கற்பனைகளோடு
வாழ்பவனுக்கெல்லாம்
கற்பனை ஒரு காலுன்றி - மனம்
தடுமாறும்போதெல்லாம் தாங்கிக்கொள்ளும்!
கற்பனைகளோடு
வாழ்பவனுக்கெல்லாம்
கற்பனை ஒரு கடுமருந்து - மனம்
காயப்படும்போதெல்லாம் வலிமாற்றும்!
கற்பனைகளோடு
வாழ்பவனுக்கெல்லாம்
கற்பனை ஒரு காயகல்பம் - மனம்
மரணிக்கும்போதெல்லாம் உயிர்கொடுக்கும்!
Bookmarks