Page 2 of 23 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    9. திரமும் திறமும்
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    தன்திறம் என்பது தந்திரம் இல்லை.
    தன்திறம் உணர்த்தும் தன்னியல் பெதுவென.
    தந்திரம் உரைப்பதோ தானெனும் அகந்தையே.

    என்திறம் என்பது எந்திரம் இல்லை.
    எந்திரப் புலவனே தன்திறம் காட்டுவன்
    என்றே நிகழும் இன்றைய நிலையிலும்
    என்திறம் என்பது எந்திரம் இல்லை.
    எந்திரம் தாண்டிய இன்திறக் கலைகள்
    தாங்கிடும் உள்ளப் பாங்கெனக் குளதே.

    மன்திறம் என்பது மந்திரம் இல்லை.
    மன்னெனில் காவலன் மன்னன் கணவன்.
    மந்திரத் தாலே மாங்காய் காய்க்குமோ?
    மன்னன் கணவன் அவரவர் ஆவது
    மன்னன் திறமன்றி மந்திரம் ஆகுமோ?

    கேள்திறம் என்பது கேந்திரம் இல்லை.
    கேந்திரம் என்பது குறுவட்ட மையம்
    கேந்திர மையம் குறிப்பது தன்னை.
    கேளென் பதுவோ சுற்றமும் நட்பும்.
    கேளிர் திறன்தம் குடும்ப மையமெனில்
    கேளிர் ஆகார் இவர்கள் எனக்கே.

    சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை.
    சுயம்திறம் என்பது சகலர்க்(கு) உண்டு.
    சுதந்திரம் என்பதும் சகலர்க்(கு) உண்டு.
    நீயென் பின்னால் நிழலெனத் தொடர
    நானென் குடைவீசி நடக்கும் போது
    என்குடை உன்நாசி தொடாத வரைதான்
    என்சுதந் திரத்தின் வரையென யாகும்.
    சுயத்தில் ஆளும் திறமை யெல்லாம்
    சுதந்திரம் என்னும் பெயரில் மற்றோர்
    சுயம்திறம் அடக்கிச் சூளும் போது
    சுயம்திறம் யாவும் சுதந்திரம் ஆகுமோ?

    முகத்திற னுக்கு முகாந்திரம் இல்லை.
    முகத்திற னாலே முகஸ்துதி பெறினும்
    முகத்திறன் அகத்தை முன்வைப்ப தாமோ?
    முகத்தில் உள்ளது அகத்தில் இலையென
    முகத்தைப் பூசியே மழுப்பக் கற்றோர்
    முகத்திறம் என்பது அகத்திறன் ஆகுமோ?

    இன்திறம் இருந்தால் இந்திரம் வருமா?
    இன்திறம் என்பது இனிய திறமைகள்
    இந்திரம் என்பது இந்திர பதவி.
    இறைவன் கருணை இல்லா விட்டால்
    இனியதே எண்ணிச் செய்யும் திறமை
    இருந்தால் கூட இந்திரம் வருமோ?

    ஆள்திறம் என்பது ஆத்திரம் இல்லை.
    ஆள்திறன் குணத்தா லாவது ஆனால்
    ஆள்திறன் நலம்தர ஆத்திரம் நீங்கும்.
    ஆள்திறன் பணத்தால் ஆவது ஆனால்
    ஆள்திறன் பலம்தர ஆத்திரம் ஓங்கும்.
    ஆள்திறன் ஆத்திரம் சூழ்ந்திடும் கலியே.

    நம்திறன் நோக்கி நயம்பட வாழ்ந்து
    இன்திறன் வளர்த்து இனிமை சேர்த்தால்
    இறைத்திறம் ஓங்கிச் சரித்திரம் படைப்போம்.

    --ரமணி, 25/12/2012

    *****

  2. Likes முரளி, ஜானகி liked this post
  3. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    10. கலைமகளை வேண்டுவோம்!
    (குறள் வெண்செந்துறை)

    கலிசூழ்ந்த இந்நாளில் கல்வி எதுவென்று
    கலைமகளே நானறியக் கருணைசெய் தாயே!

