உண்மை அமைதியாய்
தன்னை ஒளித்துக்கொண்டு....
பொய்யோ எங்கும்
தலைவிரித்தாடிக்கொண்டு....
அடக்கம் அமைதியாய்
புன்னகை புரிந்துக்கொண்டு...
ஆர்ப்பாட்டம் எங்கும்
நாடகங்கள் அரங்கேறிக்கொண்டு.....
அன்பு அமைதியாய்
தன்னை போர்த்திக்கொண்டு....
ஆங்காரம் எங்கும்
வெறியாய் அலைந்துக்கொண்டு....
சிந்திய வார்த்தைகளை
பொறுமையாய் எடுத்துக்கொண்டு
மௌனத்தை பதிலாய்
தருவதும் உண்டு......
Bookmarks