புதிரோ புதிர்
1
ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
கேள்வி:-
எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?
2
நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள்.
அப்போது ஓட்டத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவனை நீங்கள் முந்திச் சென்றுவிட்டீர்கள்.
கேள்வி:-
இப்போது நீங்கள் எத்தனையாவது இடத்தில் ஓடுகிறீர்கள்?
3
ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
அது என்ன????
Bookmarks