    கல்வி எதுவென்று நானறிந்து உன்னருளால்
    இல்லறத்தில் சிறக்க உதவுவாய் தேவீ!

    இல்லறத்தில் சிறக்க வேண்டியது அனைத்தும்
    பல்வகையில் எனக்கருள வேண்டும் அம்மா!

    கல்வியும் செல்வமும் வேறல்லவே தாயே!
    கலைமகளும் அலைமகளும் மலைமகளும் ஒன்றன்றோ!

    எல்லோரும் இதையுணர்ந்து நல்லறத்தினில் வாழ்ந்து
    கல்வியும் செல்வமும் அறன்வழிப்பட அருள்வாயே!

    கல்வியும் செல்வமும் வீரமும் பெற்றோங்கும்
    நல்லவர்கள் பெருகியே அறம்வளர்க்க அருள்வாயே!

    நல்லவர்கள் பெருகி உலகில் அறம்தழைத்து
    இல்லறத்தில் ஆன்மஒளி கூடிடவே அருள்வாயே!

    --ரமணி, 30/12/2012

    *****

  4. Likes ஜானகி, முரளி liked this post
  5. #15
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    11. பெருமையும் புகழும்
    (ஆசிரியத் தாழிசை)

    எத்தகு மனிதன் வாழ்வில்
    பெருமையும் புகழும் பெறுவான்?
    குருவிடம் சிஷ்யன் கேட்டான்.

    கேள்வியே தவறு சிஷ்யா!
    எத்தகு வாழ்வில் மனிதன்
    பெருமையும் புகழும் பெறுவான்?

    நாடகம் ஒன்று நடப்பதாக
    நினைவிற் கொள்வோம் சிஷ்யா
    நவின்றார் அவனது ஆசான்.

    அரசன் வேடத்தில் ஒருவன்
    அறிஞன் வேடத்தில் ஒருவன்
    வறியவன் வேடத்தில் ஒருவன்.

    பெருமை யாருக்கு இவர்களில்?
    நடிப்பில் சிறப்பவ னுக்கே!
    நன்றாய்ச் சொன்னாய் சிஷ்யா!

    வாழ்க்கை நாடக வழிதான்
    வாழும் மனிதனோர் நடிகன்
    வேடம் முக்கியம் அல்ல.

    அறம்தரும் நெறிகளைக் கொண்டு
    அகிம்சை வழியே நடந்து
    ஆணவம் எல்லாம் துறந்து

    தானொரு நடிகன் ஆயினும்
    தானும் அவனும் வேறெனும்
    தத்துவம் அறிந்து கொண்டு

    ஒருவன் வாழ்வில் நடித்தால்
    பெருமையும் புகழும் அவனுக்கே!
    அருமையாய் முடித்தார் ஆசான்.

    --ரமணி, 01-01-2013
    [கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

    *****

  6. Likes முரளி, ஜானகி liked this post
  7. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    12. உறவாடும் படிமக் குறிகள் (Icons)
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    காலையில் ஜனித்தெழுந்தால் கண்படும் ஜன்னல்
    மூளையில் செய்தியோர் மூலையில் இணைக்கும்:
    கணினிகள் ஜனிப்பதும் ஜன்னல்கள் என்னும்
    அணிமிகு மென்பொருள் ஆதரவில் தானே?

    காப்பி குடித்திடக் காலைப் போதினில்
    சாப்பாட்டு மேஜையில் சாய்ந்தபடி அமர
    ஆவி பறக்கும் காப்பியில் தெரிவதோ
    ஆரகிள் மென்பொருள்-யாப்பொருள் ஜாவா!

    இதுபோல் பொதுவில் இணைத்துப் பார்க்கையில்
    மதுராபுரிக் கண்ணனும் மனதில் வந்தால்
    கொஞ்சம் பாரதி என்னுள் தோன்றி
    கிஞ்சித் தேனும் களிப்புறு வேனே!

    ஐகான் என்று ஆங்கிலம் குறிப்பிடும்
    எத்தனை எத்தனை படிமக் குறிகள்
    எதிர்ப்படு கிறதுநம் வாழ்வில் என்று
    விதிர்த்தது உண்டோ ஒருகணம் நின்று?

    உண்மையின் முகமென உருத்திடும் மாய
    ஹீரோ க்ளிஃபிக்ஸ் ஹாஸ்யம் என்னை
    ஊடாடிப் பரிகசித்து ஆள்வது கண்டேன்
    உறவினன் நண்பன் ஆசான் ஆக.

    பார்த்ததும் புரிந்திடும் பாமரன் அறிந்திடும்
    பூர்வப் படிக்குறி எதுவெனப் பார்த்தால்
    கழிப்பறைச் சுவர்களில் பளிச்சென வரைந்து
    விழித்திடும் ஆண்-பெண் படிக்குறி தானே!

    ஒருபடம் வரைவது ஆயிரம் சொல்வது
    என்னும் பழமொழி உண்மை போல
    வரையும் படிக்குறி ஆயிரம் படங்கள்
    வரைவது போலென வரையாது சொல்லலாம்!

    எங்கும் படிக்குறி எதிலும் படிக்குறி!
    சிங்காரச் சின்னங்கள் சாலைக் குறிகளில்
    பெட்ரோல் விற்பனை பேருந்து நிறுத்தம்
    மெட்ரோ ரயிலடி மின்னும் கடைகளில்!
    அலுவல கத்தினில் ஆள்வதும் அவைதான்!
    வலுவினில் நுழைந்து வலைதள ஏட்டினில்
    பலுகமாய் உழன்று பழிப்புக் காட்டுமே! ... ... ... ... [பலுகம்=குரங்கு]

    ஊழ்வினை யெனவே உறுத்தும் படிக்குறி
    வாழ்வினை மாற்றும் கூழைகள் ஆகும்!
    நடத்தல் பேசுதல் எழுதுதல் எல்லாம்
    படிக்குறி விரவிப் பல்கிப் பெருகிட
    தினசரி வாழ்வில் சுழலும் தொழில்நுட்பம்!

    மொழியின் எழுத்துகள் ஒலிகள் மறைந்து
    மொழியின் சொற்பொருள் படிக்குறி யாகிட
    மொழியே கைசெய் சைகைகள் ஆகி
    எகிப்தியர் காலம் எனமீண்டும் வருமோ?

    இறைவனின் படிக்குறியாய் இலங்கும் படிமங்கள்
    இந்துமத வாழ்வினில் இணைந்து இன்றைய
    படிக்குறி போலவே பார்க்குமிடம் அமர்ந்து
    விடிவுறும் அறத்தை வாழ்வில் வலியுறுத்தும்.

    மட்டிலாப் படிக்குறிகள் மனிதன் வாழ்வினில்
    சட்டமும் வடிவமும் இரவினில் ஒளிரும்
    வண்ணமும் பெற்றிட நாமதன் வழிபட்டு
    வளமும் நெறியும் வாழிவில் சேர்த்திட...

    பீடம் ரூபம் படைக்கலம் முத்திரை
    கூடி அருள்செயும் இறைப்படி மங்களை
    வாழ்வில் வளம்நெறி வளர்க்க வழிபடும்
    மக்களைப் பழிப்பதென் மூர்க்கம் அன்றோ?

    --ரமணி, 03/01/2013

    *****

  8. Likes முரளி, ஜானகி liked this post
  9. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    13. துறவியின் தர்மசங்கடம்
    (குறளடி வஞ்சிப்பா)

    பலபலவென விடிந்தபோது
    சலசலக்கும் நதியினிலே
    கலகலத்திட நீராடி
    சளசளவெனக் குருவிகத்தப்
    பளபளத்திடும் நீறணிந்து
    மளமளவென்று ஜபம்செய்யக்
    கரையேறினால்
    தலையில் காக்கை எச்சம் இட்டிட
    நிலைதடு மாறி நின்றார் துறவி!

    நேற்றுவரையில் இத்துறவி
    ஆற்றோரம் இருந்தநிலையின்
    மாற்றத்தினைச் சாற்றினாலே
    பாடல்
    இப்படி யோர்நல்ல முடிவினைப் பெற்றுச்
    செப்படி வித்தையாய் ஜொலிக்கக் காண்பீர்.

    ஆதவத் துறவி!
    (குறளடி வஞ்சிப்பா)

    பலபலவென விடிந்தபோது
    சலசலக்கும் நதியினிலே
    கலகலத்திட நீராடி
    சளசளவெனக் குருவிகத்தப்
    பளபளத்திடும் நீறணிந்து
    மளமளவென்று ஜபம்செய்யக்
    கரையேறினால்
    ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
    மாதவத் துறவி ஆதவ னாவார்!

    ஒரு பாட்டில் இரு முடிவு:
    (குறளடி வஞ்சிப்பா)

    பலபலவென விடிந்தபோது
    சலசலக்கும் நதியினிலே
    கலகலத்திட நீராடி
    சளசளவெனக் குருவிகத்தப்
    பளபளத்திடும் நீறணிந்து
    மளமளவென்று ஜபம்செய்யக்
    கரையேறினால்
    ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
    மாதவத் துறவி ஆதவ னாவார்!
    இன்றோ?
    தலையில் காக்கை எச்சம் இட்டிட
    நிலைதடு மாறி நின்றார் துறவி!

    *****

  10. Likes ஜானகி liked this post
  11. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ரமணியின் குறள் வெண்பாக்கள்
    உலகியல்

    மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
    மருத்துவர் சொன்ன பொழுது. ... 1

    அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
    குழந்தைக்குச் சின்ன பெயர். ... 2

    மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைக்
    காலையில் தாதி வளர்ப்பு. ... 3

    ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
    சாய்ந்தபடி தள்ளுவண்டி யில். ... 4

    உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
    தடையில்லா நம்பெண் மகள். ... 5

    உடையில் மனதில் விழைவது மேற்கு
    கடைதேடும் நம்மாண் மகன். ... 6

    குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
    இன்றைய வர்த்தக வாழ்வு. ... 7

    வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
    கலிசூழ்ந்த தீய உலகு. ... 8

    பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
    கற்றும் உதவாக் கரை. ... 9

    பொருளும் பணமும் புகழும் உவந்து
    அருளும் விலைபேசும் மா. ... 10 ... [மா = உலகு]

    *****

  12. Likes ஜானகி liked this post
  13. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    19. செவ்வேள் சேவடிக்கோர் செய்யுட் காவடி!

    தைப்பூச நன்னாள் திருக்குமரன் நாமங்கள்
    கைக்கூச்ச மின்றிக் கவனித் தெழுதுவோம்
    மெய்யில் அலகிட்டு மேவினை தீர்த்தார்போல்
    செய்யுள் அலகிட்டுச் செய்து. ... 1

    விடியலைக் கொண்டாடி வெண்ணீ றணிந்து
    அடிமேல் அடிவைத்(து) அணிகள் அணிசெய்யக்
    காவடி தூக்கியாடும் கண்ணும் கருத்துடன்
    பாவடிவில் நாவிசைத்துப் பாட்டு. ... 2

    அம்மையப்பன் சேர்ந்துநடம் ஆடிய நன்னாளில்
    இம்மைக்குத் தீர்வாய் இடைநின் றிலங்கிய
    உம்மையே வேண்டிட உம்புகழ் ஓங்கியே
    எம்மையும் காத்தபழம் நீ. ... 3

    சிவநுதற் கண்ணுற்ற தீப்பொறிகள் சேர்ந்து
    சிவஞான பண்டித னாகி - சிவனுக்கே
    மூலப் பொருளுரைத்த சாலச் சிறந்தவனாம்
    வேலவன் அக்கினிக் குஞ்சு. ... 4

    அழியா இளமை அழகு இனிமை
    வழியும் முருகுநீ மூவகை சக்திகளில்
    உள்ளம் தழைத்து உவகை நிறைந்திடக்
    கள்ளம் அறுப்பதுன் வேல். ... 5

    சூர பதுமன் மரமான போதுனது
    வீரசக்தி வேலால் பிளக்க மயிலெனச்
    சேவலெனத் தோன்றியவன் தாக்க அருள்கூர்ந்துன்
    சேவடியால் நீசெய்தாய் காப்பு. ... 6

    உமையீசன் பிள்ளைக்கு எத்தனை நாமம்!
    அமரேசன் அன்பழகன் கார்த்திகேயன் கந்தன்
    குமரேசன் வேலன் சிவபாலன் செவ்வேள்
    உமைபாலன் இன்னும் பல. ... 7

    எத்தனையோ நாமங்கள் வித்தகன் வேலனுக்கு!
    அத்தனையும் வித்தெனச் சித்தம் விழுதிட்டால்
    அத்தனின் பிள்ளையவன் ஆறுமுகன் ஆசிபெற்று
    நித்தமும் வாழலாம் நாம். ... 8

    --ரமணி, 27/01/2013 (தைப்பூச நாள்)

    *****

  14. Likes ஜானகி liked this post
  15. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    16. அனுமன் ஜெயந்தி
    (வெண்பா)

    விஞ்சிடும் ஞானமும் வீரமும் தாங்கிடும்
    அஞ்சனை மைந்தன் அனுமனை எப்போதும்
    தஞ்சம் அடைந்தால் தடைகள் விலகிட
    அஞ்சுவது அஞ்சும் நமக்கு.

    மார்கழி மாதத்தின் மூலவிண் மீன்குழுவில்
    பார்புகழ் ராமதூதன் சீர்மிகத் தோன்றியது
    கௌதமர்பெண் அஞ்சனை கேசரி மன்னனின்
    மௌனத் தவத்தின் விளைவு.

    விந்தைக் குழந்தையாய் விண்மணியை நாடிட
    இந்திரன் ஆயுதமுன் தாடையினைத் தாக்கிவீழ்ந்து
    எத்தனை ஆசிபெற்றாய் வித்தக மைந்தனே
    பித்தன் உருவாய்ப் பிறந்து!

    பிரம்மனின் ஆசி சிரஞ்சீவிப் பட்டம்
    விரும்பும் உருவும் விரைந்திடும் ஆற்றலும்
    ஆதவன் ஆசி அணுவுரு வெற்புரு
    மாதொரு பாகன் அறிவு.

    அரியொன்றும் ஈந்திலையோ ஆசியெனக் கேட்டால்
    அரியேதான் ராமனாக ஆட்கொள்ள வந்தார்!
    பிறதேவர் ஆசிதர ராமன் பலமாய்
    உருவாகி நின்ற கவி!

    ஹனுமன் பெயரிலேயே அர்த்தம் இரண்டு!
    ஹனுவெனில் தாடையாம் மன்னே பெரிதாம்!
    ஹனுவென்றால் கொல்வது மன்னென்றால் மானம்!
    ஹனுமன் பெருமை இரண்டு!

    எத்தனையோ சொல்லலாம் எவ்வளவோ பாடலாம்
    வித்தகன் நித்தியன் வாயுவின் புத்திரன்
    சத்திய மித்திரன் நாளைய நான்முகனாம்
    அத்தனின் ஞான வித்து.

    புத்தி பலமும் புகழும் துணிகரம்
    சத்திய ஞானம் உடல்நலம் சொல்வன்மை
    அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்க்கை
    அனுமனை எண்ண வரும்.

