எது பரம்ஸ்...5000 ரூபாய் மேட்டரா..???
உமக்கு ரொம்ப குசும்புப்பா...
எது பரம்ஸ்...5000 ரூபாய் மேட்டரா..???
உமக்கு ரொம்ப குசும்புப்பா...
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:14 PM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
என்ன சேரன், அடுத்த நீதிபதி பதவிக்கு நீங்கள் தயாரா? மக்கள் எல்லோரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். :roll: :wink: :lol:வழக்கு தொடர்ந்தது சரிதான்...
வழக்கு உடனே எடுத்துக்கொள்ளப்பட்டாலுமேகூட, வாய்தா, வாய்தாவைத் தொடர்ந்து இன்னொரு வாய்தா என்று தட்டிக்கழிக்கலாம் மாணவன் அல்லது பாடம் சொன்ன அந்த ஆசிரியர்...அவனுக்கு வேறு வழக்கு கிடைத்து பணம் கிடைத்தபின் இனி ஏமாற்ற முடியாதே...ஏனென்றால் பதிவான குற்றச்சாட்டுபடி அவன் பணம் தந்தாகவேண்டும்...ஆக வழக்கை பதிவு செய்ய நினைத்த ஆசிரியரின் முடிவு சரியானதே...
(யப்பா...என்னைத்தான் அடுத்த தலைமை நீதிபதியா உட்கார வைக்கப் போறாங்க :wink: )
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:14 PM.
பரஞ்சோதி
அன்பு நண்பர்களே. இந்தப் புதிருக்கு விடை சொல்வது இயலாத காரியம்.
இதை PARODAX என்று கூறுவார்கள். இப்படிச் சொன்னால் அப்படியும், அப்படிச் சொன்னால் இப்படியும் வாதம் செய்யலாம்.
சரி அடுத்த புதிருக்குப் போவோமா?
உடல் நலமில்லாத சோமு, மருத்துவமனை சென்று, உடல் நலனைச் சோதித்து, நோய்க்குரிய மருந்துகளை இரண்டு குப்பிகளில் வாங்கி வந்தான்.மருந்துகள் மிக்க விலை உள்ளவை.இரண்டு வகையான மாத்திரைகள். ஒவ்வொரு மாத்திரையும் சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ளவை. அதனால் மாத்திரைகளை வீனடிக்காமல் சாப்பிடவேண்டும்.இரண்டு மாத்திரைகளும் வெளித் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவே இருக்கும்.. ஒரு மாத்திரையை A என்றும், அடுத்த மாத்திரையை B வைத்துக்கொள்வோம்.
ஒவ்வொன்றிலும் ஒரு வேளைக்கு ஒரு மாத்திரை மட்டுமே சாப்பிடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கூடுதலாகவோ குறைச்சலாகவோ சாப்பிட்டுவிடக் கூடாது. அது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர் எச்சரித்திருந்தார்.
சோமு, தேர்தல் முடிவுகளை ஆர்வமுடன் தொலைக்காட்சியில் பார்த்தபடியே, A மாத்திரைக் குப்பியை எடுத்தான். அதில் இருந்து ஒரு மாத்திரையை உள்ளங்கையில் கவிழ்த்தான்.. அந்த குப்பியை வைத்தபிறகு, B மாத்திரைக் குப்பியை எடுத்துக் கவிழ்க்கும்போது, தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தபடி கவிழ்த்ததினால், ஒரு மாத்திரை அதிகமாக விழுந்துவிட்டது. விழுந்த மாத்திரை, ஏற்கனவே இருந்த மாத்திரையுடன் கலந்துவிட்டது...............அடடா....என்றபடி விழுந்த மாத்திரையை எடுக்க முயற்சித்தான்.
{இரண்டு வகை மாத்திரைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரிதான் இருக்கும், மாத்திரையின்மேல், அதன் பெயரும் குறிப்பிடவில்லை என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்}
. இப்போது சோமுவுக்கு எது A, எது B என்று குழப்பம் ஏற்பட்டது.தெளிவாகத் தெரியாமல் ஏதாவது ஒரு மாத்திரை எடுத்துவிட்டு, மீதி இரண்டு மாத்திரைகளைச் சாப்பிடுவது , ஆபத்தானது. இரண்டும் ஒரே மாத்திரையாக இருந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். மாத்திரைகள் வேண்டாம் என்று தூக்கி எறியவும் இயலாது. ஏனென்றால் அவை மிகுந்த விலை மதிப்புள்ள மாத்திரைகள்.
சோமு பெரும் குழப்பமுடன், என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டான்.
மன்ற நண்பர்களே , மாத்திரைகளை எப்படி உபயோகிக்கலாம் என்று அவனுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்.
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:14 PM.
நண்பர் பிஜிகே மாத்திரைகளை எடைப் போட்டு பார்க்க அனுமதி கொடுத்தால் இந்த முறைப்படி மாத்திரையை கண்டுபிடிக்கலாம்.
முதலில் A குப்பியில் இருக்கும் ஒரு மாத்திரையும் B இருக்கும் ஒரு மாத்திரையும் எடை போட வேண்டும். என்னுடைய அதிஷ்டம் இரண்டிற்கும் எடை வித்தியாசம் இருக்கிறது. ஆகா விடை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில், கையில் இருக்கும் மூன்று மாத்திரையில் இரண்டு மாத்திரைகளை தராசில் வைத்து எடை போட வேண்டும். இரண்டு எடையும் சரியாக இருந்தால் அந்த இரண்டும் ஒரு மாதிரி மாத்திரை (B), மீதி இருப்பது A குப்பி மாத்திரை. எடை சமமாக இல்லை என்றால் ஒரு மாத்திரையை எடுத்து விட்டு அடுத்ததை வைத்து எடை போட்டு கண்டுபிடிக்க வேண்டும்.
பிஜிகே இந்த புதிரை இவ்வளவு எளிதாக கொடுப்பாரா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:15 PM.
பரஞ்சோதி
இல்லை பரஞ்சோதி அவர்களே.
எடைபோட்டுக் கண்டுபிடிக்க இயலாது.
இரண்டும் ஒரே அளவு எடைதான்.
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:15 PM.
இரண்டு மாத்திரையின் வித்தியாசத்தை உணர இரண்டாக பிளந்து பார்க்கலாம்.. இல்லை தண்ணீரில் போட்டும் பார்க்கலாம்..
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:15 PM.
தண்ணீரில் போட்டால்... கரைந்து.. கலர் வித்தியாசம் தெரியுமா.. மன்மதா...
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:16 PM.
அது கெமிக்கல் ப்ராடக்ட் என்பதால் அப்படி சொன்னேன்.
Last edited by சுகந்தப்ரீதன்; 17-05-2008 at 03:16 PM.
அப்படி போடுல அறிவாலஇரண்டு மாத்திரையின் வித்தியாசத்தை உணர இரண்டாக பிளந்து பார்க்கலாம்.. இல்லை தண்ணீரில் போட்டும் பார்க்கலாம்..
அறிவால - சிலேடை :wink:
மன்மதரே! மொத்தமா கலக்கி தினமும் இரண்டு ஸ்பூன் குடிக்கலாம் இல்லையா. நம்ம சேரன் மாதிரி :wink: :lol:
Last edited by சுகந்தப்ரீதன்; 18-05-2008 at 02:09 AM.
பரஞ்சோதி
தினமும் கலக்கி குடிக்கிறாரா அவர்..
Last edited by சுகந்தப்ரீதன்; 18-05-2008 at 02:09 AM.
பாவம் சேரன்! ஒவ்வொரு புதிரேலேயும் அவரை வாராவிட்டால் உமக்கு தூக்கம் வராதா ஓய்!
அந்த மாத்திரையை இவர்களுக்கு கொடுங்கப்பா!
ஒரு வேளைக்கு மாத்திரை சாப்பிட மறந்து விட்டால் அடுத்த வேளைக்கு சேர்த்து சாப்பிடுவது எனது வழக்கம்!
இன்னொரு A மாத்திரையையும் சேர்த்து சாப்பிடவேண்டியது தானே!
Last edited by சுகந்தப்ரீதன்; 18-05-2008 at 02:09 AM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
அட.. அதற்குத்தான் பிஜிகே சொல்லிவிட்டாரே...
Code:ஒவ்வொன்றிலும் ஒரு வேளைக்கு ஒரு மாத்திரை மட்டுமே சாப்பிடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கூடுதலாகவோ குறைச்சலாகவோ சாப்பிட்டுவிடக் கூடாது. அது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர் எச்சரித்திருந்தார்.
Last edited by சுகந்தப்ரீதன்; 18-05-2008 at 02:10 AM.
There are currently 3 users browsing this thread. (0 members and 3 guests)
Bookmarks