மிகவும் சுவாரஸ்யம்...
தலையில் ஆதிக்கம் தலைதூக்கிவிடாமல் இருக்க பாரதியும் இக்பால் அண்ணனும் போட்டி..
நடத்துங்கள்.. பாராட்டுக்களை வாங்கிக்கொண்டே...
மிகவும் சுவாரஸ்யம்...
தலையில் ஆதிக்கம் தலைதூக்கிவிடாமல் இருக்க பாரதியும் இக்பால் அண்ணனும் போட்டி..
நடத்துங்கள்.. பாராட்டுக்களை வாங்கிக்கொண்டே...
Last edited by விகடன்; 27-04-2008 at 04:35 AM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
போட்டுப் பின்றாங்களே நம்ம மக்கள்... அருமை..
Last edited by விகடன்; 27-04-2008 at 04:35 AM.
லைட் சுவிட்ச் புதிரை நானே அவிழ்க்கிறேன்.
முதல் சுவிட்சைப் போடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து, அந்த சுவிட்சை அனைத்துவிட்டு, அடுத்த சுவிட்சைப் போடுங்கள்.
மேலே போகவும். இப்போது, ஒரு பல்ப் எரிந்துகொண்டிருக்கும். அது இரண்டாவது சுவிட்சுக்குரிய பல்ப்.
மற்ற இரு பல்புகளில் எந்த பல்ப் சூடாக இருக்கிறது என்று தொட்டுப் பாருங்கள். சூடாக இருப்பது, முதலில் போட்ட சுவிட்சின் பல்ப்.
சூடு இல்லாமல் இருப்பது, மூன்றாவது சுவிட்சுக்குரியது.
Last edited by விகடன்; 27-04-2008 at 04:36 AM.
நண்பரே......நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்ததற்காக, ஆளில்லாத ஒரு தீவில் உங்களை விட்டுவிடும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது, என்று வைத்துக்கொள்வோம். உங்களை ஒரு ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டுபோய் ஒரு தீவில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.
அந்தத் தீவு ஒரு விசித்திரமான தீவு. பொதுவாக எல்லா இடங்களிலும் இருக்கும் கடற்கரை போல் இல்லாமல், கடல் மட்டத்தில் இருந்து 'சரேல்' என்று தீவில் எல்லா பக்கங்களிலும் உயர்வாக உள்ளது. கடலில் இறங்கினால் ஆரம்ப ஆழமே 20 அடிக்கும் மேலே இருக்கும். அதனால் நீச்சல் தெரியாமல் கடலில் இறங்க முடியாது
உங்களுக்கு நீச்சல் தெரியாது.
அங்கே படகு கிடையாது.சரி மரங்களை அறுத்து படகு செய்யலாம் என்றால்,
உங்களிடம் எந்த கருவியும் கிடையாது.உங்களைக் காப்பாற்றி அழைக்கும்படி எவரையும் கூப்பிட தொலைபேசி வசதி இல்லை.
அடுத்தாற்போல் பக்கத்தில் உள்ள தீவோ, குறைந்தது 500 மைல்களுக்கு அப்பால் உள்ளது. அதனால் தீயைப் பார்த்துவிட்டுப் புறப்பட்டு வந்து உங்களைக் காப்பாற்றவும் வாய்ப்பு இல்லை.
மேலும் அந்தத் தீவு, அடர்ந்த மரங்கள் கொண்டதாக இருந்தது.வடக்கு தெற்காக அமைந்தது. தீவின் அகலம் 100 அடிதான். ஆனால் நீளமோ பத்து மைல்கள். நீங்கள் அந்தத் தீவின் மத்தியப் பகுதியில் இருக்கிறீர்கள்.திடீரென்று தீவின் வடக்கு எல்லையில் தீபிடித்துவிட்டது. காட்டுத்தீயல்லவா?கனஜோராக எரிய ஆரம்பித்தது. காற்றும் வடக்கில் இருந்து தெற்காக, மணிக்கு ஒரு மைல் வேகத்தில் வீச ஆரம்பித்ததினால், தீயும் அதே வேகத்தில் காட்டை கபளீகரம் செய்துகொண்டு பரவி வருகிறது.அகலம் குறைவாக இருப்பதினால் 100 அடியையும் கொஞ்சம்கூட விட்டு வைக்காமல் எரித்துக்கொண்டு வருகிறது. இன்னும் பத்து மணி நேரத்தில் மொத்தத் தீவுமே எரிந்து பஸ்பமாகிவிடும்.
நீங்கள் தீவின் மத்தியப் பகுதியில் இருக்கிறீர்கள் என்று முன்னரே சொல்லியிருக்கிறேன்.தப்பிக்க வழி தேடாவிட்டால், நீங்களும் எரிந்து பஸ்பமாகிவிடுவீர்கள்.எப்படித் தப்புவது? என்று யோசியுங்கள்?
Last edited by விகடன்; 27-04-2008 at 04:36 AM.
அடாடா....பிரமாதம் பிஜிகே. நான் சும்மா மூளையை ...!!!! போட்டு கசக்கிக்கொண்டிருந்தேன். பதிலா கொஞ்சம் சூடு பண்ணியிருந்தால்.......லைட் சுவிட்ச் புதிரை நானே அவிழ்க்கிறேன்.
முதல் சுவிட்சைப் போடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து, அந்த சுவிட்சை அனைத்துவிட்டு, அடுத்த சுவிட்சைப் போடுங்கள்.
மேலே போகவும். இப்போது, ஒரு பல்ப் எரிந்துகொண்டிருக்கும். அது இரண்டாவது சுவிட்சுக்குரிய பல்ப்.
மற்ற இரு பல்புகளில் எந்த பல்ப் சூடாக இருக்கிறது என்று தொட்டுப் பாருங்கள். சூடாக இருப்பது, முதலில் போட்ட சுவிட்சின் பல்ப்.
சூடு இல்லாமல் இருப்பது, மூன்றாவது சுவிட்சுக்குரியது.
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 04:36 AM.
பிஜிகே நண்பர் அவர்களே... ஆபத்து எனில் 110 மாடியிலிருந்து கடினமான
பொருள்களுக்கிடையில் குதிக்கும்பொழுது 20 அடி உயரத்திலிருந்து அதுவும்
தண்ணீரில் குதிப்பதைத் தவிர வேறு வழி எனக்கு தோன்ற மாட்டேன்
என்கிறது. மற்றவர்கள் வழிகள் சொல்லட்டும்.- அன்புடன் இக்பால்.
Last edited by விகடன்; 27-04-2008 at 04:37 AM.
நெருப்பு எரியும் இடத்துக்கு போய் ஒரு
எரியும் கொள்ளியை துக்கிக்கொண்டு
தெற்குபக்கமாக ஓட வேண்டும், கரைக்கு
1 ஓ 2 மைல் முன்னமே காட்டுக்கு
தீ முட்டினால் வடக்கே இருந்து வரும் தீ
அவ் இடத்தை அடையும் முன்னே மிகுதி பகுதி
எரிந்து முடிந்திருக்கும், தீ எரிந்து அணைந்த
இடம் தீயில் இருந்து பாதுகாக்கும்.
:roll: :wink: :roll:
Last edited by விகடன்; 27-04-2008 at 04:37 AM.
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
அருமையான பதில் மது அவர்களே.
வாழ்த்துக்கள்....நன்றி....சரி அப்படியே
அடுத்த புதிரையும் அவிழ்த்துவிடுங்கள்.
Last edited by விகடன்; 27-04-2008 at 04:37 AM.
கதையிலே ஒரு புதிர்- 20
தண்னீர் காட்டும் புதிர்
மதுரையில் நாயக்கர் புதுத் தெருவில் இருக்கும் சக்தி-சிவன் திரை அரங்கில், ஒரு திரைப்படம் பார்த்து வரலாம் என்று எனது மனைவியுடன் சென்றிருந்தேன். சிறிது தாமதமாகச் சென்றதால் திரையரங்கின் நுழைவாயிலில் "HOUSE FULL" என்ற அறிவிப்பு தொங்கியது.ஏமாற்றம் அடைந்தவர்களாய் திரும்ப நினைக்கும்போது, " அடடே PGK வாங்க வாங்க.....என்ன இடம் கிடைக்கவில்லையா" என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அதே தெருவில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர்.அவருடன் பேசியபடி அவரது இல்லம் சென்றேன்.நான் மட்டும் வரவேறு அறையில் அமர்ந்து நண்பருடன் கதைகள் பேச, என் மனைவி உள்ளே சென்று அவரது குடும்பத்தினருடன் பேச ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் சென்றது.நண்பரின் மகன் உள்ளேயிருந்து வந்தான். "அன்கிள்...ஆண்ட்டி ஒரு பெரிய புதிரை திறமையுடன் விடுவித்து விட்டார்கள்." என்றபடியே நண்பரின் பக்கத்தில் அமர்ந்தான். "அது சரி எங்கே போனாலும் இந்த புதிர் விஷயம் நம்மைத் துரத்துகிறதே" என்றபடி அப்படி என்னப்பா புதிர் என்றேன்.அவன் கூற ஆரம்பித்தான்.
"இரண்டு பிளாஸ்டிக் ஜக் நிறைய தண்ணீர் உள்ளது.பக்கத்தில் ஒரு பெரிய டிரம் இருக்கிறது.
நீங்கள் அந்த ஜக்கில் உள்ள தண்ணீரை டிரம்மில் ஊற்றவேண்டும்.
இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.
அந்த ஜக்கை அப்படியே எடுத்து டிரம்மில் ஊற்றக்கூடாது.
வேறு சிறிய பாத்திரங்களை உபயோகித்தும் தண்ணீரை டிரம்மில் ஊற்றக்கூடாது.ட்யூப் போட்டும் தண்ணீரை மாற்றக்கூடாது
ஆனால் ஜக்கில் உள்ள தண்ணீர் டிரம்முக்குள் இருக்கும்படி செய்யவேண்டும்.
அத்துடன் டிரம்முக்குள் உள்ள தண்ணீரில், எந்த ஜக்கில் இருந்து வந்த தண்ணீர் எது என்பதையும் தனித்தனியாக அடையாளம் காட்டவேண்டும்.உங்களால் முடியுமா அன்கிள்" என்று கேள்வியைத் தொடுத்தான்.என் மனைவியும் முகத்தில் புதிரை விடுவித்த பெருமை பொங்க என் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.அவனுக்கு நான் விடை அப்புறமாகச் சொல்லிக்கொள்கிறேன்.
முதலில் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
Last edited by விகடன்; 27-04-2008 at 04:38 AM.
:roll:
(தலை கிறுகிறுன்னு சுத்துற மாதிரி ஒரு 'Emoticon' இல்லாதது எவ்வளவு பெரிய் குறைன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சது. ஏன்னா என்னோட நெலமைய வெளங்க வைக்க முடியலயே..!)
Last edited by விகடன்; 27-04-2008 at 04:38 AM.
அட....எங்கேப்பா ஜாம் பசார் ஜக்...கு........இந்த சைதாப்பேட்டை கொக்குவோட கேள்விக்கு பதில் சொல்லப்பா...............என்ன நான் சொல்லனுமா.........இதெல்லாம் ஓடு மீன்கள்...நான் கொக்காக்கும்....உறு மீன் வந்தால்தான்.....ஹி.....ஹி....ஹி....
அன்புடன்
மணியா
எங்கேப்பா இந்த மது....சிம்ப்பிளா கேட்டுக்கொண்டிருந்த பிஜிகேயை உசுப்பிவிட்டு.......எப்பிடி கேக்கிறார் பாருங்க இப்போ...........???!!!
Last edited by விகடன்; 27-04-2008 at 04:38 AM.
பாராட்டுக்கள் மதன்............முன் அனுபவமோ....... :wink: :wink:நெருப்பு எரியும் இடத்துக்கு போய் ஒரு
எரியும் கொள்ளியை துக்கிக்கொண்டு
தெற்குபக்கமாக ஓட வேண்டும், கரைக்கு
1 ஓ 2 மைல் முன்னமே காட்டுக்கு
தீ முட்டினால் வடக்கே இருந்து வரும் தீ
அவ் இடத்தை அடையும் முன்னே மிகுதி பகுதி
எரிந்து முடிந்திருக்கும், தீ எரிந்து அணைந்த
இடம் தீயில் இருந்து பாதுகாக்கும்.
:roll: :wink: :roll:
அன்புடன்
மணியா
Last edited by விகடன்; 27-04-2008 at 04:39 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks