Page 1 of 23 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0

    ரமணியின் கவிதைகள்

    ரமணியின் கவிதைகள்

    பொதுவாக எனக்கு மரபுக் கவிதைகள் பிடிக்கும். புதுக் கவிதைகளில் நாட்டமில்லை. இந்தத் திரியில் நான் இதுவரை எழுதிய கவிதைகளப் பகிர்ந்துகொள்வேன்.

    1. கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு!
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது
    புதுக்கழுதை யாகியே புறங்கால் உதைவிட்டுத்
    தலைதெறித்(து) ஓடியும் திரிந்தும் கணிணியின்
    வலைமின் தாள்களை விழுங்குவது கண்டதை
    அசைசீர் தளைதொடை ஓசை கொண்டுவந்(து)
    இசைவலி யுறுத்திக் கட்டிப் போட்டேனே.

    உதைத்தது கடித்துக் குதறிவிட் டாலோ
    பதைத்தது விடுத்தெனை ஓடிவிட் டாலோ
    நியதி இல்லா சுதந்திர உரிமையில்
    அவதி யுறுவது அடியேன் அன்றோ?
    --ரமணி 20/11/2012

    *****

    2. என்னதான் பிடிக்கும்?
    (மரபில் புதுக்கவிதை)

    (கலித்தாழிசை)
    என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
    கோபித்துக் கொண்டாள்.
    என்னத்தான் உனக்கு பிடிக்கும் என்று
    சொன்னேன் என்றேன்.
    என்ன, ஸ்மார்ட் என்று நினைப்போ?
    எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
    என்முகம் இப்போது சுருங்கியது கண்டு
    எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன் என்றாள்!
    --ரமணி 21/11/2012

    (இணைக்குறள் ஆசிரியப்பா: 22/12/2012)
    என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
    கோபித்துக் கொண்டாள்.
    என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
    என்று சொன்னேன் என்றேன்.
    ஸ்மார்ட் என்று நினைப்போ?
    எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
    என்முகம் இப்போது
    சுருங்குதல் கண்டு
    எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
    என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!
    --ரமணி 22/11/2012

    *****

  2. Likes arun karthik, முரளி liked this post
  3. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    3. போகதது போக...
    (தரவுக் கொச்சகக் கலிப்பா)

    கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
    படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
    தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
    காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிநின்று
    போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!
    --ரமணி, 20/08/2012

    *****

  4. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    மிகவும் அருமையாக இருக்கிறது. இன்னும் கொடுங்கள்.. நன்றி

  5. Likes ரமணி liked this post
  6. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    ரமணியின் கவிதைகள் ரசிக்கதக்கவை, வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  7. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4. உண்டு இல்லை எனப் பண்ணுவோம்!
    (குறள் வெண்செந்துறை)

    உண்டு என்பது உண்மை ஆயின்
    இல்லை என்பது மாயை ஆகும்.

    உண்மை என்பது ஒன்றே யாகில்
    மாயை என்றது பலவே யாகும்.

    ஒன்றே என்பது உள்ளே உறைவது
    பலவே என்றது வெளியே தெரிவது.

    உள்ளே உறைவதைப் புலன்கள் அறியா
    வெளியே தெரிவதே புலன்கள் அறிவது.

    புலன்களின் பின்னால் உள்ளது மனமே
    மனதின் செயல்வகை புத்தியால் சிறக்கும்.

    புத்தியால் ஒடுங்கும் தானெனும் அகந்தை
    அகந்தை ஒடுங்கினால் ஆத்மா தெரியும்.

    ஆத்மா தெரிந்திட ஞானம் பிறக்கும்
    ஞானம் நிலைபெற மனமும் வசப்படும்.

    மனம்வசப் பட்டால் புலன்கள் ஒடுங்கி
    ஒருங்கித் தெரியும் உள்ளே உறைவது.

    உள்ளே உறைவதன் தரிசனம் கிடைத்தால்
    பலவகை உலகின் மாயை விலகும்.

    மாயை விலகிட எல்லை இல்லா
    ஆத்மா ஒன்றே என்பது தெரியும்.

    ஒன்றின் உண்மை தெரியத் தெரிய
    நான்நீ இவையெனும் பேதங்கள் குறையும்.

    பலவகை பேதங்கள் குறையக் குறைய
    மனதின் எல்லை வானாய் விரியும்.