    --ரமணி, 11/01/2013

    [விண்மணி=சூரியன்; அணுவுரு=அணிமா சித்தி; வெற்புரு=மலைபோல் உருவம், மஹிமா சித்தி;
    மானம்=தற்பெருமை; நித்தியன்=என்றும் நிலைத்திருக்கும் கடவுள்; நாளைய நான்முகன்=அனுமனே அடுத்த பிரம்மா என்பர்.]

  16. Likes ஜானகி liked this post
  17. #21
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    வித்தியாசமான மரபுக் கவிகளாக இருக்கின்றன

    ஒவ்வொன்றாக படிக்க வேண்டும்

  18. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மரபில் எளிமை என் குறிக்கோள்களின் ஒன்று.

    படித்துப் பின்னூட்டம் இடுங்கள், குறை நிறைகளைக் குறித்து.


    Quote Originally Posted by ஜான் View Post
    வித்தியாசமான மரபுக் கவிகளாக இருக்கின்றன

    ஒவ்வொன்றாக படிக்க வேண்டும்

  19. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    18. ஆ வெல்லாம் உம் ஆனால்...
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    அறம்வழிப் பட்டால் நிறமது வெளுக்குமா?
    பொருளினைத் கொடுத்தால் அருளது கிடைக்குமா?
    இன்பம் குறைத்தால் துன்பம் விலகுமா?
    வீடுதனை விரும்பினால் காடுகள் மறையுமா?

    பற்றினை விட்டால் இற்றுப் போகுமா?
    பட்டுப் போனால் விட்டுப் போகுமா?
    பக்தி செய்தால் சக்தி வளருமா?
    பலன்களை விட்டால் மலங்கள் அகலுமா?

    மோனம் காத்தால் ஞானம் கூடுமா?
    இரண்டினை நீக்கினால் திரண்டு வருமா?
    இறையென நினைத்தால் திரையது விலகுமா?
    நற்கதி கிட்டிட சற்குரு சொல்வீர்!

    ஆவெனக் கேட்டால் கேள்விகள் தங்கும்.
    ஆலென நினைத்தால் ஐயங்கள் வளரும்.
    ஆவினை நீக்கி உம்மினைச் சேர்த்தால்
    கேள்விகள் மறைந்து நம்பிக்கை பிறக்கும்.

    நம்பிக்கை எல்லாம் செயல்வழிப் பட்டிட
    ஆலென்பது நீங்கி அதுவென்பது பொருந்திட
    உம்மெனும் எதிர்காலம் அதுவென நிகழ
    ஞானம் கூடி விடுதலை கிடைக்கும்.

    சற்குரு சொற்களில் சிஷ்யன் மகிழ்ந்து
    ஆவும் ஆலும் குறையச் செய்து
    அதுவினை மனதில் செயலில் வளர்த்து
    ஞானம் கூடும் வழிவகை அறிந்தான்.

    --ரமணி, 04/09/2012

    *****

  20. Likes கீதம், ஜானகி liked this post
  21. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. விமர்சிக்கத் திறமை இல்லை...ரசிக்கும் மனம் இருப்பதால் அநுபவிக்கமுடிகிறது....மன்றத்தில் தங்களைப் போன்றவர்களுடன் உலாவுவதில் பெருமிதமடைகிறேன்.

    'ஆ' என வியந்து வாய் திறக்க,

    'ஆகா' என மகிழ்ந்து கை தட்ட,

    'பா' இதுபோல் பலநூறு யாத்துத்

    'தா' என உவப்புடன் யாசிக்கும் மனது....

    [ இலக்கண, மரபு இல்லா பின்னூட்டத்திற்குப் பொறுத்துக்கொள்ளவும் ! ]
    Last edited by ஜானகி; 04-02-2013 at 01:24 AM.

  22. Likes ரமணி liked this post
Page 2 of 23 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •