Page 388 of 391 FirstFirst ... 288 338 378 384 385 386 387 388 389 390 391 LastLast
Results 4,645 to 4,656 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #4645
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    அன்பு நண்பர்களே, அடுத்த புதிர் கொஞ்சம் தலையை சுழல வைக்கும் விதமாக அமைந்துள்ள புதிர்......வருங்கள் . அது என்னவென்று பார்ப்போம்.
    Last edited by pgk53; 04-02-2015 at 12:29 AM.

  2. #4646
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண்-564
    இளவரசர் விக்கிரமாதித்தன் மூன்று தலைகளும், மூன்று வால்களும் கொண்ட அசுரனுடன் சண்டை போடச் சென்றார்.
    இளவரசரிடம் ஒரு மந்திர வாள் இருந்தது.
    அந்த வாள் ஒரு வீச்சிலே ஒரு தலை அல்லது இரண்டு தலைகள் அல்லது ஒரு வால் அல்லது இரண்டு வால்களை வெட்டக் கூடியது.

    அந்த அசுரனின் ஒரு தலையைத் துண்டித்தால் அந்த இடத்தில் இன்னொரு தலை வளரும்.
    ஒரு வாலை துண்டித்தால் அந்த இடத்தில் இரண்டு வால் வந்து விடும்.
    இரண்டு வாலை துண்டித்தால் ஒரு தலை வந்து விடும்.
    இரண்டு தலையைத் துண்டித்தால் ஒன்றும் வளராது.
    அசுரனின் மூன்று தலைகளையும், மூன்று வால்களையும் துண்டித்துக் கொல்ல எத்தனை வீச்சுக்கள் தேவைப்படும்?

  3. #4647
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒன்பது வீச்சுகள்.

  4. #4648
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    ஒன்பது வீச்சுகள்.
    கொஞ்சம் விள்க்கமாகச் சொல்ல இயலுமா நண்பர் ஆரென்.

  5. #4649
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    ஒன்பது என்பது சரியான விடை.

    வெட்ட வேண்டிய முறை.

    1.1 வால் = மீதம் 4 வால்கள் + 3 தலைகள்.
    2. 1 வால் = மீதம் 5 வால்கள் + 3 தலைகள்.
    3. 1 வால்= மீதம் 6 வால்கள் + 3 தலைகள்.
    4. 2 வால்கள் = மீதம் 4 வால்கள் +4 தலைகள்
    5. 2 வால்கள் = மீதம் 2 வால்கள் + 5 தலைகள்
    6. 2 வால்கள் = மீதம் 0 வால்கள் + 6 தலைகள்.
    7. 2 தலைகள் = மீதம் 0 வால்கள் + 4 தலைகள்.
    8. 2 தலைகள் = மீதம் 0 வால்கள் + 2 தலைகள்.
    9. 2 தலைகள் = மீதம் 0 வால்கள் + 0 தலைகள்.

  6. #4650
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    நண்பர் டெல்லாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மிகவும் அருமையான விளக்கம்.
    நாளை அடுத்த புதிரைப் பார்ப்போம்

  7. #4651
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண்-565

    நரேன் பிள்ளையாருக்கு 5 தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக்கொண்டான்.
    அப்படி உடைக்க வேண்டுமென்றால் அவன் 10 வாயிற் கதவுகளைத் தாண்டி செல்ல வேண்டும்.

    ஒரு பைக்கு ஒரு தேங்காய் விதம் ஒவ்வொரு கதவை கடக்கும் போதும் வரி செலுத்த வேண்டும்.
    அதிகபட்சம், ஒரு பையில்10 தேங்காய்கள் தான் வைக்கலாம்.
    அவன் குறைந்தது எத்தனை தேங்காய்களை ஆரம்பித்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்றிருப்பான் ?

  8. #4652
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    20,இரண்டு பைகளில்
    முதல் 5*2=10 ...ஒரு பை காலியாகும்

  9. #4653
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நரேன் இரண்டு பைகளில் பத்து தேங்காய்கள் எடுத்து வந்தான்.
    ஐந்தாவது வாயிற் கதவுகள் வரை பைக்கு ஒன்றாக வரி கொடுத்து சென்றான்.
    அவனிடம் மீதம் இருப்பது பத்து தேங்காய்கள் (இரண்டு பைகளிலும் ஐந்து தேங்காய்கள்).
    இதை இப்படியே எடுத்து சென்றால் புள்ளையாருக்கு பூஜ்யம் தான் என்று நினைத்து,
    எல்லா தேங்காய்களையும் ஒரே பையில் போட்டு அந்த காலி பையையும் இதனுள் போட்டு நடக்க ஆரம்பித்தான்.
    மேலும் ஐந்து தேங்காய்களை வாயிலுக்கு ஒன்றாக காவு கொடுத்து ஐந்து தேங்காய்களை எடுத்துச் சென்றான்.

    நரேன் பிள்ளையாருக்கு 5 தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக்கொண்டதை முடிவில் சுபமாய் நிறைவேற்றினான்
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  10. #4654
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    நண்பர்கள் ஜான் மற்றும் சர்சரன் இருவருமே சரியான விடையை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
    வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்

  11. #4655
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண்-566

    வீர்சிங் ஒருநாள் தனது நன்பரான ஒரு சர்தாரைப் பார்த்துப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்

    இறுதியில் சர்தார்களைப் பற்றி அடுத்தவர்கள் கேலியும் கிண்டலும் செய்யும் விஷயத்தில் வந்து நின்றது.

    சர்தார்களை கேலிப் பொருளாக அடுத்தவர்கள் நினைப்பது வீர்சிங்கிற்குப் பிடிக்கவில்லை.. சர்தார்கள் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான்.

    வீர்சிங்கிற்கு ஒரு அருமையான வழியை ஆலோசித்து அதை நண்பரிடம் கூறினான். ஆஹா அப்படியே செய்யலாம் என்று நண்பரும் ஒத்துக்கொண்டார்.

    மறுநாள் பக்கத்தில் இருந்த கடற்கரைக்கு மாலை நேரத்தில் இருவரும் சென்றார்கள். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டம் சேர ஆரம்பித்திருந்த்து.
    வீர்சிங்கும் அவனது நண்பரும் கடற்கரையோரமாக நின்று கொண்டார்கள்.

    வீர்சிங் கடலை நோக்கிக் கையைக் காட்டினான்.
    அவனது நண்பர், ஆமாம் ஆமாம் வீர்சிங்---ஆஹா என்ன அற்புதமான காட்சி---- என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே அவரும் கடலையே நோக்கியபடி நின்றிருந்தார்.

    இவர்களைக் கண்ட மற்றவர்கள் கடலில் என்ன தெரிகிறது என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.ஆனால் வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை.மேலும் மேலும் ஆஹா என்ன அற்புதமான காட்சி என்று சொல்லியபடியே இருந்தார்கள்.
    அவர்கள் பின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூட ஆரம்பித்ததை மக்களின் சலசலப்பில் இருந்தும், பேச்சுக் குரல்களில் இருந்தும் ஊகித்துக்கொண்ட வீர்சிங்கும் அவனது நண்பரும், உள்ளூற நகைத்தபடியே, தாங்கள் சர்தாராக இருந்தும், எப்படி புத்திசாலித்தனமாக அடுத்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம் என்று தங்களைத் தானே மனதில் புகழ்ந்துகொண்டார்கள்.இரவு பத்து மணி ஆகிவிட்டது.

    சரி இனியும் ஏமாற்றக் கூடாது என்று நினைத்துத் திரும்பி கூடி நின்றிருந்தவர்களைப் பார்த்து------அங்கிருந்தவர்களிடம் , பார்த்தீர்களா? சர்தாரின் புத்திசாலித் தனத்தை, என்று அருமையான கேள்வி ஒன்றைக் கேட்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

    வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்ததும், பலத்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள்!!!!!!!!!
    விர்சிங்கும் அவனது நண்பரும் கூடியிருந்தவர்களைப் பார்த்ததும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?

    அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கூட்டம் கூடியிருந்ததா?
    அல்லது மிகவும் குறைவான ஆட்களே இருந்தார்களா?
    அல்லது அவர்கள் இருவரையும் கைது செய்ய காவலர்கள் நின்றிருந்தார்களா?
    வீர்சிங்கும் அவனது நண்பரும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?

  12. #4656
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    நண்பர்களே,
    புதிய புதிரை பதிவு செய்து 5 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை யாருமே விடை கொடுக்கவில்லையே???????????????????????

Page 388 of 391 FirstFirst ... 288 338 378 384 385 386 387 388 389 390 391 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •