தமிழும் தமிழரும் தமிழர் நாடும் பிடிக்கும் - என்ற தலைப்பில் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு தமிழ் நிலம் மற்றும் தமிழர் வரலாறு, ஆகியவற்றை உங்களோடு புதுக்கவிதை வடிவில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழர் பெருவிழாவாம் பொங்கல் பெருவிழாவிற்கு எனது இந்த புதிய தொடர் கவிதை படைப்பை சமர்ப்பிகின்றேன்.
தமிழ் நுழை வாயில்
நாகரிகம் நாடி மனிதம் தேடி
மானிடர் மலைகளிலும் குகைகளிலும்
குடிபெயர்ந்து வாழ்ந்த போதும் காடுகளில்
கனிந்த கனிவகைகளை சேகரித்தும்
விலங்குகளை வேட்டையாடி உண்டு உளம்களிந்தபோதும்
நாவில் தமிழ் சொல்லெடுத்து உறவாடிய
முதல் மனிதன் மூத்த மனிதன் அந்த முதல் தமிழனை பிடிக்கும்
கடல் கொண்ட குமரிகண்டம்
மானிடர் தோன்றிய முதல் கண்டம் - அங்குதான்
தமிழன் முதல் நாகரிகம் கண்டான்
நாடுகள் எழுவத்திரெண்டுக் கொண்டு
வேற்றுமை இல்லா உலகம் கண்டு
ஒற்றுமை என்பதே நமது எழுச்சியென்று
அதை பண்பாடாய் பாரெங்கும் சாற்றிய
உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடி பிடிக்கும்.
ஆழிபேரலையில் குமரி கண்டமே காணமல் போக
மாண்டவர் ஏராளம் மீண்டவரோ கொஞ்சம் - அவர்
புலம் பெயர்ந்த தமிழராய் பூகோலமெங்கும் திரிந்து
பல இனங்களாய் பிரிந்து கலா ஓட்டத்தில்
தமிழின் உச்சரிப்பு மறந்து சூழ்நிலைக்கு உகந்து
புதிய ஒலிவடிவில் எண்ணற்ற மொழிகள் கண்டான்
வாழ்வில் பல ஏற்றங்களை கண்டான் - இன்றும்
குமரி கண்டத்தின் எச்சமாய் மிஞ்சிய தமிழகம் மட்டுமே
முதல் மனிதனின் வழித்தோன்றலாய் தமிழ் கொடிபிடித்து
தரணியெங்கும் முதல் சொல் தமிழ் சொல் காத்திட
துடிக்கும் தன்மானத் தமிழர் யாவரையும் பிடிக்கும்
தென்கோடியில் இந்திய பெருங்கடல்
மேற்கு கரையில் அரபிக்கடல்
கிழக்கே முகம் பார்க்க வங்ககடல்
வடக்கே திருத்தணி என திசை காண்பிக்க
தமிழர் நிலம் தமிழகம், ஈழம் - என
இருதாயகங்களை கொண்டு இந்தியா, இலங்கை - என
இரு நாடுகளில் பிரிந்து இருந்தாலும் - நாம் தமிழரன்றோ
உணர்வால் இணைவது இதயம் மகிழ பிடிக்கும்.
Bookmarks