    வானாய் விரிய உயிரொளி பெருகும்
    சச்சிதா னந்த உண்மை விளங்கும்!

    --ரமணி, 19/08/2012

    *****

  8. Likes ஜானகி liked this post
  9. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    5. நகைச்சுவை வெண்பாக்கள்

    யார் உங்கள் ருக்கு?
    நாருக்குப் பூமணம்போல் நீருக்குத் தீஞ்சுவைபோல்
    ஊருக்குக் கோவில்போல் சீருக்கு ஓசைபோல்
    காருக்குப் பெட்ரோல்போல் யாருக்கும் தீங்கெண்ணா
    வேருக்கு நீராவாள் ருக்கு.

    எருக்கு முளைபோல் கிறுக்குப் பிடிபோல்
    முருக்குப் புளிபோல் நறுக்குத் தெறிபோல்
    கருக்குதல் காய்க்கத் தருக்கு நிறைந்தே
    செருக்குடன் வாழ்ந்திடும் ருக்கு.

    [முருக்கு=எலுமிச்சை கருக்குதல்=திட்டுதல்
    தருக்கு=வலிமை, தைரியம் செருக்கு=கர்வம்]
    --ரமணி, 28/11/2012

    பெருங்காயம் வெங்காயம்
    பெருங்காயம் வெங்காயம் ஓர்விகுதி யாயின்
    பெருங்காயம் ஆகுமோ வெங்காயம் -- முன்னது
    உண்ணும் உணவில் மணம்பெருக்கும் -- பின்னதோ
    கண்ணீர் பெருக்கி விடும்.
    [விகுதி=சொல்லின் இறுதிப் பகுதி]

    பெருங்காயம் மாவடு
    மாவிளம் பிஞ்சுதான் மாவடு ஆயினும்
    மாவடு என்றால் பெருங்காயம் என்றுபொருள்
    மாவடுவி லேது பெருங்காய(ம்) ஏனெனில்
    மாவடுவின் காயம் சிறிது.
    [காயம்=உடல்]

    மாவடு தன்மரத்தில் ஓங்கி வளர்ந்திட
    மாங்காய் பெயரில் பெருங்காயம் பெற்றந்த
    மாங்காயே கல்லடி வாங்கிப்பின் காயத்தில்
    மாவடு வோடு விழும்.
    [காயம்=உடல், அடிபட்ட காயம் வடு=தழும்பு]

    --ரமணி, 30/11/2012

    *****

  10. #7
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    மாவடுவின் புதிய அர்த்தம் ஜோர் !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  11. Likes ரமணி liked this post
  12. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    6. கணினி போற்றுதும்!?
    (தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)

    கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
    பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
    கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

    பலவகை வடிவினில் பாரினில் உறைந்திடும்
    பலவகை மனிதரும் பலவா(று) உகந்திடும்
    கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

    நில்லா உலகின் எலிகள் போட்டியில்
    அல்லும் பகலும் மானிடர் வாழ்வினில்
    வல்லமை வழங்கிடும் கணினி போற்றுதும்!

    குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
    கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்துக்
    கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

    அலுவல கத்தினில் பணியினில் அமர்ந்து
    அலுவல் கணக்கர் ஆளுனர் செயலோர்
    அலுவலில் உதவியும் ஆக்கம் தந்தும்
    தொழில்மனைக் கருவியில் தொழிலோர் கரத்தினில்
    வழுவறப் பயின்றும் விளைச்சல் தருமே.

    குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
    மடிமேல் கணினியும் மேசைக் கணினியும்
    மின்பொருள் உட்புறம் உறையும் கணினியும்
    அன்னை தந்தை ஆசான் தோழன்
    தூதுவன் மருத்துவன் கேளிக்கை யாளன்
    யாதொரு பாத்திரம் தன்னையும் ஏற்று
    சாதுவாய்ச் செய்தே ஆடிடும் பாடிடும்!

    வன்பொருள் மென்பொருள் இணைபொரு ளாக
    மின்னலை பரப்பும் கைத்தொலை பேசியுள்
    பின்னலாய் இழைந்திடும் கணினிக் கூறுகள்
    நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
    ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
    தொழிலினை உறவினை வம்பினை வளர்த்திட
    வழிவகை செய்யும் வித்தக னாகுமே.

