வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல
எனதான அத்தனையிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்...
உன் ஸ்பரிசம் தீண்டும் பொழுது
சிறகுகள் அமிழ்த்தி அமரும்
பருந்தைப் போல
ஒரு கனத்த மௌனம்
மனதை அழுத்துகிறது...
நமது ஒவ்வொரு சந்திப்பின்
முடிவும்
எதிர்கொள்ளமுடியாத ஒரு
உண்மையாய்... ஊமையாய்...
நான் திரும்பும் வழி நெடுகிலும்
தொடர்கிறது
எனை உறுத்தவாரே...
குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
புன்னகையும் அழுகையும் போல
உன் மீதான காதலும் கசப்பும்
விளிம்பு நீரென என் கண்களில்
சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...
Bookmarks