Page 7 of 23 FirstFirst ... 3 4 5 6 7 8 9 10 11 17 ... LastLast
Results 73 to 84 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #73
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    நகைச்சுவை வெண்பாக்கள்

    ஓரடிக்குள் அளபெடைத் தொடை
    (பலவிகற்ப பஃறொடை வெண்பா)

    காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
    சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
    வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
    காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
    வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய்
    சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
    காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று
    நாணக் குமரியை நல்வர வேற்குமே!
    சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
    திக்க்கித் திக்க்கிப் பேசு!

    *****

  2. #74
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    உண்பொருள் வெண்பா மாலை - 1
    ஒரு பா ஒரு பஃது

    (இன்னிசை வெண்பா அந்தாதி)

    காப்பு
    காஞ்சி முனிநீ கருணை உரையாற்றிப்
    பூஞ்சை யடியார்க்குப் புத்துயிர் தந்தாற்போல்
    என்வாழ்வில் ஆன்மீகம் ஏற்றுநான் முன்னேற
    உன்னருள் தாநீ யுவந்து.

    அவையடக்கம்
    பெரியவர் சொற்களைப் பேணித் தொகுத்தே
    அரியார் கணபதி அண்ணா எழுதிய
    நூல்களை நான்கொஞ்சம் நோக்கியே செய்ததைப்
    பாலென ஏற்பீர் பரிந்து.

    சாதம்
    சத்துள்ள தாலது சாதம் எனப்படும்
    சத்தான வர்களே சாதுக்கள் என்றாற்போல்
    சாப்பாட்டில் முக்கிய சத்துத் தருகிற
    காப்பீடே சாதமெனும் காப்பு. 1

    காப்பெனச் சொன்னாலும் கற்றவர் வேடிக்கை
    யாப்பெனச் சொல்வ தியாது? பிரசாதம்
    ஆவது பூசைப் படைப்பெனில் சாதமென
    ஆவதோ நாமுண்ணும் ஆக்கு. 2

    பாயசம்
    ஆக்கும் உணவினில் ஆக்கம் பெறநின்று
    நாக்கில் மனதினில் நானென்று தித்திக்கும்
    பாயசமே வெல்லமும் பாலும் அரிசியும்
    வேயவெந் துண்ணும் உணவு. 3

    உணவாக்கும் பாயசம் உள்ளே இறுகக்
    கணத்தில் உருவாகும் சர்க்கரைப் பொங்கல்
    திருமால் அடியார் திருக்கண் ணமுதாம்
    திருக்கன்னல் வேய்ந்த அமுது. 4

    சாம்பார்-ரசம்-மோர்
    அமுதென மூவன்னம் ஆக்குவோம் ஆங்கு
    தமதென முக்குணம் தங்குமே! காய்கறித்
    தானொன்று தாளிக்கும் சாம்பார் தமோகுணம்
    தானெனத் தங்குமது தான். 5

    தானற்ற தெள்ளிய சாறாகிக் கையேந்தி
    வானோக்கி உட்கொண்டு வாழ்த்தும் ரஸத்துள்ளே
    மானிடர் வாழ்வில் மகிழும் ரஜோகுணம்
    ஊனின் இயக்க ஓர்ப்பு. 6

    ஓர்ப்பாம் ரஸத்தை உவகையில் வைணவர்
    ஆர்ப்பில் அழைப்பது சாத்தமுது நாமத்தில்
    சாற்றமுது என்பதே சாத்தமு தானது.
    சாற்றமுது பின்னேமோர் உப்பு. 7

    உப்பிட்ட மோர்சாதம் உண்போம் இறுதியில்
    உப்புமோர் சாதத்தின் உள்வெண்மை சத்குணம்
    பாயாசம் உண்டபின் பல்நலன் பேணிடக்
    காயாத மோர்சாதக் காப்பு. 8

    தாம்பூலம்
    காப்பாக உண்ணுவோம் காய்கறிகள் மத்தியில்
    சாப்பாட் டிறுதியில் தாம்பூலம் மெல்லுவோம்
    வெற்றிலைபின் சுண்ணாம்பு வேய்ந்துதூள் பாக்குண்ணும்
    சிற்றின்ப மாம்வெற் றிலை. 9

    வெற்றிலை யென்றபேர் ஏனென்று கேட்டாலோ
    மற்ற செடிகொடி பூகாய் கனியாகும்
    சிற்றிலைக் கீரையைச் சேர்ப்போம் சமைத்தபின்
    வெற்(று)இலைக்கோ நேர்வர வேற்பு. 10

    நூற்சிறப்பு
    உணவின் உருவே உயிரின் உறைகள்
    உணவாகும் உண்ணுதல் உன்னுதல் யாவும்
    உணவின் மகத்துவம் உள்ளியே உய்வோம்
    மணமுடன் வாழ்வோம் மகிழ்ந்து.