    வெளிப்பகை உட்பகை வானிலை பொருளியல்
    செயல்வகை நடைமுறை விதிமுறை போன்று
    அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
    அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

    கரங்கள் பலவாம் கடவுள் வடிவினில்
    கரங்கள் பலவே கணினி வடிவிலும்!
    விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
    விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
    அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதிந்து
    பிரதிகள் அச்சிடும் அச்சுப் பொறிக்கரம்
    இணைப்புகள் தாங்கி மோடம் டெலிஃபோன்
    இணைய தளங்களை எட்டிடும் கரத்தால்
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    மூதுரை நனவாய் நேரினில் காட்டிநம்
    விழிகள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்.

    எனினும்

    இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
    வித்தகன் நாயகன் வேலையாள் தோழனாய்ப்
    பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
    கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

    மின்னெலியில் மௌனமாய்க் கண்விழித்துக் கைச்சொடுக்கி
    மென்விரல்கள் ஐந்தையும் வலிகாண வைத்து
    சுட்டுவிரல் நோகவைக்கும் மின்னெலியின் சக்கரத்தில்!
    தட்டெழுதல் எளிதாகக் கையெழுத்தே மறந்துவிடும்!

    எழுவது மறந்து தொழுவது வரண்டு
    பொழுதுகள் மறந்து அறநெறி துறந்து
    உடல்நலம் பேணுதல் அசட்டை செய்து
    பெரியவர் மனதினில் வறியவர் ஆகவும்
    சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
    இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
    தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
    மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
    கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

    கரணம் என்பது உபகரணம் ஆகி
    மனிதன் அவற்றை ஆளும் வரையில்
    காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

    பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
    அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
    பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
    உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

    --ரமணி, 14/12/2012

    *****

  13. Likes ஜானகி liked this post
  14. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கவிதைகள் அனைத்துமே பெருங்காயம் போல் மணத்து,
    மாவடு போல் நறுக்கென்று உரைத்து,
    கணினி எனும் மாயத்திரையில் உலாவி
    அனைவர் மனதையும் கொள்ளைகொள்கின்றன...
    பாராட்டுக்கள்! தொடருங்கள் !

  15. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம்.

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ரமணி

    Quote Originally Posted by ஜானகி View Post
    கவிதைகள் அனைத்துமே பெருங்காயம் போல் மணத்து,
    மாவடு போல் நறுக்கென்று உரைத்து,
    கணினி எனும் மாயத்திரையில் உலாவி
    அனைவர் மனதையும் கொள்ளைகொள்கின்றன...
    பாராட்டுக்கள்! தொடருங்கள் !

  16. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    7. ஒரு கணினி யந்திரப்புலவரின் விஞ்ஞானப் புலம்பல்
    (குறள் வெண்செந்துறை)

    பள்ளியின் கல்லூரியின் பயிற்சியில் கலகலப்பில்
    உள்ளியது போல்முனைந்து உயர்வது எக்காலம்?

    அன்று நினைத்ததெல்லாம் தமிழில் முயன்றதெல்லாம்
    இன்று செய்துபார்க்க இயல்வது எக்காலம்?

    ’பொன்னியின் செல்வன்’போல் கதைகள் மறுபடியும்
    உன்னிப் படித்துமனம் உவப்பது எக்காலம்?

    சுஜாதா கதையுலகம் பாரதியின் பாடல்கள்
    தி.ஜா. கதையுலகம் திரும்புவது எக்காலம்?

    வாங்கிக் குவித்த ஆங்கில நாவல்கள்
    தூங்கி வழிவதனை எழுப்புதல் எக்காலம்?

    எல்லோரும் எளிதாக எழுதிவரும் கவிதைகளை
    பல்லாயிரம் நானும் படைப்பது எக்காலம்?

    தென்னந் தோப்புகளில் தென்னையிள நீர்குடித்து
    முன்னம்போல் மட்டைப்பந் தாடுவது எக்காலம்?

    திருச்சிநகர்த் தெருக்களிலே தோழர்கள் புடைசூழ
    சுற்றிவந்து கண்ணோக்கிப் பற்றுவது எக்காலம்?

    கதிரவன் மறையும்போது காவேரிப் பாலம்நின்று
    உதிர்த்த வண்ணங்களை வியப்பது எக்காலம்?

    மென்பொருள் துறையினிலே மேன்மைகள் அதிகமென்று
    வண்ணங்கள் பறக்கத்தேறி விழுந்து மாட்டினேனே!

    பொருளீட்ட ஊர்சுற்ற வெளிநாடு போகவர
    அனைவரும்போல் ஆசைப்படப் பொறியினிலே விழுந்தேனே!

    வாழ்வியல் ஆசைகள் தேவைகளாய் உருவெடுத்து
    நுண்கலை ஆசைகளை வெல்லுமென நினைக்கவில்லை!

    விருந்துகளில் பொம்மைகளின் தொழில்சார்ந்த நட்புறவில்
    விருதுகளில் நானுமோர் கைப்பாவை யானேனே!

    ஆட்டுவித்தார் ஆட்டியபடி ஆடிவரும் ஆட்டத்தில்
    ஆட்டுமந்தை ஆடாகிக் காட்டும்வழி போகிறேனே!

    உறவுகள் மறந்துவிட சிறகுகள் முறிந்துவிட
    இரவுபகல் மாறிவிட உணவுகள் கூளமென!

    இயற்கையின் அழகினை பொதுமனிதர் இயல்பினை
    வியக்கும் வழியின்றி விரைகிறேன் கரைகிறேன்!

    பள்ளிப் பருவத்தில் கணினியின் கவர்ச்சியில்
    லெம்மிங்ஸ்* ஆடியது நனவாகிப் போனதே!

    வீடற்றோர் வழிகாட்ட விழிபொருத்திச் சார்ந்திருந்து
    ஆடுகள்போல் தொடர்ந்து ஆற்றினோமே அருவினைகள்!

    வினைகளின் விலைகளை விளைவுகளை யேற்று
    உயர்ந்தும் தாழ்ந்தும் வீழ்ந்தும் வெடித்தோமே!

    இத்தகைய இயந்திர வாழ்க்கையின் இறுக்கத்தைப்
    பொத்தலிட்டு வெளிவருவது எக்காலம், எக்காலம்?

    மூழ்காமல் வெளிவந்து முந்தைய தலைமுறைபோல்
    வாழ்வின் அர்த்தங்கள் அலசுவது எந்நாளோ?

    அந்தநாள் என்வாழ்வில் அகப்படாது போய்விடுமோ?
    கந்தலாய் லெம்மிங்போல் கிழிந்துநான் மறைவேனோ?

    --ரமணி, 23/12/2012

    குறிப்புகள்:
    தி.ஜா.--தி.ஜானகிராமன், பிரபல எழுத்தாளர், ’மோகமுள்’ நாவலாசிரியர்
    http://azhiyasudargal.blogspot.in/

    லெம்மிங் மின்விளையாட்டு பற்றி அறிந்திட:
    http://en.wikipedia.org/wiki/Lemmings_(video_game)

    *****

  17. Likes ஜானகி liked this post
  18. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    8. கடவுளிடம்...
    (மரபில் புதுக்கவிதை)

    (இணைக்குறள் ஆசிரியப்பா)
    கடவுளிடம் வேண்டிக் கேட்பது தவறா?
    என்றான் சிஷ்யன்.
    கடவுளிடம் வேண்டிக் கேட்பதினும்
    கடவுள் கொடுப்பதைக் கொள்வது மேலாகும்
    என்றார் அவன்குரு.
    ஏனிப்படி குருவே என்றான் சிஷ்யனே.

    குழந்தை தின்பண்டம் விழைந்து எடுத்தால்
    குறையளவே கொள்ளுமன்றோ?
    குழந்தை இருகைகள் குவித்து அள்ளினாலும்
    குறையளவே ஆகுமன்றோ?
    அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ?
    என்றார் அவன்குரு:
    யோசித்துப்பார் சிஷ்யா யாசிக்கும் போதினிலே!

    --ரமணி, 24/12/2012

    [குறிப்பு: பேரா. பசுபதி தமது ’கவிதை இயற்றிக் கலக்கு’ புத்தகத்தில் இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பற்றி, "இது, வடிவில், தற்காலப் புதுக்கவிதை மாதிரி இருக்கும்" என்கிறார் (பக்.93) இந்த உத்தியை முயன்று பார்க்க எழுதிய கவிதையிது. கதை பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

    *****

Page 1 of 23 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •