசு மாது வாகு

    பயிற்சி 8. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
    ஆய்தத்தொடர்: விடை


    அஃகு ஒஃகு கஃசு சுஃறு பஃது வெஃகு

    *****

  11. #47
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    4.30. அசை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அவனின்றி அசையா தணுவும் எனும்போது
    அசையென்றால் அதிர்வாகும் என்பது விளங்கும்
    அணுக்கள் தனியே அசைவது அதிர்வு
    அணுக்கள் சேர்ந்தே அதிர்வுகள் சீர்ப்பட்டு
    ஒருமித் தசைவது அசையென அறியலாம்.

    அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
    அசையின் இயக்கம் நுடங்கி விரிந்து ... ... ... [நுடங்குதல்=மெலிதல்]
    இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பென.

    4.31. யாப்பின் அசை

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
    கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
    அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே.

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
    நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
    அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
    இசைந்து சீர்களில் இணைந்து
    தளைகளில் தழைத்து
    தொடைகளில் தொடுத்து
    இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே.

    4.32. எழுத்தும் அசையும்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
    முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
    எழுத்துகள் சேர்ந்து அசைந்திடும் போது
    ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே.

    ’தாஅ’ என்று கேட்கும் போது
    தாவின் ஓசை முழுவதும் ஒலிக்கும்.
    அதுவே ’தார்’என ஆகும் போது
    மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
    ’தா’-வின் ஓசை குறைந்தே ஒலிக்குமே.

    ’குயி’எனச் சொல்லும் போ(து)அத் தொடரிலே
    வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
    பொருளேது மின்றிக் கேட்கும் அசைந்தே.

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    அதுவே ’குயில்’எனச் சொல்லும் போது
    இடையின ஒற்றின் வரவால்
    தனிக்குறில் ஓசைகள் இயைந்து
    இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
    குயில்கள் பாடும் இன்னிசை சுட்டுமே!

    எழுத்தும் தானே தனியே அசையும்.
    தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
    தனித்தனி அசையென் றாகிட முடியும்.
    தனிவரும் ஒற்றை எழுத்தே
    தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
    ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே.

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    ’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
    ’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
    ’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
    ’அ’வென்பது சுட்டும் ’தீ’யென்பது சுடும்
    ’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால்
    ’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.

    *****

  12. #48
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    54,068
    Downloads
    10
    Uploads
    0
    4.33. அசை வகைகள்
    [மேல் விவரங்கள்: 3.1. அசையும் சீரும்]

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
    ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
    ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
    உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே.

    அசையில் இரண்டு வகைகள் உண்டு:
    நேரசை நிரையசை என்பன அவையே.
    நேரே வருவதால் நேரனப் பட்டது:
    ஒன்றே எழுத்தால் ஆவதால் நேரசை.

    ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
    எழுத்துகள் இரண்டு தொடர்ந்தே வந்து
    இணைந்து அசைவதால் நிரையசை யாகுமே.

    குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ
    ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும்
    குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
    தனித்தும் ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.


    4.34. நேரசை என்பது

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நேரசை வந்திடும் வகைகள் நான்கு
    ஒருகுறில் தனித்து வருவது நேரசை
    ஒருகுறில் ஓற்றடுத்து வருவதும் நேரசை ... ... [ஒற்றடுத்து வருவது = அடுத்து வருவது ஒற்றெழுத்து]
    ஒருநெடில் தனித்து வருவது நேரசை
    ஒருநெடில் ஓற்றடுத்து வருவதும் நேரசை.


    ’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
    ’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
    ’பானு வந்தாள்’ என்ற தொடரில்
    நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

    தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின்
    இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
    ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
    ’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகுமே.

    4.35. நிரையசை என்பது

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நிரையசை வந்திடும் வகைகள் நான்கு
    குறில்கள் இரண்டு வருவது நிரையசை
    குறிலிணை ஓற்றடுத்து வருவது நிரையசை
    குறில்நெடில் இணைந்து வருவது நிரையசை
    குறில்நெடில் ஓற்றடுத்து வருவது நிரையசை.


    ’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
    ’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.
    ’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
    ’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
    நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

    ஒற்றில்லா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
    ஒற்றில்லை யென்றால் முதல்வரும் நெடிலே.
    ’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
    ’மாவு’ நெடில்குறில் தனித்த நேரசை

    ஒற்றில்லா நிரையசையில் இரண்டெழுத் திருக்குமே
    அவற்றுள் முதலது என்றும் குறிலே.
    ’உமா’வெனும் நிரையில் முதலது குறிலே.

    4.36. அசையும் சொல்லும்

    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
    சொற்களும் அசைதனில் வருவது உண்டு
    சொல்லொன்று வரலாம் நேரசை ஒன்றில்
    சொல்லொன்றோ இரண்டோ வரலாம் நிரையசையில்.

    தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
    தனியே பொருளது தராது நிற்குமே
    ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
    ’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
    ’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
    ’லி’யெனும் நேரசைப் பொருளேது மில்லை.

    தனிநெடில் நிரையசை பொருள்தர வரலாம்
    தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
    ’தா-பால்’ என்னும் சொற்களில் சான்றுள.

    குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
    குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
    ’உமா-இறால்’ என்னும் சொற்களில் சான்றுள.

    நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
    பகுதியாய் வருவது பொதுவில் காண்பது
    ’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றாம்.

    நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
    பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
    ’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றாம்.

    *****

Page 4 of 16 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •