இலையுதிரும் உலர் நாளொன்றில்
அறுந்த உன் பொன்பாதுகையை
எழில் சரிந்த பூஞ்செடிகளினூடே வைத்தேன்
மதுரமிகு உன் குறுநகையின் சாயலொடு
அதில் பூத்தது
குறிஞ்சி பூ

*****************************************


உன் அடிமண்துகளை அள்ளி தூவினேன்
என் நந்தவனம் முழுக்க
உன் மயிலிறகு பாதத்தின் குளுர்ச்சியின் சீந்தலில்
நிறமூறி மிளிர்கின்றன
வாடிய ரோஜாக்கள்

மீந்த அடிமண்துகளை உதறினேன்
கருஞ்சாம்பல் குளத்தில்
முட்டைகளாய் பரிணமித்து பிறப்பித்தன
வண்ண வண்ண மீன்களை

உன் மருதாணி பாதங்களின்
மயிலிறகு தொடுகையை உணர்ந்த கணத்தில்
பூக்க துவங்கிவிட்டன தாமரைகள்
என் கருஞ்சாம்பல் குளத்தில்

***************************************

பாதுகை கடையொன்றில்
நான் சுட்டிய பாதுகை
உன்னிடம் இருப்பதாய் கூறி சினம் கொப்பளிக்கிறாய்
உன் முக பூமி கடந்து காண இயலாதா
என் பார்வையின் குறைப்பாட்டை
அடி
உனக்கு எப்படி புரியவைப்பேன்