    --ரமணி, 24/07/2013

    *****
    Last edited by ரமணி; 26-07-2013 at 03:40 AM.

  3. #75
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    பற்றுக பற்றுள்ளார் பற்றினை அப்பற்றைப்
    பற்றாது விட்டாலோ பாடு. ... 23

    வங்கிக் கடன்தொகை வாராது போனாலோ
    மங்குமே வங்கிப் புகழ். ... 24

    ரமணி, அருமையான கவிதைகள். வங்கி குரல்களை, மன்னிக்கவும் குறள்களை , மிகவும் ரசித்தேன். யதார்த்தம். வாழ்த்துக்கள்.
    Last edited by முரளி; 25-07-2013 at 12:22 PM.

  4. Likes ரமணி liked this post
  5. #76
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    உண்பொருள் வெண்பா மாலை - 2
    ஒரு பா ஒரு பஃது

    (இன்னிசை வெண்பா அந்தாதி)

    காப்பு
    நானிலம் நல்வாழ நாளும் தவம்செய்து
    மாநிலங்கள் கால்நடந்து மக்கள் குறைதீர்த்து
    தெய்வமாய் நின்றிடும் தேவரீர் காஞ்சிமுனி!
    உய்விக்க வேண்டும் குரு.

    அவையடக்கம்
    உணவின் மகத்துவம் கூறிய பின்னர்
    மணமிகு சிற்றுண்டி மாட்சிமை மேய்வோமா?
    அண்ணா கணபதி பண்ணிய செய்தியென்
    வெண்பாவில் ஏற்பீர் விழைந்து.

    இட்டிலி
    இட்டதும் அஃதே இலையில் மறைந்திடும்
    இட்டு இலியாக இட்டிலியென் றாரொருவர்
    வாக்குச் சமர்த்தராய் வார்த்தைகள் சொன்னதன்
    நோக்குவோம் உண்மை நுவன்று. 1

    நுவன்றால் வெளிவரும் உண்மை இதுதான்
    எவரேனும் மாண்டால் இடுகாடு செல்வர்
    இடுதங்கம் என்றால் நெருப்பிடும் தங்கம்
    இடுமருந்து பண்ணுமே ஈர்ப்பு! 2

    ஈர்த்திடும் இட்டிலி இட்டபடி வேகுமே
    பேர்க்கும் வரையில்நாம் பேசா தமருவோம்
    இட்டலி யென்பதே பேச்சு வழக்கினில்
    இட்டிலி யானதே இன்று. 3

    இடியாப்பம்
    இன்றும் இடியாப்பம் செய்வ(து) இடுதலில்;
    நன்மை தரும்பண்டம் ஆப்பமே, அப்பமல்ல;
    ஆப்பம் எனச்சொன்னால் ஆவியில் வேகுதல்
    ஆபம் வடமொழி நீர். 4

    உப்புமா
    நீருண்ணும் உப்புமா ஏனிந்தப் பேராகும்?
    ஓர்வகையில் சொல்லுவார் உப்பினால் அப்பெயர்;
    உப்பிட்டே செய்கிறோம் தோசைவடை இட்டிலி
    உப்புமாவில் கொஞ்சமே உப்பு! 5

    உப்புமா அன்றிதுவே உப்புமா! வாணலியில்
    உப்புமே நீருண்ட உப்புமா வின்ரவை!
    நெய்சோற் றரிசியும் நீருண்டால் உப்புமே
    நொய்யுப்பு மாவோ விரைந்து. 6

    அப்பம்-வடை
    விரைத்திடும் அப்பமே வீங்கிப் பழுக்கும்!
    உரைத்திடும் பேரினில் உள்ளதே ஆபூபம்
    ஆபூப்யம் மாவாகும் அப்பம் பணியாரம்
    ஆபூபம் ஆகும் வடை! 7

    வடநாடு தந்ததால் ஆகும் வடையென்(று)
    இடம்கண்டு சொன்னவர் ஈங்கொரு வித்தகர்
    மாஷம் உளுந்தாக ஆபூபம் அப்பமாம்
    மாஷாஅ பூபம் வடை. 8

    அப்பளம்
    வடைவந்தால் அப்பளம் வாளா விருக்கும்?
    இடையில் நொறுக்கியே தின்ன இனியதாம்
    அப்பளாம் என்பது அப்பளம் என்றசொல்
    அப்பம்போல் அப்பள வட்டு. 9

    வட்டைக் குழவியால் அப்பளித்துப் பூசியே
    வட்டமான அப்பளக் கட்டுகள் செய்து
    பலவகை அப்பளம் பார்த்துச் சுவைத்து
    நலமென உண்டிடும் நாக்கு! 10

    நூற்சிறப்பு
    சிற்றுண்டி தந்திடும் சிற்றின்பம் நாவிலே
    சற்றே அளவுடன் ஏற்றால் செரித்திடும்
    நாவினைக் கட்டாது நாடினால் நம்முள்ளே
    பாவாது தந்திடும் பாடு!

    --ரமணி, 26/07/2013

    ஆதாரம்:
    ரா.கணபதி எழுதிய புத்தகம்
    ’சொல்லின் செல்வர் ஶ்ரீ காஞ்சி முனிவர்’
    பதிப்பு: திவ்ய வித்யா ட்ரஸ்ட், சென்னை

    *****

  6. #77
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வசன ரூபக வெண்பா: வட்டார வகுப்பு வழக்கில்

    அந்தணர்
    என்னவோய் சொன்னதெலாம் ஏறிச்சா உம்தலைல?
    என்னசொன்னீர்? ஞாபகம் எங்கயோ! - மின்னநீர்
    சொன்னதும் இப்பநீர் சொல்வதும் ஒண்ணுமே
    என்தலைல ஏறலயே ஓய்!

    ஏன்னா? எதிர்த்தாத்து சீமாச்சு வந்திருந்தார்...
    ஏன்தான் உயிரை எடுக்கறானோ? - பேன்-னா
    பெருமாள்னு சொல்ற பிரகிருதி யாச்சே?
    வருமான்னு கேட்டார் அவர்!

    செட்டியார்
    அப்பச்சி உள்ளயா ஆச்சி? எதுக்காக?
    இப்பத்தான் போனாக எங்கயோ! - அப்பத்தா?
    என்னவோ உள்ளாற பேசிட் டிருக்காக...
    என்ன விசயம் கதிரு?

    பழனியப்பன் வள்ளி பகட்டுக்கல் யாணம்
    விழாபோல கூட்டம்நீ பாத்தே? - அழகப்பா,
    அத்தான்நான் போகாம? ஆறுநாள் தங்கினேன்.
    அத்தனையும் முத்தையா சொத்து.

    சென்னைத் தமிழ்
    காலீல போணியே சாவு கிராக்கிபா!
    வேலீல பச்சோந்தி கீறமாரி! - சோலியப்
    பாக்கலாம்னு இஸ்தா கலாய்க்கறான் சோமாரி!
    சாக்கடப் பன்னிமாரி கப்பு!

    திருநெல்வேலி தமிழ்
    வல்லம் கிராமம் வருதியளோ அண்ணாச்சி?
    இல்லமா இங்கனயே நிக்கேன்நான் - சொல்லுதேன்
    கேளுநீ, சேக்காளி சோலி இருக்கில்ல
    ஏளிநீ பையக் கிளம்பு!

    [வருதியளோ=வருகிறீர்களா; நிக்கேன்=இருக்கேன்; சொல்லுதேன்=சொல்கிறேன்;
    சேக்காளி=நண்பன்; சோலி=வேலை; ஏளி=ஏ பிள்ளை]

    கொங்குத் தமிழ்
    தண்ணியச் சேந்தி தலைலநல்லா ஊத்துடா
    இண்டம் பிடிச்ச பெருக்கானே! - தண்ணிவார்த்து
    சாப்டுபோட்டு இக்கட்ல அந்திக்குத் தங்கிக்க!
    கூப்டுட்டு வர்றேன் மளார்னு.

    [சேந்தி=இறைத்து; இண்டம்பிடிச்சவன்=கஞ்சன்; பெருக்கான்=பெருச்சாளி;
    தண்ணிவார்த்து=குளித்துவிட்டு; இக்கட்டு=இந்த இடம்; அந்தி=இரவு; மளார்னு=விரைவாக]

    மதுரைத் தமிழ்
    அக்கப்போர் பண்ணாமப் பையக் கெளம்பிநீ
    பக்கத்தூர் போய்ட்டுவா பஸ்புடிச்சு - எக்காளம்
    பண்ணினே, குண்டக்க மண்டக்க பேசினே,
    கொண்டுபோடு வேன்மவ னே!

