சிதம்பரம் என்றால் என்ன?
சித்+அம்பரம்=சிதம்பரம்.
சித்-அறிவு.
அம்பரம்-வெட்டவெளி.
நடராஜர் சந்நிதியின் வலதுபுறம் ஒரு சிறு வாயில் உள்ளது.
இதனுள் தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது.
வாசலில் திரை தொங்கும்.
பூஜையின் போது திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும்.
அங்கே என்ன இருக்கிறது? என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும்.
இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது.
முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை இது குறிக்கிறது.
பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத்தலம்.
source;dhinamalar
Bookmarks