அறிமுகம்: ரமணி
என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள அதிகம் இல்லை. அறுபது வயதைக் கடந்த ஓர் எளிய, ஓய்வுபெற்ற வங்கி ஊழியன். கணினித்துறை, தமிழ், ஸம்ஸ்க்ருத, ஆங்கில மொழிகளில் உள்ள படைப்புகளில் எனக்குப் பிடித்த கதை, கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் உண்டு. வழக்கமான உலகியல் பொழுதுபோக்குகளுடன் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு. கல்லூரி நாட்களில் தமிழ் ஒரு பாடமாகப் பயின்ற போது யாப்பிலக்கணத்தில் ஈடுபாடு ஏற்பட்டுக் கவிதை முனைய, சரிவராமல் ஒதுங்கிவிட, இப்போது பிடித்துக் கொள்கிறது, கவிதையும் யாப்பும்! மரபுக் கவிதையின் ஒழுங்கும், சவாலும் எனக்குப் பிடித்தவை. புதுக் கவிதைகளில் அதிகம் நாட்டமில்லை. தமிழ் மன்றம் வட்டத்தில் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படித்தும், பகிர்ந்தும் தமிழ்ப் படைப்புகளில் முன்னேற இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றுகிறது. அனைவருக்கும் வணக்கம்.
அன்புடன்,
ரமணி
Bookmarks