    [அக்கப்போர்=தகராறு; பைய=மெதுவாக; குண்டக்க மண்டக்க=விதண்டாவாதம்; கோண்டுபோடுதல்=கொன்றுபோடுதல்]

    --ரமணி 29/07/2013

    Ref:
    http://ta.wikipedia.org/wiki/பகுப்பு...ுகள்

    *****

  7. #78
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    புள்ளின வழிபாடு

    நாகாக்காப் பேராசை மாந்தரிடை நானுழல்வேன்
    காவாக்கால் நீயென்னைக் கார்த்திகேயா ஆறுமுகா!
    காண்பதெல்லாம் ஓயாமல் காயாமல் கொள்வாழ்வில்
    மாண்பேது மால்மருகா கா!

    குருவிடம் கற்பர் குருவோ குறுணை!
    உருவை விரும்பித் துருவும் திரள்கள்
    அரளும் புரளும் சளசள வாழ்வில்
    கரையேற்று வேள்முரு கா!

    கொக்கரித்துக் கொத்தியே முட்டை பலவிக்கி
    எக்காள மாந்தர்க் கிறையாகி - நெக்குண்டு
    மீண்டும் பிறந்தால் மனிதருணாப் புள்ளென
    ஈண்டு அருள்முருக வேள்!

    இதுபோல் அனபர்கள் மற்ற பறவைகள் குறித்து எழுதலாமே!

    *****
    Last edited by ரமணி; 06-08-2013 at 04:54 AM.

  8. #79
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    புள்ளின வழிபாடு

    அன்புறாது பண்புறாது எல்லோரும் இன்புறாது
    தன்மையாய் வன்மையும் இன்மையும் பெற்று
    எனக்கும் உனக்கும் கணக்கும் வழக்கும்
    எனவாழும் மாந்தர் விரல்கொடுக்க எத்தனைநாள்
    வானில் சிறகடித்து வாழ்வேன் படபடத்து?
    நானோ மனிதரின் ஆன்மாக் குறியீடு?
    நானோ அவர்காணா சாந்தியின் சின்னமென?
    ஏனுனக் கென்குரல் என்முரல் கேட்டிலை?
    வான்புகழ் சக்தியெனைக் கா!

    --ரமணி, 06/08/2013

    *****

  9. #80
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சஹதர்மிணி
    (குறளடிச் சமனிலைச் சிந்து)

    அகமுடை யாளே - பெரும்
    . அன்புடைப் பெண்ணே
    முகமெழி லாளே - நல்
    . மொழியுரைப் பெண்ணே
    பகலிர வாகப் - பணி
    . யாற்றிடு வாயே.
    இகமதி லுன்னை - நான்
    . பெற்றதென் பேறே. 1

    சமமெனும் பாவம் - நீ
    . காட்டுவ தெங்ஙன்
    விமர்சனம் வீணாய் - நீ
    . செய்வது மில்லை
    தமதெனும் எண்ணம் - நீ
    . தாங்குவ தில்லை
    மமதையென் றுனக்கு - ஒன்றும்
    . அதிகமு மில்லை. 2

    பற்றுகள் யாவும் - மிகப்
    . பற்றிய தில்லை
    சுற்றமுண் டுனக்கு - எனில்
    . சுற்றமொன் றில்லை
    மற்றவர் நட்பும் - நீ
    . சற்றெனக் கொள்வாய்
    உற்றதுன் வாழ்வை - நீ
    . உவகையில் வாழ்வாய். 3

    பொழுதுகள் போகும் - உனக்குப்
    . பொழுதுகள் போதா
    தொழுவது என்றும் - நீ
    . பொழுதினிற் செய்வாய்
    அழுவது உண்டு - எனில்
    . அரற்றுவ தில்லை
    நழுவிடும் கணத்தில் - நீ
    . நன்மையே விழைவாய். 4

    கருத்தொரு மித்தும் - நம்
    . கருத்தினை மறுத்தும்
    குறைகளைக் குறைத்தும் - நாம்
    . நிறைகணே சித்தும்
    வருடங்கள் ஓட்டில் - நாம்
    . வாழ்வது கற்றோம்
    இருமனம் ஒன்றாய் - நம்
    . திருமண வாழ்வு. 5

    வருமினி வாழ்வில் - நம்
    . மரமது வளர
    ஒருமக னுக்கே - வதுவை
    . உற்றதின் பின்னவர்
    திருமண வாழ்வில் - நாம்
    . இனியன செய்தே
    உரியது பேணி - வரும்
    . உறவுகள் வளர்ப்போம். 6

    வருமினி வாழ்வில் - நம்முள்
    . ஒருவரே இருத்தல்
    வருமொரு நாளே - என்று
    . வருவதை யறிந்து
    விருப்புடன் வாழ்வோம் - நாம்
    . இருப்பது போற்றி
    பெருவகைக் கனவு - ஏதும்
    . வருவது தவிர்த்து. 7

    உணவுகள் செய்வோம் - நமக்
    . கேற்பதை உண்போம்
    பிணக்குகள் உண்டு - நம்முள்
    . இணக்கமும் உண்டு
    கணக்குகள் இல்லை - என்று
    . பணத்தினை வென்றோம்
    மணக்குள நாதன் - நம்மைக்
    . காத்தரு ளட்டும்! 8

    --ரமணி 15/08/2013, கலி.30/04/5114

    *****

  10. Likes முரளி liked this post
  11. #81
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வேலனின் கோலம்

    (அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
    மா மா காய் மா மா காய் நிரல்)

    பாலும் தேனும் வேண்டேன்நான்
    . மௌனம் கிட்ட வேண்டுவனே
    வேலன் பார்வை பட்டாலே
    . வேண்டும் மாற்றம் வாராதோ?
    வேலன் பார்வை படுவதற்கே
    . மேலும் கீழும் பார்க்கின்றேன்
    ஆலை உள்ளம் கட்டுண்டால்
    . ஐயன் பார்வை வருமென்றார்.

    ஆலை உள்ளம் கட்டுண்ண
    . ஆன மட்டும் முயன்றேனே
    வேலை ஓய்வு பெற்றிடினும்
    . வேறோர் பக்கம் உளம்செலுதே
    வேலை வேண்டி வழிபட்டால்
    . ஏறும் பேய்கள் இறங்கிவிடும்
    கோலம் போடும் மனத்துள்ளே
    . வேலால் கோலம் போட்டுவிடு!

    வேலால் கோலம் போட்டாலே
    . வேண்டும் நேர்மை வந்துவிடும்
    காலைக் கையை அசைக்காது
    . காணும் கோலம் அமர்ந்தேபார்
    ஏலம் போடும் மனத்துள்ளே
    . ஏதும் எண்ணம் தொடராதே
    ஓலம் தன்னால் அடங்கிவிடும்
    . ஓசை யெல்லாம் ஓமாகும்.

    --ரமணி, 18/08/2013, கலி.02/05/5114

    *****

  12. #82
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    அறுசீர் விருத்தப் பயிற்சி 2
    (விளம் மா தேமா விளம் மா தேமா நிரல்)


    அத்தனுக்கு அரங்கம் அமைப்போம்!

    வடவரை கடைந்த நஞ்சை
    . மகிழ்வுடன் பருகிக் காத்த
    நடமிடும் நீல கண்டன்
    . நம்முளம் வந்து ஆட
    உடமைகள் குன்றச் செய்து
    . மடமைகள் மங்கச் செய்து
    கடமைகள் முடித்து விட்டுக்
    . காத்திருப் போமே இங்கு.

    யாதொரு வழியு மின்றேல்
    . நாமுளம் வருந்த வேண்டாம்
    மாதொரு பாகன் நம்முள்
    . வரவழி செய்தால் போதும்
    பாதமே பணிந்து நின்று
    . பன்மைகள் குறைத்து விட்டால்
    வேதனை தீர்த்து வைத்தே
    . வேண்டிய நன்மை செய்வான்.

    வான்வரும் கதிரும் அத்தன்
    . கானுறை உயிர்கள் சம்பு
    தேன்தரும் மலர்க பாலி
    . நெருஞ்சியும் முள்ளும் பித்தன்
    ஊன்தரும் உணவும் ஈசன்
    . உயிரிலாப் பொருளும் தாணு
    நானிதை அறியா தின்னும்
    . நாட்களைக் கழித்தல் ஏனோ?

    --ரமணி, 19/08/2013, கலி.03/05/5114

    *****

  13. #83
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    திருத்திணை நாயகன் பஞ்சகம்

    அறுசீர் விருத்தம்
    (விளம் விளம் மா விளம் விளம் மா)


    விருந்துணத் தாமுணும் இணையர்க்
    . கிரங்கியே விருந்தென நின்று
    இருகரம் உழுகலம் ஓட்ட
    . திணைவிளை செய்தபின் உண்டாய்
    உருவினைக் காட்டியே இணையர்
    . உய்வுற முத்தியும் தந்தாய்
    வருவினை வல்வினை யாவும்
    . திருத்திணை யீசனாற் போமே! ... 1.

    சுந்தரர் உன்புகழ் பாட
    . வந்தருள் லிங்கமாய் நின்றாய்
    தம்பிரான் காலடி மாலும்
    . சங்கினை ஊதியே நிற்க
    அம்புஜம் மேலமர் அயனும்
    . மத்தளம் தட்டியே ஆட
    எம்பிரான் ஆடிடும் ஆட்டம்
    . நம்புதற் கரியவோர் காட்சி! ... 2.

    கருவரை சுற்றிடும் சுவரில்
    . தாமரை ஆசனத் தமர்ந்து
    திருவருள் கூட்டிடும் அரிய
    . தென்றிசைக் கடவுள் காட்சி
    உருத்திர னுடனுறை யன்னை
    . ஒப்பிலா நாயகி யாவாள்
    வருபவர் மூழ்கியே பாவம்
    . உருவற ஜாம்புவின் தடாகம். ... 3.

    உழவனாய் அருளிய சிவனின்
    . உழுபடை இறைகலம் இங்கே
    வழுவறப் பங்குனி மாதம்
    . வழுத்திடும் ஆதவன் ஒளியே
    உழுதொழில் சிறப்பினில் உணவு
    . ஓங்கிட வேண்டுவர் இங்கே
    பொழுதெலாம் இன்னிசை பயில்வோர்
    . பூசைகள் செய்வதும் இங்கே. ... 4.

    சிவன்கொழுந் தீசராய் அருளும்
    . திருத்திணை திருத்தலம் சென்றே
    உவந்திடும் கலையெலாம் ஓங்க
    . உணவுகள் விளைச்சலிற் பெருக
    பவவினை வருவினை மாளப்
    . பலவிதப் பண்களில் போற்றித்
    தவமுடன் தானமும் சிறந்து
    . தரணியில் தழைத்திடக் கேட்போம். ... 5.

    --ரமணி, 26/08/2013, கலி.10/05/5114

    மேல்விவரம்:
    Shivakozhundhu Easwarar Temple : Shivakozhundhu Easwarar Temple Details | Shivakozhundhu Easwarar- Theerthanagiri | Tamilnadu Temple | ???????????????????
    http://koyil.siththan.com/archives/c...்கள்

    *****

  14. #84
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஒரே ஈற்றடிக்குப் பலவித நோக்கில் முதலடி வருமாறு எழுதிய குறட்பாக்கள். நீங்களும் முயன்று பாருங்களேன்?

    1. எங்கனம் பெய்யும் மழை?

    அங்கணண் போற்றாது இங்கவன் தோழனாக
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 1.
    [அங்கணன்=கடவுள், சிவன், திருமால்]

    எங்கும் பிறன்மனைப் பேறுகள் ஒப்பிடுவான்
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 2.

    அங்குமிங்கும் வானத்தில் ஐயோடைட் தூவினாலும்
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 3.

    தங்காத இல்லாள் தகாத பொருட்செல்வம்
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 4.

    வங்கப் புயற்சின்னம் எங்கோ நகர்ந்திட
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 5.

    பொங்கும மங்கல மெங்கணும் தங்கிட
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 6.

    பங்குச்சந் தைப்பொரு ளாதாரம் கோலோச்ச
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 7.

    அங்கண் விசும்பெலாம் ஆலகால நஞ்சாக
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 8.

    சிங்கங்கள் மாளச் சிறுநரி யாட்சியில்
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 9.

    சங்கினை ஊதுவாய் சண்முகன் மாமனே
    எங்ஙனம் பெய்யும் மழை? ... 10.

    --ரமணி, 30/08/2013, கலி.14/05/5114

    *****
    Last edited by ரமணி; 30-08-2013 at 04:06 AM.

Page 7 of 23 FirstFirst ... 3 4 5 6 7 8 9 10 11 17 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •